தஞ்சை தேர் விபத்து: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!!

April 27, 2022 at 6:36 pm
pc

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்வகளின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

அப்பர் குருபூஜையையொட்டி சென்ற சப்பரத்தின் மீது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website