அவர் குறைவாக பேசி, அதிகமாக செயலாற்றியவர்! மன்மோகன் சிங் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக சேவையாற்றினார்.
தவெக தலைவர் விஜய் இரங்கல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.
அவர் இந்தியாவை முழுமையான அறிவுடனும், நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாக பேசினார், ஆனால் அதிகமாக செயலாற்றினார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கு ஈடு இணையற்றதோடு என்னென்றும் போற்றப்படும்.
இந்த கடினமான சூழ்நிலையில் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.