மோசமான வசூல் குடும்பமா இருக்குமோ ? பத்திரிகையில் மொய்க்கேட்டு இப்படியா ?

January 18, 2021 at 10:41 am
pc

பொதுவாக வீடு விசேஷத்தில் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வீட்டுக்காரர்களுக்கு தங்களால் முடிந்த பணம், நகை உள்ளிட்டவற்றை மொய்யாக வழங்குவார்கள். இதனை வைத்து மொத்த சுமையை குறைத்துக் கொள்ளலாம். மொய்விருந்து என்கிற பெயரிலும் இப்படி விசேஷங்களை நடத்தி உறவினர்களுக்கு
உணவுகள் வழங்கப்பட்டு மொய்கள் பெறப்படும். ஆனால் அண்மைக் காலமாகவே இந்த
நடைமுறை டிஜிட்டலுக்கு மாறி வருகிறது.

தமிழகத்தில் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும், பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில்டிஜிட்டல் முறையில் போன் பே, கூகுள் பே மூலம் மொபைல் ஸ்கேன் செய்து, அதன் மூலம் ஆன்லைனில் மொய் செய்யும் வகையிலான QR Code-உடன் கூடிய பத்திரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

திருமணத்துக்கு வந்தவர்கள் கூகுள் பே மூலம் மொய் செலுத்தினர். மொய் எழுதும்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், சில்லறை, மொய்க்கவர் உள்ளிட்டவை கிடைப்பது சிரமமாக இருப்பதாலும் இப்படி கூகுள் பே, போன் பே மூலமாக பணம் செலுத்தும் முறையை இவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இவர்களின் புதிய முயற்சி பலரை வியக்கவைத்துள்ளது. இப்படியெல்லாம் மொய் வாங்க முடியுமா என்ற கேள்விக்கும் விடை கொடுத்துள்ளது இந்த மதுரை கல்யாணம்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website