இத குடிங்க கொரோனா செத்துடும்..,
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேட்டி சர்ச்சையை கிளப்பியுள்ளது.”
புதுவகை கொரோனா பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளது. அதேசமயம், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்தது.
இந்நிலையில், மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா வைரஸ் ஓடி ஒழிந்து, செத்து விடும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சரே இப்படி பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.