மார்ச் 2 வருகை…, பல நாள் முகாம்… சென்னையின் சாலைகளில் இனி தோனியை பார்க்கலாம் !!
ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ள மார்ச் 2ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு தோனி வருகிறார். இந்த செய்தியை டோனியின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
2020 ஐபிஎல் சீசன் அடுத்த மாதம் மார்ங் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னை அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வாக்கெண்டே மைதானத்தில் நடைபெறவுள்ளது. தோனி இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறவில்லை என்றாலும் அவர பற்றிய செய்திகள் வந்தாலோ, வீடியோக்கள் அடிக்கடி ட்ரெண்டாகி வருகின்றது. சென்னை அணிவீரர்கள் மார்ச் 19ஆம் தேதியிலிருந்து பயிற்சி மேற்கொள்கின்றனர்
மற்ற சென்னை வீரர்கள் வருவதற்கு முன்பாகவே தோனி சென்னை வருகிறார். தோனி சம்பத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடந்த ஐபிஎல் சீசனில் தோனி சென்னையில் உள்ள பல இடங்களில் காணப்பட்டார். தற்போது பல நாட்கள் தங்க உள்ளதால் இந்த முறை அவரை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.