டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் !!

February 10, 2020 at 1:01 pm
pc

காவேரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதோடு வேளாண்மை சம்பந்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்படுத்தப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

பாமகவின் 10 அம்ச கோரிக்கையில் முதன்மையானதை நிறைவேற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியையும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்றும், இது குறித்து தாம் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்காலத்தைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website