தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை பற்றிய புத்தகத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிட OPS பெற்றுக்கொண்டார் !!
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த புத்தகத்தின் முதல் பிரதியை துணை முதலமைச்சர் OPS பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இந்த பிப்ரவரி 15 ஆம் தேதியோடு 3 ஆண்டுகள் கடந்து தொடர்கிறது, தற்போது நான்காவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. மக்கள் நலனுக்காக பல நலத்திட்டங்களை வழங்கிவருகிறது. தமிழக அரசின் 3 ஆண்டு கால சாதனைகள் விளக்கும் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிப்.,18 (திங்கள்கிழமை) நடைபெற்றது.
இந்த சாதனை புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, முதல் புத்தகத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள் அனைவரும், முதல்வருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சி அரசியல், அமமுக அழுத்தம் என பல போராட்டங்களுக்கு பிறகு நிலையாக 4வது வருடத்தில் அடியெடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.