அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட.., நெத்தியடி அடித்த முரளிதரன்

January 15, 2021 at 9:55 am
pc

கிரிக்கெட் உலகில் அசைக்கமுடியாத ஜாம்பவானாக இருந்தவர் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ஷேன் வார்னே இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் அனில் கும்ப்ளே உள்ளார்.

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் கால் பதிக்கவுள்ள நிலையில், முத்தையா முரளிதரன் இந்திய வீரர் அஸ்வினை பாராட்டி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

இப்போது உள்ள கிரிக்கெட் உலகில் பந்து வீச்சாளர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் அஸ்வினை மட்டுமே பார்க்கிறேன். அஸ்வினைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் யாரும் அப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவார்கள் என நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் கூட இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அவர் மீது அப்படி ஒரு நம்பிக்கையுமில்லை. இப்போது தான் அவர் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடினால் மட்டுமே அப்படி ஒரு இலக்கை அவரால் எட்ட முடியும்’ என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். அஷ்வினுக்கு முரளிதரன் கொடுத்த ஊக்கம் பெரிய அளவில் மன உளைச்சலை ஆஸ்திரேலியா வீரரான நாதன் லியோனுக்கு ஏற்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website