தமிழக அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் நிலை குறித்து திமுக எம்.பி கனிமொழி வேதனை !!

February 21, 2020 at 10:55 am
pc

சென்னை மாநகராட்சியில் உள்ள சில பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ”இஸ்கான்” என்னும் தனியார் அமைப்புடன் இணைந்து ”அட்சய பாத்திரம்” என்ற பெயரில் தமிழக அரசு சமீபத்தில் துவங்கியுள்ளது.

1955ஆம் ஆண்டு காமராஜர் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.
தமிழக அரசு மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் அரசே ஏற்று நடத்தலாமே? ஏன் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேள்வி பலதரப்பினரிடையே கேள்வி எழுந்துள்ளது. வருங்காலங்களில் மதிய உணவு திட்டம் கூட தனியார் மயமாகி விடும் போல என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு இதை பற்றி பேசியபோது, உணவு இல்லை என்ற காரணத்திற்காக பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. பல கருத்து வேறுபாடுகள் இந்த திட்டத்தை நிறுத்தாமல் தொடராது வருகின்றனர். ஜஸ்டிஸ் இயக்கம் தொடங்கி அதிமுக ஆட்சி வரை அனைத்து அரசுகளும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதிலும், மேம்படுத்துவதிலும் அக்கறை காட்டின. ஆனால் இன்று அதுகூட தனியார் மயமாக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website