பாஜகவில், தனது சோதரியுடன் இணைந்தார் இந்திய பேட்மின்டன் வீரர் சாய்னா நேவால் !!

January 30, 2020 at 12:13 pm
pc

தெலங்கானாவில் உள்ள ஹைதெராபாத்தில் வசிக்கும் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பேட்மிண்டனில் பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை பெருமை சேர்த்திருக்குகிறார். இவர் பேட்மின்டன்-ல் 2015 ஆம் ஆண்டு உலக பேட்மின்டன் தரவரிசையில் முதல் இடத்தில இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின், ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜூனா விருது உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகளையும் சாய்னா பெற்றுள்ளார்.

29 வயதாகும் சாய்னா நேவால் நேற்று புதன்கிழமை டெல்லியில் தனது சகோதரியுடன் பாஜக அலுவலகத்தில் தேசிய செயலாளர் அருண்சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த ஆண்டு, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், காமன்வெல்த் விளையாட்டு பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பபிதா போகட் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியை கண்டு தான் பாஜகவில் இணைந்துள்ளதாக கூறினார்.

தெலங்கானாவில் ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு நெருக்கடி கொடுத்தது, தெலங்கானாவில் பாஜ.வை வளர்க்கவும் பிரபலங்களை பாஜ.வில் இணைக்கும் நடவடிக்கையாகவே சாய்னா சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website