தேனி

திருமண ஒரு மாதத்தில் குளிக்க சென்ற புதுமண தம்பதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயி...

Quick Share

விருந்துக்கு சென்ற இடத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சோகம் 

புதுமாப்பிள்ளையை காப்பாற்ற சென்ற அவரது மனைவி உட்பட மூவர் பலியான பரிதாபம் 

தமிழக மாவட்டம் தேனியில் ஆற்றில் குளிக்க சென்ற புதுமண தம்பதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே பொம்மை கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(30). இவருக்கும் காவியா(20) என்ற பெண்ணிற்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து போடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு புதுமணத் தம்பதி விருந்துக்காக சென்றுள்ளது. அங்குள்ள பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிக்க ராஜா, காவியா இருவரும் சஞ்சய் என்பவருடன் சென்றுள்ளனர். 

அப்போது குளித்துக் கொண்டிருந்த ராஜா நீர் வரத்து திடீரென அதிகரித்ததால் சுழலில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்ட சஞ்சய், காவியா இருவரும் ராஜாவை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களும் சுழலில் சிக்கியதால் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், நீரில் மூழ்கி புதுமணத்தம்பதி மற்றும் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் விருந்துக்கு சென்ற புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

பிஞ்சு குழந்தையுடன் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட பெண்.. அதிர்ச்சி ச...

Quick Share

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி. இங்கு தெற்கு ராஜ வீதியில் கூலி தொழிலாளி நல்லுசாமி என்பவர் வசித்து வருகிறார். திருமணம் ஆகி இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், 8 வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். நல்லுசாமி மனைவி, குழந்தையுடன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரரும் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். நல்லுசாமி

இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் நல்லுச்சாமியின் மனைவி முத்துலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டு அருகில் இருந்த தனது எட்டு வயது பெண் குழந்தையையும் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

இதனால் இருவரும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உள்ளே சென்று பார்த்த போது இருவரும் முற்றிலும் எரிந்து உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் மரணத்தில் மர்மம் உள்ளதாக முத்துலட்சுமியின் வீட்டார் புகார் கொடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் பல்வேறு கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வரதட்சணை கேட்டு மருமகள், பேரன் மீது தீ வைத்த மாமனார்… பேரன் பலி – அதிர வைத்த காரணம்!

Quick Share

உத்தமபாளையம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அருண்பாண்டியன்(29). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த சிவப்பிரியா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாகித்(2) என்ற ஆண்குழந்தை உள்ளது. மகன் காதல் திருமணம் செய்ததால் தனது மருமகளிடமிருந்து வரதட்சணை கிடைக்கவில்லை என்று அருண்பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சிவப்பிரியா இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில நர்சாக வேலை பார்த்து வந்தார். வரதட்சணை கேட்டு மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள் மற்றும் நாத்தனார் கனிமொழி ஆகியோர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

நேற்றிரவு இதுதொடர்பாக மாமனார் பெரியகருப்பனுக்கும், சிவப்பிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் தனது மருமகள் மற்றும் பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் மகனை தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிவப்பிரியாவிடம் தேனி மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தன்மீதும், தனது மகன் மீதும் பெட்ரோல் ஊற்றி மாமனார் எரித்ததாகவும் கூறினார். இதனைதொடர்ந்து ராயப்பன்பட்டி போலீசார் அருண்பாண்டியன் உள்பட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து பெரியகருப்பனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்

3.50 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை கொடுத்த கிராம மக்கள் ..!

Quick Share

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு பொருட்கள் ஊர் பொதுமக்களின் சார்பாக கல்விச் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

சீர்வரிசையில் மாணவர்களுக்கு தேவையான ‌நோட்டு புத்தகங்கள், பிளாஸ்டிக் இருக்கைகள்,மேஜைகள், மற்றும் எழுதும்பொருட்கள், பள்ளிக்கு தேவையான மின்விசிறி, மின்விளக்கு சாதனங்கள்,பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஊர்மக்கள் விஷேகங்களுக்கு சீர் கொண்டு செல்வதை போல ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளியின் நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஏலச்சீட்டு நடத்தி வந்த பெண்ணின் கழுத்து மார்பகங்களை அறுத்து கொலை செய்த வாலிபர் !

Quick Share

தேனி அருகே ஏலச்‌ சீட்டு நடத்தி வந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வினோபாஜி காலனியை சேர்ந்தவர் பவுன் தாய் (வயது 55). இவரது‌ கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இருவரும்‌ வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். பவுன் தாய் ஏலச் சீட்டு நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபு (30). இவர் பவுன் தாயிடம் ஒரு லட்சம் சீட்டு போட்டுள்ளார். சீட்டு பணத்தை வாங்கி கொண்ட அவர் பணத்தை திருப்பி கட்டவில்லை.

இந்நிலையில் கடந்த வாரம் பவுன் தாய் பிரபுவிடம் பணத்தை தருமாறு கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவு குடிபோதையில் பவுன் தாய் வீட்டுக்கு சென்ற பிரபு அவரிடம் தகராறு செய்துள்ளார். தீடீரென அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பவுன் தாயின் கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பவுன் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்த கையோடு பிரபு போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜவுளிக்கடையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர் !!

Quick Share

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜவுளிக்கடையில் பெண் பலாத்காரம் செய்து தலைமறைவான தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி – மதுரை சாலையில் பங்களாமேடு அருகே பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினை மாரியப்பன் மகன் முருகன் (வயது 32) நடத்தி வருகிறார்.

பெரியகுளம் அருகே உள்ள டி. காமக்காபட்டி கிராமத்தை சேர்ந்த சின்ன கருப்பன் மகள் மேனகா (29). இவர் எம்.ஏ. ஆங்கில பட்டதாரி. மேலும் டிசைனர் ஸ்டுடியோ மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் முருகனுடன் மேனகாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதனைஅடுத்து மேனகாவை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து, ஏமாற்றி, முருகன் ஜவுளி கடைக்குள் உள்ள ஒரு அறையிலேயே வைத்து பாலியல் உறவு கொண்டதாகவும்,அதன் பின் முருகன் தங்கியுள்ள தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வைத்து பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி முருகன் அவரது மேனேஜர் வினோத்தை சாட்சியாக வைத்து மேனகா கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இதன் பின்னர் மேனகாவை சந்திப்பதை தவிர்ப்பதற்காக முருகன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துக் கொண்டார்.

மேனகா முருகனை தொடர்பு கொண்டு விசாரித்தபோது தான் சின்னமனூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அமெரிக்காவில் செட்டில் ஆக போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் உன்னை திருமணம் செய்தது ஒரு நாடகம் என்று கூறியதோடு இனிமேலும் தொந்தரவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக மேனகா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தொழிலதிபர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் தன்னை தேடி வருவதால் வேறு வழியின்றி தொழிலதிபர் முருகன் தேனி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து தேனி அனைத்து மகளிர் போலீசார் முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வாலிபர் கைது!

Quick Share

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கோபிநாதன் (வயது 23), தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார். அப்போது அவருக்கு அதே கல்லூரியில் படித்த கோவையை சேர்ந்த ஒரு 22 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவரும் பிரிந்து சென்றனர். பின் அடிக்கடி இருவரும் வீடியோ கால் மூலம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதல் ஜோடி இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. 
இதனால் சில நாட்கள் இருவரும் ஒருவரிடம், ஒருவர் பேசாமல் இருந்து உள்ளனர். இதனிடையே கோபிநாதன், அந்த இளம்பெண்ணிடம் தொடர்ந்து தன்னுடன் பேச வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. 
மேலும் தன்னுடன் பேச வில்லை என்றால் அந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக தெரிவித்து உள்ளார். இருப்பினும் அந்த இளம்பெண் பயப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கோபிநாதன், அந்த இளம்பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாதனை கைது செய்து, கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசையா இருக்கு.. வர்றீங்களா? ஆபாச மெசேஜ் அனுப்பியவருக்கு தரமான சம்பவம்

Quick Share

தேனி மாவட்டம் பத்ரகாளிபுரத்தைச் சேந்தவர் ராஜேஸ்வரி. கணவர் மற்றும் இரண்டு மகன்கன்களுடன் வசித்து வரும் இவரை, திண்டுக்கல்லைச் சேர்ந்த இவரது தோழி ஒருவர், அணுகியுள்ளார். அப்போது அந்த தோழி, தேனியைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் தனக்கு ஃபேஸ்புக் வழியாக ஆபாச மெஸ்ஸேஜ் செய்து தொல்லை
கொடுப்பதாக வந்து ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பு தான், ஃபேஸ்புக்கில் தனக்கு தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை துணிச்சலாக ராஜேஸ்வரி மிக லாவகமாக போலீசாரிடம் பிடித்துக்
கொடுத்துள்ளார்.

தனக்கு facebook-ல் ஆபாச புகைப்படத்தை அனுப்பி தொல்லை கொடுக்கும் இளைஞர் பற்றி ராஜேரிவரியிடம் அந்த திண்டுக்கல் தோழி கூறியுள்ளார்.தோழியின் பிரச்சனையை தீர்த்துவைக்க களமிறங்கிய இராஜேஸ்வரி, சம்மந்தப்பட்ட பிரச்சனைக்குரிய அந்த இளைஞரின் ஆர்டிஸ் பாண்டி என்கிற முகநூல் ஐடிக்கு மெசேஜ்
அனுப்பியுள்ளார்.

அந்த இளைஞரும் வழிந்துகொண்டே தனது பாணியில் ஆபாச மெசேஜ்களை ராஜேஸ்வரிக்கு அனுப்ப, ராஜேஸ்வரியோ அந்த இளைஞரை நேரில் பார்க்க வேண்டும் என மெசேஜ் அனுப்பி தன் ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். ராஜேஸ்வரியை சந்திக்க வந்த அந்த இளைஞரை கையும் களவுமாக, தனது கணவர், தாயார் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ராஜேஸ்வரி பிடித்துள்ளார். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்’ என அனைவரது காலிலும் விழுந்து கதறியுள்ளார்.

செம்ம அடி கொடுத்ததில் இளைஞர் தேனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அத்துடன் அவருடைய செல்போனை பரிசோதித்து பார்த்தபோது அவர் முகநூல் வழியாக பல பெண்களுக்கு இப்படி ஆபாச படங்கள் அனுப்பி கைவரியைசைக் காட்டுவதையே வேலையாகக் கொண்டு வந்துள்ளார். ஆனால், அவரை போலீஸில் ஒப்படைக்காமல், தர்ம அடியுடன் விட்டுவிட்டனர். எனினும் ராஜேஸ்வரியின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மனைவியின் கள்ள காதலை கண்டுபிடித்த கணவர்..,

Quick Share

தமிழகத்தில் தேனி மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்காளை. இவர் கோட்டூர் அருகிலுள்ள தர்மாபுரியைச் சேர்ந்த கலையரசியை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கட்டட வேலைகளை பார்த்துவந்தனர்.

கலையரசி மேலப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சேதுபதியுடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார். இது முத்துக்காளைக்கு தெரியவர, இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கணவன் மனைவி இருவரும் தர்மாபுரியில் உள்ள கலையரசியின் தாயார் விட்டுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்றனர். நவம்பர் 2-ஆம் தேதி, முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொலைபேசியின்
மூலம் அழைத்து, மறுநாள் வீட்டுக்கு வருவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், இரு தினங்களாக அவர் ஊருக்கு வராததையடுத்து தேடிப்பார்த்த ஈஸ்வரன், நவம்பர் 5-ஆம் தேதி கலையரசியை அழைத்துக்கொண்டு வீரபாண்டி காவல் நிலையத்தில் தனது சகோதரனைக் காணவில்லை என புகார் அளித்தார். நவம்பர் 7-ஆம் தேதி மேலப்பட்டி செல்லும் வழியில் காமாட்சிபுரம் தனியார் கிணற்றில் அழுகிய நிலையில் முத்துக்காளை சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் கலையரசியிடம் விசாரித்தபோது உண்மை வெளியே வந்தது. கலையரசி கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் கணவனைதீர்த்துக்கட்டிவிடலாம் என‌ முடிவுசெய்து தனது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பன் கணேசன் உதவியுடன் கனவனை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார். கொலை சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டதையடுத்து, சேதுபதி மற்றும் கணேசன் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திட்டம் போட்டு கணவனை கொன்ற கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார். அதன்படி, நீதிமன்ற காவலில் இருந்த கலையரசியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதையடுத்து, கலையரசி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கல்யாணம் செய்துகொண்ட Homosex காதலன்.., வெறியில் முதியவரை செய்த இளைஞர் !!

Quick Share

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான முதியவர் பொன்ராம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். வீட்டில் இறந்த நிலையில் அவரது ஆடை கலைந்திருந்ததால் சந்தேகமடைந்த மகள் மாரியம்மாள், தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதில் முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் முதியவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வோர் பற்றி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்
தொழிலாளி 26 வயதான அருண்குமார் சிக்கினார்.

போலீசார் விசாரித்தபோது தான்தான் முதியவரைக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அருண்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களாக இருந்தனர். அவர்கள் முதியவரின் வீட்டருகில் அடிக்கடி தனிமையில் இருப்பது வழக்கம். நண்பருக்குத் திருமணமான நிலையில் அருண்குமார் தவித்து
வந்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு இரவில் மதுபோதையில், முதியவர் வீட்டுப் பக்கம் சென்ற அருண்குமார், முதியவரிடம் தவறாக நடக்க முயன்றார். முதியவர் பொன்ராம் அப்போது சத்தம்போட்டுள்ளார். பயத்தில் அவரது கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்துள்ளார் அருண்குமார். இதையடுத்து அருண்குமார் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்படி ஓரின சேர்க்கைகளின் கொடூர கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவனுக்கு சாகும் வரை தூக்கு

Quick Share

தேனி மாவட்டம், சின்னமனூரை அடுத்துள்ள காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்வரின் மகன் சுரேஷ் என்பவர் கற்பகவள்ளி (19) கற்பகவள்ளிக்கு 14 வயதானபோதே சுரேஷ் இவரை திருமணம் செய்தார், சுரேஷ் கற்பகவள்ளி தம்பதிக்கு திவ்யசுந்தரி, மற்றும் சுந்தரி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், 2015ல் சம்பவம் நடந்த போது கற்பகவள்ளி மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார், கற்பகவள்ளி மீது சந்தேகப்பட்ட சுரேஷ் அவருக்கு பல கொடுமைகளை செய்து வந்துள்ளார், இதை தொடர்ந்து கடந்த 2015 ஜூன் 21ஆம் தேதி சுரேஷ் கற்பகவள்ளியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார்.

இதையடுத்து அவரை கடுமையாக தாக்கிய சுரேஷ் கற்பகவள்ளியின் தாலியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார், அதன் பின்பு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கற்பகவள்ளி தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடியுள்ளார், கற்பகவள்ளி இறந்ததை உறுதி செய்த மருத்தவர்கள் பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், பிரோத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கற்பகவள்ளியின் வயிற்று பகுதியில் பலமாக அடித்தில் அவரின் கருவும் கலைந்தது. இதை தொடர்ந்து சுரேஷின் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு தேனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிருபணமாகியது, வழக்கு விசாரனை முடிவடைந்த நிலையில் நீதிபதி அப்துல் காதர் இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார், அதில் சுரேஷுக்கு இந்திய தண்டனைச் சட்டங்கள் 302 மற்றும் 316-ன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது,. 302-வது சட்டப்பிரிவின் கீழ் சாகும் வரை தூக்கிலிடட வேண்டும். 316 சட்டப்பிரிவின் கீழ் 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.




You cannot copy content of this Website