பிறந்த குழந்தையை செல்போனில் படம் பிடிக்கலாமா?ஆண் குழந்தைகளின் உடலுக்கு நல்லது அல்ல-மருத்துவர்கள்!!
இன்று நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். செல்போன் அத்தியாவசிய ஒரு பொருள் ஆகிவிட்டது. இந்த செல் போனில் இருக்கும் கேமரா சில நேரங்களில் ஆபத்தானதாகவும் மாறிவிடுகிறது.
ஒருவரை அவருக்கு தெரியாமலே கண்காணிக்கும் ஒரு கருவியாக உள்ளது என்ற கூற்றும் நெடுங்காலமாக உள்ளது.
இதற்கு அறிவியல் பூர்வமாக உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே சில ஹேக்கர்ஸ் இதெல்லாம் சாத்தியம்தான் என பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் பிறக்கும் குழந்தைகளை செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கும் சம்பவங்களும் தற்போது அதிகரித்து காணப்படுகின்றன.
இது ஆண் குழந்தைகளின் உடலுக்கு நல்லது அல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனினும் குழந்தைகளை பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன. அதன் மூலம் குழந்தைகளை படம் பிடிக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ குழந்தைகளிடமிருந்து செல்போன் சற்று தூரம் இருப்பதே நல்லது.