மிருகத்தனமாக நடந்து கொண்ட மாந்தர்கள்.., கண்கலங்க வைத்த சம்பவம்

January 23, 2021 at 5:13 pm
pc

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மசினகுடி பகுதியில் சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் பல மாதங்களாக சுற்றி வந்தது. வனத்துறையினர் அதற்கு பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து வழங்கி வந்தனர்.

உடல் நிலை குணமாகாத அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து அதன் காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தான் கடந்த 19- ம் தேதி இந்த காட்டு யானைக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மசினகுடி மாவனல்லா பகுதியில் அந்த யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து யானை மீது வீசியதும், இதில் பிரசாத் (வயது 36), ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர்
ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்தது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டுயானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் சம்மந்தப்பட்ட தனியார் விடுதிக்கு வனத்துறையினர் சீல் வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website