அதிரடி மாற்றங்களை செய்யும் திமுக…! தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம். செல்வகணபதி பதிலாக வீரபாண்டி ராஜா நியமனம் !!

February 4, 2020 at 5:21 pm
pc

2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக பல அதிரடி மாற்றங்களை திமுக மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திமுகவிற்காக தேர்தல் பணிக்கான திட்டங்களை வகுத்து வருகிறார். சமீபத்தில் முக ஸ்டாலின் பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செலயல்படும் என அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். தற்போது திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த டி.எம். செல்வகணபதி பதிலாக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார் . திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் காந்தி செல்வன், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு. அவருக்கு பதில் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website