M .B .B. S இறுதியாண்டு மாணவி விடுதி அறையில் தற்கொலை
எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் சஃப்தர்ஜங் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லியை சேர்ந்த மாணவி, விடுதியில் தங்கி, மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் செய்து வந்தார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையின் காவல் நிலையத்திற்கு மாணவி தற்கொலை செய்ததாக தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, விடுதி அறையின் மின்விசிறியில் தாவணியுடன் மாணவி தூக்கில் தொங்கியபடி இருந்ததாக துணை கமிஷனர் சி. மனோஜ் கூறினார்.
உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்த விடுதி அறையை சக மாணவர்கள் வலுக்கட்டாயமாக திறந்தனர். மாணவி உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாணவியின் அறையில் மன அழுத்தத்திற்கு பயன்படுத்தும் மருந்துகள் கண்டெடுக்கப்பட்டன.
நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை. சிறுமியின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.