கள்ளக்குறிச்சி

17 வயது சிறுவனால் குழந்தை பெற்றெடுத்த 17 வயது சிறுமி ..!

Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இவ்வாறு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்த நிலையில், சிறுமி கருவுற்றிருக்கிறார். 

இதனிடையே கடந்த வாரம் சிறுமி தனது வீட்டில் இருந்த போது மயங்கி விழுந்ததால், அவரை மருத்துவமனையில் சேர்த்த போது பிரசவ வலி வந்து குழந்தை பிறந்தது. 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி குழந்தை பெற்றது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 
இது குறித்து தகவலறிந்த போலீசார், இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். மேலும் சிறுமி மற்றும் குழந்தை இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆடு மேய்க்க சென்ற அக்கா-தம்பி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சோகம்…!

Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரிய ஓடப்பன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் கூலித்தொழிலாளி. இவரது மகள் அனிஷா(13) மகன் சுரேஷ்(10) இருவரும் வீட்டின் அருகே ஆடு மேய்க்க சென்றுள்ளனர்.

அப்போது அருகில் உள்ள குளத்திற்கு சென்ற தம்பி சுரேஷ் எதிர் பாராதவிதமாக நீரில் மூழ்கி உள்ளார். பின்னர், அவரை காப்பாற்றுவதற்காக அக்கா அனிஷா குளத்துக்குள் இறங்கி உள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர். 
இதனை அறிந்த அப்பகுதியினர் சிறுவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள முத்தாண்டிகுப்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருணமான மூன்றே மாதத்தில் மனைவியை அடித்தே கொன்ற கணவன்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜிக்கும், மேனகாவுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், காதல் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று விஜயராஜ்.

தனது காதல் மனைவி மேனாகா மீது சந்தேகப்பட்டு, தொலைபேசியில் யாரிடம் அதிக நேரம் பேசுகிறாய் என்று கூறி, வீட்டில் இருந்த பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளார். இதில், மேனகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மணலூர்பேட்டை காவல் நிலையப் போலீசார் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயராஜியை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயராஜிக்கு ஏற்கனவே 2 மனைவி உள்ளனர். இவருடைய தொல்லை தாங்க முடியாமல், அவர்கள் இருவரும் பிரிந்து சென்று விட்டனர். இந்நிலையில், மேனகாவை மூன்றாவதாக திருமணம் செய்தார் விஜயராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் பெண் இவருடைய வாழாமல் பிரிந்து சென்றார் அதன் பிறகு மூன்றாவது மனைவி மேகனா என்ற பெண் மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார் மேகனா மீது அடிக்கடி சந்தேகம் ஏற்பட்டு தொலைபேசியில் நீ யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டவு அந்தப் பெண்ணிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு குடிபோதையில் அந்தப் பெண்ணை அடித்து கொலை செய்தார் மனைவி உள்ளனர்

மருமகன் பலியான அதிர்ச்சியில் மாமனார் பலி! – கோர விபத்தால் நேர்ந்த பரிதாபம்…

Quick Share

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் மாடூர் சுங்கச் சாவடியில் இருந்து எமப்பேர் நோக்கி பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபாலன் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது கள்ளக்குறிச்சி புறவழி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிர்திசையில் திருக்கோவிலூர் அடுத்த துறிஞ்சிபட்டை கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்த சண்முகம் ரஞ்சித் ராஜ் குமார் ஆகிய மூவரும் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலம் அழைத்துச் செல்லும் வழியில் சண்முகம் உயிரிழந்துவிட்டார். 

இதுகுறித்து சண்முகத்தின் மாமனார் சுப்ரமணியிடம் தெரிவிக்கப்பட்டது. சாலை விபத்தில் தனது மருமகன் உயிரிழந்ததை கேட்ட சுப்பிரமணி அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் மருமகன் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியில் மாமனாரும் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாண கோலத்தில் பெண் மரணம் – லாட்ஜில் இரவில் உடன் இருந்த கணவரின் தம்பி!

Quick Share

ஏற்காடு சுற்றுலா வந்த பெண்மணி மர்மமான முறையில் உயிரிழப்பு கொலையா தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் விஜய் (30) . இவர் தனது அண்ணன் பிரபு மனைவி மஞ்சு (26) இருவரும் ஏற்காடு சுற்றுலா வந்துள்ளனர்.

ஏற்காட்டிற்கு வந்தவர்கள் தனியார் தங்கும் விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து நேற்று இரவு தங்கி உள்ளனர். இருவரும் தங்கியிருந்த நிலையில் விஜய் இரவு மது அருந்திவிட்டு தனக்கு வரும் 23ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாகவும் திருமணத்திற்கு பின்னர் தங்களது நட்பை தொடர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மது போதையில் இருவரும் தூங்கி விட்டனர். திடீரென இரவு மூன்று மணியளவில் விஜய் கண்விழித்து பார்த்தபோது மஞ்சுவை காணவில்லை.

அதிர்ந்து போன விஜய் கழிவறையில் நீர் விழும் சத்தம் கேட்க மஞ்சு கழிவறைக்கு சென்று இருக்கலாம் என எண்ணிக்கொண்டு விட்டுவிட்டார். வெகுநேரமாகியும் மஞ்சு வராததால் கழிவறையின் கதவை உடைத்து பார்த்துள்ளார். அங்கு மஞ்சு நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதை தொடர்ந்து விஜய் மஞ்சுவை தூக்கிவந்து படுக்கையில் கிடத்தி துணிகளை போட்டுவிட்டு தண்ணீர் தெளித்தும் எழுந்திருக்கவே இல்லை எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாபதி மற்றும் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த மதன் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் அண்ணன் தம்பிகள். அண்ணன் பிரபு கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார் அப்போது ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருந்துள்ளனர். பிரபுவுக்கும் மஞ்சுவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன

தனிமை காரணத்தால் அண்ணி மஞ்சுவுக்கும் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. அண்ணன் ஊரில் இல்லாததால் நட்பு தொடர அது கள்ளகாதலாக மாறியது. இவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமானதால் இருவரும் உல்லாசமாக இருக்க அடிக்கடி ஏற்காடு வந்து உள்ளனர்.

கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய பிரபு தனது மனைவியுடன் கச்சராபாளையம் என்ற பகுதியில் தனிக்குடித்தனம் சென்று விட்டார்.

இந்நிலையில் விஜய்க்கு திருமணம் என்ற செய்தி கேட்டதும் மஞ்சு தான் எங்கே செல்வது என கேட்டு இருவருக்குள் நேற்றிரவு வாக்குவாதம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மஞ்சு தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.-

மகளின் தோழியை கடத்தி கற்பழித்த தொழிலாளி!வீட்டில் அடைத்து கொடுமை …

Quick Share

கருமத்தம்பட்டியில் மகளின் தோழியை கடத்தி கற்பழித்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை கருமத்தம்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

சிறுமியின் பெற்றோர் அவரை தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். கடந்த 21-ந் தேதி பெற்றோர் சிறுமியை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து மில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, மாயமாகி விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை வந்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமி குறித்து விசாரிக்க தொடங்கினர்.

அப்போது சிறுமியின் சொந்த ஊரை சேர்ந்த தேவேந்திரன்(38) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் சிறுமியுடன் எங்கு தங்கி உள்ளார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். அவர்களது உறவினர்கள் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் தேவேந்திரனின் செல்போன் எண்ணை வாங்கி அதன்மூலம் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

செல்போன் எண்ணின் டவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருப்பதை காண்பித்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் கண்ணூர் சென்று, வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் 2 பேரையும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பேய் ஓட்டிய சாமியாரால் பரபரப்பு!

Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கொட்டபுத்தூரில் அரசு உண்டு உறைவிட மலைவாழ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர்

நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த 10 மாணவிகளுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவிகள் கரியாலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் நேற்று காலையில் அவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர்.

பேய் ஓட்டிய சாமியார்

அந்த பள்ளியில் படித்த சில மாணவிகள் ஏற்கனவே இதுபோல் அடிக்கடி மயக்கம் அடைவதாகவும், சில மாணவிகள் தன்னைத்தானே கைகளை கிழித்துக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து பேயை விரட்டுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் மாணவிகளுக்கு விபூதியை தலையில் போட்டு, பேய் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கிண்டல் செய்யும் இளைஞர்கள்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறுகையில், பள்ளிக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை. மேலும் விடுதிகளிலும் இரவு நேரங்களில் ஆசிரியர்கள் சரியாக தங்குவதில்லை.

இதனால் சில இளைஞர்கள், விடுதியில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மாணவிகளை கிண்டல் செய்கின்றனர். இதனால் அவமானம் தாங்காமல் மாணவிகள் கைகளை கிழித்துக்கொள்கின்றனர். எனவே விடுதிகளில் ஆசிாியர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்

கணவனை இழந்த பெண்ணுடன் காதல்! வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: சில நாட்களில...

Quick Share

கணவனை இழந்த பெண்ணுடன் காதல்! வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணுடன் திருமணம்: இளைஞனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இளைஞனுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், அவருக்கு திருமணம் ஆன செய்தி அறிந்து கூலிப்படை ஏவி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பணியாற்றி வந்த போது, அங்கு நஜுரா பானு என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவனை இழந்த நஜூரா பானுவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் ஆகியதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் ரியாஸ் அகமதுவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரியாஸ் அகமது சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு பெற்றோர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த தகவலை எப்படியோ அறிந்த நஜுரா பானு, கடும் ஆத்திரத்தில் ரியாஸ் அகமதுவை தொடர்பு கொண்டு உன்னை தீர்த்து கட்டுவிடுகிறேன் பார் என்று மிரட்டியுள்ளார்.

இதனால், திருமணம் முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த ரியாஸ் அகமது, சில வாரங்களுக்கு பின் தெருவில் இருக்கும் டீ கடை ஒன்றிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் ஹெல்மட்டுடன் இருந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ரியாஸ் அகமது வந்தவுடன், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கண்மூடித்தனமான வெட்டினர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரியாஸ் அலறி துடிக்க, இந்த சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரைக் கண்டு கொலையாளிகள் இரு சக்கர வாகனத்தில் அரிவாளை காட்டி மிரட்டியபடியே ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தப்பிச் சென்ற நபர்களையும், சென்னையில் இருக்கும் நஜூரா பானுவைத் தேடி வருகின்றனர்.




You cannot copy content of this Website