போயஸ் கார்டனில் ரெடியாகும் புதிய பங்களா.., சசிகலாவின் திட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வீடு அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் ஜெயலலிதா இருந்த வரையில் அங்கேயே தங்கி இருந்த சசிகலாவால் தற்போது அங்கு சென்று குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூர் சிறையில் இருந்து வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ளார்.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரில் உள்ள இடத்தில் சசிகலாவுக்காக புதிய பங்களாவை கட்டும் பணிகள் நடைபெற்றன. 13 கிரவுண்ட் கொண்ட இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் சசிகலாவுக்காக அந்த பங்களா கட்டப்பட்டது. வருமான வரித்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நோட்டீஸ் ஒட்டியப்போதும் பணிகள் தடைபடவில்லை.
சிறையில் இருந்து 27ஆம் தேதி விடுதலையான பின்னர் சசிகலா அங்கேயே தங்கும் வகையில் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் சசிகலா சிறிது காலம், தனது உறவினரான கிருஷ்ணப்ரியாவின் தியாகராயநகரில் உள்ள வீட்டில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த ஏற்பட்டால் போயஸ் கார்டன் பரபரப்பாக உள்ளது.