“ஒரு தாயின் ஏக்கம்! பேரறிவாளன் விடுதலை பற்றி பேசிய கமல்ஹாசன்!

January 19, 2021 at 9:19 am
pc

பிக்பாஸ் இறுதி நிகழ்வில் பேரறிவாளன் குறித்து கமல்ஹாசன் பேசியது தொடர்பில்
அற்புதம்மாள் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.”

பிக்பாஸின் இறுதி நிகழ்ச்சி இறுதியில் கமல்ஹாசன் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதில் பேசும் போது
ஒரு கையெழுத்திற்க்காக கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தாயார் என பேரறிவாளன் விடுதலை தொடர்பில் பேசினார். இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை…”

ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை…”பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே என பதிவிட்டுள்ளார். குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை…ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை…பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website