“ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ரூ.79 அபராதம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகம்”, மாணவர்களை பாதுகாக்க வினோதமான அபராதம் !!

January 16, 2020 at 8:30 pm
pc

பள்ளியில் படிக்கும் குழந்தைகளை பள்ளி முடிந்த பிறகு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லுவது வழக்கம். சில நேரத்தில் பெறோர்கள் பொறுப்பின்றி தாமதமாக வருபவர்கள் உண்டு. இதுபோன்ற பொறுப்பற்ற பெற்றோர்களுக்காக இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் வடமேற்கே உள்ள கிரேவ்ஸ்எண்டு என்னும் பகுதியில் ஹோலி டிரினிட்டி சர்ச் ஆப் இங்கிலாந்து நர்சரி பள்ளி நிர்வாகம் தங்களது குழந்தைகளை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு தாமதமாக அழைத்து செல்லும் பெற்றோர்களிடம் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு 1யூரோ (இந்திய மதிப்பில் 79 ரூபாய்) அபராதமாக விதித்துள்ளது. இதனால் பள்ளியில் வேலை புரியும் ஆசிரியர்கள் தாமதமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த திடீர் அபராததால் பெறோர்கள் அதிர்ச்சியடைதனர். இந்த விதியை பற்றி விளக்கம் அளித்த பள்ளி நிர்வாகம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இது போன்று செய்ததாக தெரிவித்தது. இதை அபராதத்தை தடுக்க பெற்றோர்கள் சீக்கிரம் வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்வார்கள் என பள்ளி நிர்வாகம் கூறினர்.

பெற்றோர் தரப்பில், நாங்கள் வேலைக்கு சென்று வரும் நேரமும் பள்ளி முடியும் நேரமும் ஒன்றாக இருப்பதால் தாமதம் ஆகுவதாக அவர்கள் பக்கம் நியாயத்தை முன்வைத்தனர். பள்ளி முடிந்து மாலை 4 மணி ஆகியும் பெற்றோர் வரவில்லை என்றால் சமூக சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு மாணவர்களை ஒப்படைக்கும் என நிர்வாகம் கூறியது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website