Wow… சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் தேர்வுக்குழுவில் இயக்குனர் மணிரத்னம்

June 29, 2023 at 3:54 pm
pc

நடிகர் சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் விருதுகள் தேர்வுக்குழுவில் இயக்குனர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இயக்குனர் மணிரத்னம் தேர்வு

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவர் மவுனம் ராகம், நாயகன் பம்பாய், உயிரே உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 6 தேசிய விருதுகளும், 6 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளும், 3 பாலிவுட் பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குருவிற்கு உறுப்பினராக பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டது.

இதுவரை ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் 398 பேர் உறுப்பினர்கள். தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் ஆஸ்கர் விருது உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ‘ஆஸ்கர் விருதுகள்‘ தேர்வுக்குழுவுக்கு இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website