“இந்தியன் 2” படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் திடீர் திருப்பம் !!
சென்னை பூந்தமல்லியை உள்ள நசரத்பேட்டையில் உள்ள EVP Film சிட்டி இந்தியன் 2 படப்பிடிப்பு தலத்தில் விபத்து ஏற்பட்டது. பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நரசத்பேட்டை போலீஸார், கிரேன் ஆபரேட்டரை வெள்ளிக்கிழமை 21 தேதி கைது செய்தனர்.
இந்த விபத்து தொடர்பாக இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசனுடன் போலீஸ் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த விபத்து தொடர்பான வழக்கை, நசரத்பேட்டை போலீஸாரிடமிருந்து மத்திய குற்ற பிரிவு போலீஸாருக்கு மாற்றி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று 21 தேதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை குற்ற பிரிவு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.