ஈரான் – துருக்கி எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் !! கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி, 37 மேற்பட்டோர் காயம் !!
ஈரானில் நேற்று பிப்.,23 ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்ட்டர் அளவு கோளில் 5.7 என்ற அளவில் பதிவானது. ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈரான் – துருக்கி எல்லைப்பகுதியில் சுமார் 5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது என (EMSC) ஐரோப்பிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஈரானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கியின் சில பகுதிகளில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், தங்கள் நாட்டில் 9 பேர் உயிரிழந்ததாக 37 மேற்பட்டோர் காயம் அடைந்ததாக துருக்கி தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் 3 பேர் சிறுவர்கள் எனவும் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என மீட்புப்பணியினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.