யார் மாஃபியா ? தரம் தாழ்ந்து போச்சு

January 17, 2021 at 4:11 pm
pc

2021 தேர்தலுக்காக அணைத்து கட்சிகளும் அனல் பறக்க பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது. சசிகலா வெளியாக உள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக தலைவர் டிடிவி.தினகரன் அதிரடியாக அதிமுகவை விமசித்து பேசியுள்ளார்.

அதில் தனது டிவிட்டரில், ‘ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு
பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை பதிவிடுகிறேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக இருந்த சோ தனது கடுமையான விமர்சனங்களை கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.

அவரை தனது ஆசானாகச் சொல்லிக்கொண்டு இருக்கும் குருமூர்த்தி கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தைக் காட்டுவதாக இருந்து வருகிறது.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? மாபியா யார்? என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்தானே தவிர கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை
கொண்டவர்கள் அல்ல. துக்ளக் விழாவில் அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டுப்பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்களெல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website