கொரில்லாவிற்கும் பரவிய கொரோனா..,

January 13, 2021 at 8:25 pm
pc

உலகம் முழுவதும் இன்று வரை 9 கோடியே 14 லட்சத்தை தாண்டி இருக்கிறது. உயிரிழப்பு 20 லட்சத்தை எட்டியுள்ளது. இதுவரை மனிதர்களை மட்டுமே தாக்கிய கொரோனா பாதிப்பு கடந்த ஜுன் மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பூங்கா ஒன்றில் முதன் முதலாக புலிகளுக்கு ஏற்பட்டது

விலங்குகளிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை. ஆனால் மனிதர்களிடம் இருந்து கொரோனா நோய்த்தொற்று விலங்குகளை தாக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து பூங்கா மற்றும் கால்நடை பராமரிப்பு விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் சான்டீகோ நகரில் உள்ள சபாரி பூங்காவில் வாழும் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதிப்பு பூங்காவில் பணியாற்றிய ஊழியர்களிடம் இருந்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.

கொரோனா தாக்கத்தால் விலங்குகளுக்கு சுவாசக்கோளாறு, உடல் நலப்பாதிப்பு போன்ற சிறு பாதிப்புடன் இத்தொற்று முற்றுப் பெற்று விடுகிறது என தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website