90 நிமிடங்களுக்குள் பந்துவீச வேண்டும் இல்லாட்டி 30 லட்சம் அபராதம் -கலங்கும் IPL கேப்டன்கள்..

April 1, 2021 at 7:54 am
pc

ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி கோலாகலமாக இந்த வருட IPL ஆரம்பமாக உள்ளது. ஆரம்பமே அதிர்ச்சி என்பதைப் போல எல்லா அணிகளுக்கும் அதன் ஹோம் ground மாற்றப்பட்டு புது மைதானத்தில் விளையாட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் ஹோம் groundயில் எளிமையாக வெற்றி பெரும் நிலை இனி எந்த அணிக்கும் கிடைக்கப்போவதில்லை.

தற்போது புது IPL விதிமுறைகள் வெளியாகி உள்ளன. அதாவது இனி வீரர்கள் ரன்கள் எடுக்க ஓடும்போது அந்த ஓட்டங்கள் இனி மூன்றாம் நடுவரால் கண்காணிக்கப்படும். அதுபோல இனி சர்ச்சைக்குரிய கேட்ச்கள் ஆட்டத்தில் இடம்பெற்றால் அதன் முடிவு நேரடியாக மூன்றாம் நடுவரால் மட்டுமே எடுக்கப்படும். ஏற்கனவே இதுபோன்ற கேட்ச்களில் இதற்கு முன்னர் நடுவர் சொன்ன தீர்ப்பை பொறுத்து மூன்றாம் நடுவர்கள் தீர்ப்பளிப்பார்கள். இந்த முடிவில் தற்போது சாப்ட் சிக்னல் நேரடியாக மூன்றாம் நடுவரால் தீர்ப்பளிக்கப்படுவதால் பேட்டிங் செய்யும் வீரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இனி எந்த அணியாக இருந்தாலும் 90 நிமிடங்களுக்குள் தங்கள் பந்துவீசும் பணியை முடித்துவிட வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்த அணியின் கேப்டனுக்கு போட்டியில் இருந்து அ பராத தொகையாக 12 லட்சம் ரூபாய் விதிக்கப்படும். மீண்டும் ஒரு போட்டியில் அதே தவறைஅந்த கேப்டன் தொடர்ந்தால் அடுத்த போட்டிக்கு 24 லட்சம் ரூபாயும், மூன்றாவது போட்டிக்கும் தொடர்ந்தால் 30 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். பார்க்கத் தானே போறீங்க இந்த காளியோட ஆட்டத்த என்று அனைத்து அணியினரும் கோப்பையை வெல்லும் முனைப்பில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website