இவங்க விளையாடுவதே சரியில்லை – கடுப்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம்.

September 17, 2021 at 6:54 am
pc

இலங்கை கிரிக்கட் அணியின் வீர்ர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடினார்கள் என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் பதிலளித்துள்ளது.

அண்மையில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டுவன்ரி20 போட்டித் தொடரில் விளையாடிய சில வீரர்கள் வேண்டுமென்றே மோசமாக விளையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வீரர்கள் மோசமாக விளையாடினார்கள் என எந்தவொரு முறைப்பாடும் அணி முகாமைத்துவத்திடமிருந்து கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

இவ்வாறு போலியான செய்திகளை வெளியிடுவதனால் அணி வீரர்கள் பாதிக்கப்படக் கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கட் சுட்டிக்காட்டியுள்ளது.

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான டுவன்ரி20 போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்தது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website