இந்தியாவிற்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப்-ஐ பிரதமர் மோடி 8வது முறையாக சந்திக்கிறார்… கடந்த 8 மாதத்தில் 5வது சந்திப்பு !!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். அமெரிக்கா அதிபரின் இந்த பயணத்தில் இந்தியாவுடனான பல ஒப்பந்தங்கள் கைழுத்தாக உள்ளது. இதில் குறிப்பாக பிரதமர் மோடியுடான இரு தரப்பு பேச்சு வார்த்தையில் அமெரிக்கா உதவியுடன் இந்தியாவில் அமையவிருக்கும் 6 அணு உலைகளுக்கான ஒப்பந்தம் மற்றும் உள் நாட்டு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை உட்பட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பயணம் குறித்து வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மோட்டேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை டொனால்ட் டிரம்ப் நாகரீத் அபிநந்தன் கமிட்டி (Citizen Felicitation Committee) ஏற்பாடு செய்துள்ளது. 24 ஆம் தேதி பிற்பகலில் அகமதாபாத்திற்கு வருகிறார் டிரம்ப். விமான நிலையத்திலிருந்து மோட்டேரா மைதானத்திற்கு செல்லும் வரை, வழி நெடுகிழும் 28 மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அமெரிக்க அதிபருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. நாட்டின் அனைத்து பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மைதானத்திற்குள் செல்வதற்கு முன்பு இந்திய தலைவர்கள் டிரம்பை வரவேற்று வாழ்த்துகின்றனர்.
மோட்டேரா மைதானத்தில் பல்வேறு காலை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற வரவேற்பு நிகழ்ச்சிகள் இதற்கு முன்பு வந்த அமெரிக்க அதிபர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.