கூட்டம் குறையாத மாஸ்டர் திரையரங்குகள்.., ரசிகர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி செய்த சம்பவம்
மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் அதன் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் இணைந்து மெழுகுவர்த்திகளை ஏற்றி மாஸ்டர் படத்தை வரவேற்று உள்ளனர். மேலும் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு அவர்கள் நன்றியும் தெரிவித்து உள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதியே திரைக்கு வந்து விட்டது. தற்போது 10 நாட்களை கடந்து விட்டப் பின்னரும் ரசிகர்கள் ஆங்காங்கே இப்படத்தை வரவேற்று நன்றி தெரிவித்து வருகின்றனர்.