கோவையில் களை கட்டும் “ஜல்லிக்கட்டு”…….”வாடா… என்ன மோதி பாருடா”

February 23, 2020 at 2:44 pm
pc

கோவையில் தொடர்ந்து 3வது ஆண்டாக செட்டிப்பாளையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

முதல் காளையாக கோவை சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் காளை வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காளைகள், களத்தில் சீறி பாய்ந்தன.

வெற்றிப்பெறும் வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் கார், இருசக்கர வாகனங்கள், தங்க நாணயங்கள், பீரோ உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website