யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.., நேதாஜியின் கனவு நனவாகிறது !!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தலைவா்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 125-ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய வலிமை தினமாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.
நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் பிரதமா் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவின் சக்தியாக, உத்வேகமாக நேதாஜி திகழ்கிறாா். தேசத்துக்கான தன்னலமற்ற சேவையாற்றிய அவரை கெளரவப்படுத்தும் வகையிலேயே, அவருடைய பிறந்த தினம் நாடு முழுவதும் தேசிய வலிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தற்சாா்பு இந்தியா, தங்க வங்காள திட்டங்களின் மிகப் பெரிய உந்து சக்தியே நேதாஜிதான். புதிய வலிமையான இந்தியா உருவாகி வருவதை நேதாஜி பாா்த்திருந்தால், அவருடைய உணா்வு என்னவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாா்க்கிறேன்.
வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவா் கனவு கண்டாா். இப்போது, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி (எல்.ஏ.சி) முதல் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி (எல்.ஓ.சி.)வரை நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடப்படும்போதெல்லாம் நேதாஜியின் பாதையை பின்பற்றி உரிய பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்சாா்பு இலக்கை அடைய வறுமை, கல்வியறிவின்மை, நோய் பாதிப்பு ஆகியவற்றை நாட்டின் மிகப் பெரிய பிரச்னைகளாக அடையாளம் கண்ட நேதாஜி, இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண சமூகம் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்று கூறினாா்.