பாத்ரூம்ல செல்போன் பயன்படுத்துபவரா ? எச்சரிக்கை தகவல்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைபேசிக்கு அடிமையாகி விட்டோம். டிவி இல்லாமல் கூட இருந்துவிடலாம் போல.. ஆனால் இந்த நவீன உலகத்தில் செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அதுவும் சிலர் பாத்ரூம் சென்றாலும் செல்போனை கொண்டு சென்று பயன்படுத்துவதுண்டு. இப்படி செய்வதால் உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துவதால் எந்த மாதிரி பிரச்சனைகள் ஏற்படும் குறித்து பார்க்கலாம்..
- பாத்ரூமில் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்தினால் கீழ் மலக்குடல் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- டாய்லெட்டில் அமர்ந்தவாறே போனில் பேசும்போது கிருமிகள் நம் வாய் மற்றும் மூக்கு வழியாக உள் செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் நமது உடல் பாதிக்கப்பட்டு தேவை இல்லாத வியாதிகள் நம்மை தாக்கும் அபாயம் அதிகம்.
- நீண்ட நேரம் கழிவறையில் நேரத்தை செலவிடுவதால் நமது செல்களை திசைத்திருப்பி தசைகளுக்கு சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக குடல், சிறுநீர்ப்பை போன்ற இடுப்பு தசைகளை வலுவிழக்க செய்கிறது.
- செல்போன்கள் அதிக நேரம் பயன்படுத்துவதால் உண்மையில் செவித்திறன் மற்றும் சிந்தனையில் இடையூறை ஏற்படுத்தி நமது சிந்திக்கும் திறனை அழித்துவிடுகிறது.