உலகையே திரும்பி பார்க்கவைத்த மகளின் கிறிஸ்துமஸ் பரிசு
டிசம்பர் மாதம் அரபிடதிலிருந்து உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது.கொரோனாவில் மீண்டு வரும் நிலையில் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாட
ஆர்வம் கொண்டுள்ளன. சொந்தங்களுக்கும் அன்பானவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கிறிஸ்துமஸை வரவேற்று வருகின்றனர்.”
இங்கிலாந்தைச் சேர்ந்த ரே லிட்டல் என்ற நபர் தன்னுடைய செல்ல மகளுக்காக பொம்மை ஒன்றை ஆர்டர் செய்தார்.
இந்திய ரூபாய் மதிப்பில் அந்த பொம்மை ரூ.50 ஆயிரத்துக்கு ஆர்டர் செய்யப்பட்டது. ஆனால் அந்த தந்தை பொம்மையின் அளவை சரியாக கவனிக்கவில்லை. ஆர்டர் செய்த பொம்மை வரும், வீட்டுக்குள் வைத்து விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மிகப்பெரிய பார்சல் வீட்டுக்கு வந்தது. அதனை
பார்த்ததும் லிட்டலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆச்சரியமும் அடைந்தனர்.
லிட்டல் ஆர்டர் செய்தது சின்ன பொம்மை அல்ல 35 அடி உயர பொம்மை. வீட்டை விடவும் பெரிய பொம்மையை வேறு வழியில்லாமல் வீட்டுக்கு வெளியே வைத்து கொண்டாடினார் லிட்டல். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் வைரலாக பரவ, பலரும் வந்து 35 அடி உயர பொம்மை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.”
வீட்டின் முன் கூட்டம் வர தொடங்கிவிட்டது வீட்டுக்கு வரும் கூட்டத்திடம், சமீபத்தில் உயிரிழந்த தன்னுடைய தந்தை நினைவாக தொண்டு நிறுவனத்துக்கு பணம் வசூலையும் லிட்டல் தொடங்கினார். கிட்டத்தட்ட 8000ஆயிரம் டாலருக்கு மேல் பணம் வசூலாகியுள்ளதால் லிட்டல் மகிழ்ச்சியில் உள்ளார். கிட்டத்தட்ட 50ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவர் வீட்டுக்கு வருகை தந்ததாக லிட்டல் தெரிவித்துள்ளார்.