சூர்யாவை மிரட்டுவது கண்டனத்திற்குரியது !!

July 5, 2021 at 6:30 pm
pc

சமீபத்தில் நடைபெற்ற பாஜக-வின் இளைஞரணி கூட்டத்தில், சூர்யாவிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உண்மைக்கு புறம்பாக சூர்யா பேசிவருவதாக, பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் பேசினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

சிபி எம் கே.பாலகிருஷ்ணன்: பல்வேறு தரப்பு மக்கள், மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் சூர்யா மீது மட்டும் எதிர்ப்பை காட்டுவது கண்டனத்திற்குரியது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

“திரைக் கலைஞர் சூர்யா, தமிழகத்திற்கு நீட் விலக்கு குறித்தும், சினிமா சட்டத்தில் திருத்தம் குறித்தும் தனது விமர்சனங்களை நியாயமாக முன்வைக்கிறார். ஆனால் அவரை மிரட்டும் நோக்கத்துடன் பாஜகவினர் தீர்மானம் போட்டுள்ளனர். இந்தச் செயல் அப்பட்டமான கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website