மக்களே டீ -யை சூடாக குடித்தால் புற்றுநோய் வரும் -எச்சரிக்கை தகவல்.

August 4, 2021 at 7:53 am
pc

இன்று பலரும் தேநீரை கொதிக்க கொதிக்க குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் அவ்வாறு குடிப்பவர்கள் பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும். இவ்வாறு சூடான டீ குடிப்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஒரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இன்டர்நெஷனல் ஜர்னல் ஆஃப் கேன்சர் என்ற புத்தகத்தில் 75 டிகிரி செல்சியஸிற்கு மேல் அடிக்கடி டீ குடித்தால் அது ஆபத்தானது என்று தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு நாளும் 700மிலி சூடான டீ குடிக்கும் 40லிருந்து 75 வயது வரை உள்ள 50,045 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 90% பேருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவு இதே போன்று காபி, ஹாட் சாக்லேட் மற்றும் சூடாகக் குடிக்கும் அனைத்து வித பானங்கள் குடிப்பவர்களுக்கும் வருவதாகச் சொல்கிறது.

இதற்காக நாம் தேநீர் அல்லது காபியை குடிக்கும் பழக்கத்தை விடவேண்டாம். தேநீரை அடுப்பிலிருந்து இறக்கிய 5 அல்லது 7 நிமிடங்களுக்கு பிறகு டீயை குடித்தால் இது போன்ற பாதிப்புகள் வராது. மேலும் இப்படி நாம் குடிப்பதனால் உணவு குழாய்களை நாம் பாதுகாக்க முடியும்.

உணவுக்குழாய் புற்றுநோய் இந்தியாவில் ஆறாவது இடத்தையும், உலக அளவில் எட்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. ஆண்களைவிட பெண்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது.

அதனால் டீ மட்டுமல்ல எந்த உணவாக இருந்தாலும் 4-5 நிமிடம் ஆற வைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ பழகுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website