தமிழர் பொங்கல் பண்டிகை வரலாறு
பொங்கல் என்பது தென்னிந்தியாவில் வாழும் மக்களின் பண்பாட்டுத் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நம் சங்க காலமான கி.மு 200-கி.மு 300 பார்த்து போகவேண்டும்.
வராலாற்று அறிஞர்கள் சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட “தை நீராடல்”என்றே நம்புகின்றனர்.அப்போதைய கொண்டாட்டம் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது. தை நீராடலின் ஒரு பகுதியாக அக்கால பெண்கள் “பாவைநோன்பு” என்ற விரதத்தைக் கடைப்பிடித்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது மழையும் வளமும் பெருக வேண்டி இளம்பெண்கள் வேண்டுவார்கள்.
பெண்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து குளித்து விடுவார்கள்.ஈர மண்ணில் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலையை வணங்கி வந்தார்கள்.இந்த விரதத்தை தை முதல் நாள் முடித்துக் கொள்வார்கள். பழமை பெற்ற இந்த சம்பிரதாயங்கள்,சடங்குகளும் பொஙஞ திருவிழாவிற்கு அடித்தளமாக அமைந்தது.
போகித் திருநாள்:
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்னும் நன்மொழிக்கு ஏற்ப போக்கிதிருநாள் விளங்ககிறது. பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் விடும் நாளாக எண்ணப்படுகிறது. போகியன்று வீட்டின் கூரையில் காப்புக்கட்டுவார்கள். அந்த நாளன்று தேவையற்றவை அகற்றப்பட்டு வீடு தூய்மையாக்கப்படும்.
இந்திர தேவன் மற்றும் கிருஷ்ண பகவான்:
போகி பற்றிய புராணக்கதை இது.தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் கும்பிட்டு வந்தனர்.இப்படி வணங்கி வருவது இந்திரனுக்கு தலைகணத்தை உண்டாக்கியது. கிருஷ்ணருக்கு இது தெரிய வந்ததும், இந்திரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பினார்.
கிருஷ்ணரும் ஆடு மேய்க்கும் நண்பர்களும் இன் இந்திர தேவனை வணங்க கூடாது என்று கூறினார்கள்.இந்திர தேவனுக்கு கோபம் வந்துவிட்டது.ஆகையால்,புயல் மழையை உண்டாக்கினார்.தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க கோவர்த்தன மலையை தன் சுண்டு விரலால் தூக்கி நின்றார் கிருஷ்ணர்.
3 நாட்கள் பெய்ததுமழை. தன் தவறை உணர்ந்தார் இந்திரன். கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார்.
அன்றுமுதல் இந்திரனை போற்றும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாட கிருஷ்ணர் இசைவு அளித்தார். இது இந்திரனின் இன்னொரு பெயரைக் கொண்டுள்ளது இந்த பண்டிகை.