27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி..,
கடந்த 4 ஆண்டுகளாக சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலாவின் தண்டனைக் காலம் முடிந்து அவர் நாளை மறுநாள் 27ஆம் தேதி விடுதலை ஆகவுள்ளார்.
சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். COVID-19 தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சசிகலா விடுதலை தொடர்பாக ஆவணப் பணிகள் இன்றே முடிக்கப்படுவதாக தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.