பிச்சை எடுத்தே அன்னதானத்திற்காக ரூ1 லட்சம் கொடுத்த 80 வயது பாட்டி…
இந்த உலகில் நல்லுள்ளம் கொண்டவர்கள் வெகு சிலரே இருக்கின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போகும் 80 வயது பாட்டியிடமிருந்து நாம் கற்க வேண்டியது நிறைய உள்ளது. அதை பற்றி முழுமையாக காணலாம் வாருங்கள்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபூர் தாலுகா, கங்கோலியை அடுத்த காச்சகோடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வத்தம்மா, இவரது கணவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதன்பின் சாப்பாட்டிற்கே வழியின்றி தவித்த அஸ்வத்தம்மா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல கோவில்கள் முன்பு பிச்சை எடுக்க துவங்கினார். அதன்படி அவர் உடுப்பி மற்றும் தெக்ஷிண கன்னடா மாவட்டங்களில் உள்ள கோவில்களில் பிச்சை எடுத்து வந்தார்.
இந்நிலையில் இவர் ஒவ்வொரு ஆண்டும் உடுப்பு ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிழாவின் போது அன்னதானத்திற்காக நன்கொடை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் பிச்சை எடுக்கும் பணத்தில் குறைந்த அளவு பணத்தை மட்டும் தன் செலவுக்காக எடுத்துக்கொண்டு மற்ற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வந்துள்ளார். அப்படியாக சேர்ந்த பணத்தை இவர் கோவில்களுக்கும், டிரஸ்ட்களுக்கும் நன்கொடையாக வழங்குவது வழக்கம்.
அப்படியாக இவர் சமீபத்தில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில் அன்னதானத்திற்காக ரூ1 லட்சம் பணத்தை வழங்கியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்