ரஜினிகாந்த் எதுவும் தவறாக பேசவில்லை…., அவர் சரியாக தான் கூறினார் – H. ராஜா

February 6, 2020 at 11:26 pm
pc

CAA சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்து தெரிவித்த ரஜினிகாந்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை என பாராட்டியுள்ளார்.

சென்னை போயஸ் கார்னில் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. மேலும் அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காகாக தூண்டி விடுகிறார்கள். இந்த நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நான் குரல் கொடுப்பேன். அரசியல் கட்சிகள் மாணவர்களை பயன்படுத்த பார்ப்பார்கள் அதனால் மாணவர்கள் சிந்தித்து செயல்படவேண்டும்” என கூறினார்.

ரஜினிகாந்தின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஆதரவு தெரிவித்து பாராட்டினார், நடிகர் ரஜினிகாந்த் CAA பற்றி சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், ஏதேனும் ஒரு குடிமகனுக்கு கூட குடியுரிமை பறிக்கப்படபோகிறது என்பதை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம். எந்த குடிமகனுக்கு குடியுரிமை பறிக்கப்படாது என்றார்கள். CAA சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லை” என்றார்.

H. ராஜா ரஜினிகாந்தை ஆதரித்து பேசிய வீடியோ பதிவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் நண்பர் ரஜினிகாந்தின் கருத்து பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website