“கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” -விராட் கோலி அறிவிப்பு!

September 16, 2021 at 7:46 pm
pc

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய டி20 தொடரை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே விராட் கோலியின் கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.எனினும் அவர் அந்த விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திடீரென்று டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியது:

கடந்த 8, 9 வருடங்களாக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறேன். 5, 6 வருடங்களாக கேப்டனாக உள்ளேன். இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழிநடத்த டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்.

இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோரிடம் தெரிவித்துவிட்டேன். இந்திய கிரிக்கெடுக்கும் இந்திய அணிக்கும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website