ஈரான் – துருக்கி எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் !! கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி, 37 மேற்பட்டோர் காயம் !!

February 24, 2020 at 9:38 am
pc

ஈரானில் நேற்று பிப்.,23 ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்ட்டர் அளவு கோளில் 5.7 என்ற அளவில் பதிவானது. ஈரானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈரான் – துருக்கி எல்லைப்பகுதியில் சுமார் 5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது என (EMSC) ஐரோப்பிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஈரானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கியின் சில பகுதிகளில் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், தங்கள் நாட்டில் 9 பேர் உயிரிழந்ததாக 37 மேற்பட்டோர் காயம் அடைந்ததாக துருக்கி தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் 3 பேர் சிறுவர்கள் எனவும் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என மீட்புப்பணியினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீட்பு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 40 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website