கொரோனா அச்சுறுத்தலால் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடக்குமா..?அல்லது வேறு நாட்டிற்கு மாற்றப்படுமா ??
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் பல ஆசிய நாடுகளை தாக்கியுள்ளது. இதனால் டோக்கியோ வில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா நடக்காதா என கேள்விகள் எழுந்துள்ளது. கனடா நாட்டின் முன்னாள் நீச்சல் சாம்பியனும் இப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான டிக் பவுண்ட் டோக்யோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடப்பது கேள்விக்குறிதான் என சமீபத்தில் செய்தியாளர்களுக்குப பேட்டி கொடுத்துள்ளார்.
ஜப்பானில் இதுவரை 4 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன செய்திகள் வெளியாகியுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக போட்டிகள் காலதாமதமாக நடத்தப்படலாம் அல்லது வேறு நாட்டில் நடத்தப்படலாம் என்றும் கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் டோக்யோ 2020 என்பதை மையமாக வைத்து பல்வேறு விஷயங்கள் உள்ளது உணவு, பாதுகாப்பு, ஒலிம்பிக் கிராமம், தங்கும் விடுதிகள் என இது மிக பெரிய விஷயங்கள் உள்ளது. தற்போதைய நிலைமை விரைவில் நிலைமை சரியாகும், அனைவரும் டோக்கியோவில் இருப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வருடம் சீன வீரர்களுக்கு ஒலிம்பிக்ஸில் பங்கேற்க அனுமதி வழங்க மறுக்கப்படும் என பரவலாக பேசப்படுகிறது.