உலகம்

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம்: பராக் ஒபாமா!

Quick Share

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். “செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்பதற்கான முனைப்பைவிட, மனிதகுலம் வாழத்தக்கதாக பூமியை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அணுசக்தி யுத்தம் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவைக்கு பின்னரும், செவ்வாய் கிரகத்தை விட சிறப்பான வாழிடத்தை இந்த பூமி நமக்கு வழங்கக் காத்திருக்கும்’ என்றும் கூறியுள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கூடிய ’பவர் எர்த்’ உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒபாமா, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான உலகின் அறைகூவல்களை புறக்கணிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இருந்தபோது, 2015 பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் பராக் ஒபாமாவின் பாரிஸ் உரை முக்கியத்துவம் பெற்றுள்ளது, “பல நாடுகளும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை கொண்டு செல்லக்கூடிய விண்கலன்களை உருவாக்கி வருகின்றனர்.

செவ்வாயை பூமியின் காலனியாக மாற்ற முயல்கிறார்களாம். பூமியின் சுற்றுச்சூழல் மிகவும் சீரழிந்து, அது வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்பதால், செவ்வாய் கிரகத்தின் காலனித்துவ திட்டத்தைப் பற்றி பலர் பேசுவதை கேட்கிறேன்.

அப்போதெல்லாம் அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். ஒரு அணு ஆயுதப் போருக்குப் பிறகும், பூமி செவ்வாய் கிரகத்தைவிட வாழத் தகுதி மிக்கதாகவே இருக்கும்.

காலநிலை மாற்றத்திலிருந்து நாம் மீள எதுவும் செய்யாவிட்டாலும், பூமியில் ஒக்ஸிசன் மிச்சமிருக்கும். ஆனால் செவ்வாய் கிரகத்தில் அது சாத்தியமல்ல. எனவே, செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட பூமியை கவனியுங்கள் என்கிறேன்.

நாம் இந்த பூமியில் வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளோம். மேலும் இந்த பூமியை பாதுகாத்து நாம் வாழக்கூடிய வகையில் வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.’’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நடப்பு ஜனாதிபதியான ஜோ பைடன், அடுத்த அதிபர் தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்க இருக்கிறார். ஆனால் கட்சியின் அதிருப்தியாளர்கள், பைடனுக்கு மாற்றாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிக்செல் ஒபாமா போட்டியிட வேண்டும் என்று முன்மொழிவதன் மத்தியில் பராக் ஒபாமாவின் பாரிஸ் உரை கவனம் பெற்றுள்ளது.

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு!

Quick Share

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது.

2021இல் உலகில் 43 விழுக்காட்டினர், அதாவது 3.4 பில்லியனுக்கும் அதிகமானோர் நரம்பியல் பிரச்சினையைச் சந்தித்திருக்கின்றனர்.

இது நிபுணர்களின் ஊகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Institute for Health Metrics and Evaluation (IHME) அமைப்பு வழிநடத்திய ஆய்வில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் 59 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் உலக மக்கள்தொகை விரைவாக அதிகரிப்பதும் மூத்தோர் எண்ணிக்கை கூடுவதும் இதற்கு முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றது.

ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?

Quick Share

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.

ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன. தற்போது அங்கு வெறும் 40 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

இந்நிலையில் கோடை காலத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பிரிட்டன் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தை விட சுமார் 40% அதிகமாகும். அதுமட்டுமன்றி இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்படும்.

அதன்படி மொத்தமாக ஒரு மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும். இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும்.

இந்த தீவில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி கடலோர பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும். வெளியாட்களுக்கு மட்டுமே இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

இங்கு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர்.

அந்த பாடசாலையில் மொத்தம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட 5 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் 2 மாணவர்கள் முன்பள்ளி வகுப்பில் உள்ளனர். அவர்களின் வயது வெறும் 4 மட்டுமே.

இந்த பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 62 லட்சம் ஊதியம் வழங்கப்படும். இத்துடன் சுமார் ரூ.6 லட்சம் உதவித்தொகையும் வழங்கப்படும்.

வாழ்நாளில் ரயிலையே பார்த்திராத 27 நாடுகள்!

Quick Share

ரயில்வே பழமையான போக்குவரத்து சாதனமாக கருதப்படுகிறது. இது கிறிஸ்துவுக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. முன்பு இது சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் நீராவி இயந்திரம் வந்த பிறகு, வணிக இரயில்வே தொடங்கியது. இதனால், மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வசதியாக இருந்தது.

இன்று, உலகின் பெரும்பாலான நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய இரயில் வலையமைப்பை அமெரிக்கா கொண்டுள்ளது, ஆனால் அதிவேக ரயில்களின் அடிப்படையில் சீனா முன்னேறியுள்ளது.

ரயில் நெட்வொர்க்கைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் தினமும் சுமார் 11,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன மற்றும் கோடிக்கணக்கான மக்கள் அங்கு பயணிக்கின்றனர். ரயில்வே இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் இன்றும் உலக வரைபடத்தில் இன்னும் ரயில்வே நெட்வொர்க் இல்லாத பல நாடுகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த நாடுகளில் இந்தியாவின் அண்டை நாடான பூட்டானும் அடங்கும். ஆனால், இப்போது இந்தியா அங்கு ரயில் பாதை அமைக்கிறது. 57 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை 2026-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் நெட்வொர்க் இல்லாத பெரும்பாலான நாடுகள் மிகச் சிறிய மற்றும் தீவு நாடுகளாகும். உதாரணமாக, Andorra உலகின் 11வது சிறிய நாடு.

அதேபோன்று, உலக வரைபடத்தில் தோன்றிய புதிய நாடான East Timor-க்கும் ரயில்வே நெட்வொர்க் இல்லை. இருப்பினும், இப்போது அங்கு ரயில் வலையமைப்பை உருவாக்குவது குறித்து பேசப்படுகிறது.

மேற்கு ஆபிரிக்க நாடான Guinea-Bissau-வுக்கும் ரயில் நெட்வொர்க் இல்லை. வளைகுடா நாடான Kuwait-யிலும் ரயில் நெட்வொர்க் இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது அங்கு பல ரயில்வே திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

Malta மற்றும் Cyprus போன்ற நாடுகள் நஷ்டம் காரணமாக ரயில் நெட்வொர்க்குகளை மூடிவிட்டன.

மேலும், Iceland போன்ற பல நாடுகளில், கடினமான புவியியல் நிலைமைகள் காரணமாக ரயில் நெட்வொர்க்குகளை உருவாக்க முடியவில்லை.

அன்டோரா, பூட்டான், சைப்ரஸ், கிழக்கு திமோர், கினியா-பிசாவ், ஐஸ்லாந்து, குவைத், லிபியா, மக்காவ், மால்டா, மார்ஷல் தீவுகள், மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, நைஜர், ஓமன், பப்புவா நியூ கினியா, கத்தார், ருவாண்டா சான் மரினோ, சாலமன் தீவுகள், சோமாலியா, சுரினாம், டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துவாலு, வனுவாட்டு மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் ரயில் நெட்வொர்க் இல்லாத நாடுகளில் அடங்கும். இந்த நாடுகளில் பெரும்பாலானவை சிறிய தீவு நாடுகள்.

கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகியவை உலகின் பணக்கார நாடுகளில் உள்ளன. அங்கு பளபளக்கும் சாலைகள் இருப்பதால் ரயில் பாதையின் தேவையை அவர்கள் உணரவில்லை. இருப்பினும், 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை மனதில் கொண்டு கத்தாரில் மெட்ரோ நெட்வொர்க் கட்டப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பாரிய ரயில் நெட்வொர்க் அமெரிக்காவில் உள்ளது. இந்த நாட்டில் 148,553 கிமீ ரயில் பாதைகள் உள்ளன. சீனாவில் ரயில் நெட்வொர்க் 109,767 கி.மீ. இதற்குப் பிறகு ரஷ்யா. இந்த நாட்டில் உள்ள ரயில் பாதைகளின் நீளம் 68,103 கி.மீ.

கனடாவில் இது 48,150 கி.மீ. இதைத் தொடர்ந்து ஜேர்மனி, பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வருகின்றன. நவீன இரயில்வேயின் தாய் பிரிட்டனில் 16,179 கிமீ ரயில் பாதைகள் உள்ளன.

பாகிஸ்தானில் உள்ள ரயில் பாதைகளின் நீளம் 7,791 கி.மீ. வெனிசுலாவில் இரயில் வலையமைப்பு 336 கிமீ ஆகும், அதே சமயம் UAE 279 பாதை கிமீ, லக்சம்பர்க் 271 கிமீ மற்றும் ஹாங்காங்கில் 230 கிமீ உள்ளது.

உலக பாரம்பரிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ!

Quick Share

அர்ஜென்டினாவின் Los Alerces தேசிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக கிட்டத்தட்ட 600 ஹெக்டர் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் அமைந்துள்ள the Los Alerces தேசிய பூங்கா, கடந்த 2017ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.

இதற்கு காரணம் இந்த பூங்காவில் பல்லாயிரக்கணக்கான அரியவகை உயிரினங்களும், பழமையான மரங்களும் இங்கு பாதுகாக்கப்படுவது தான்.

கிட்டத்தட்ட 1,90,000 ஹெக்டர் அளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இதன் ஒரு பகுதியில் காட்டுத்தீ உண்டானது. இந்த தீ மளமளவென பரவிய நிலையில், தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர்.

சுமார் 600 ஹெக்டர் வரை காட்டுத்தீயால் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

பூங்காவின் தீயணைப்பு, தகவல் தொடர்பு மற்றும் அவசரகால துறையின் தலைவர் Mario Cardenas கூறுகையில்,

‘தீ ஆபத்து தீவிர மட்டத்தில் இருப்பதாலும், காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாகவும், தீயை அணைப்பதற்கு வானிலை பாதகமாக இருப்பதாலும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அண்டை நாடுகளின் உதவியை நாட அர்ஜென்டினா அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

1937ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Los Alerces தேசிய பூங்கா 1,000 ஆண்டுகள் பழமையான Larch காடுகளுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் மீது சூப் ஊற்றி தாக்குதல்!

Quick Share

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16ம் நூற்றாண்டில் கலைஞர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா (Mona Lisa) ஓவியம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பத்திரமாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தின் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் “உணவு அக்கறை”(food response) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றுவதை பார்க்க முடிகிறது.

மேலும், தாக்குதல் பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு” உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தனர்.

தாக்குதல் நடந்த உடனடியாக அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடினர்.

கலைஞர் லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியம் இதற்கு முன்பாகவும் பலமுறை சேதப்படுத்தப்பட்டும், ஒருமுறை திருடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேபால் (Paypal ) நிறுவனம்.

Quick Share

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனமான பேபாலில் (PayPal) சுமார் 29,900 ஊழியர்கள் பணியாற்றுகின்ற நிலையில் , 2500 பணியாளர்கள் பணியிழக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையதள வழியாக பண பரிமாற்றங்களை அனுமதிக்கும் நாடுகளில், பயனர்களுக்கு பண பரிமாற்ற செயலி மூலம் சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனம், பேபால் (PayPal).

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1998ல் தொடங்கப்பட்ட பேபால், ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். பேபாலின் தலைமை செயல் அதிகாரி (CEO) அலெக்ஸ் க்ரிஸ் (Alex Chriss) ஊழியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ,

இன்று மிக சங்கடமான ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். உலகளாவிய நமது ஊழியர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் குறைக்கப்பட உள்ளது.

சில ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியும், சில காலியிடங்களை நீக்கியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

நமது வர்த்தகத்தை சரியான அளவில் சரியான வேகத்தில் கொண்டு சென்று பயனர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை அளித்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் நமது வணிகத்தில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இடங்களில் முதலீடு செய்வதை தொடர்வோம். எந்தெந்த ஊழியர்களின் பெயர் இப்பட்டியலில் உள்ளதோ அவர்களுக்கு இன்றிலிருந்து இவ்வார இறுதிக்குள் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

வெளியேறும் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம் எனஅலெக்ஸ் கூறினார்.

அதேவேளை இந்தியாவிலும் பேபால் நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரூ மற்றும் ஐதராபாத் நகரில் கிளைகள் உள்ளநிலையில் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை!

Quick Share

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.

அது ஒரு பழமையான சுரங்கப்பாதை என்றாலும் அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று இன்றுவரை அறியப்படாததால் அது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் விதமாக மாறியுள்ளது.இந்த ஆய்வுக்கு சாண்டோ டொமிங்கோ பல்கலைகழகத்தைச் சேர்ந்த கேத்லீன் மார்டினெஸ் தலைமை தாங்கினார். சுமார் 1305 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை கோயிலின் கீழ் அமைந்துள்ளது. மணற்கற்களால் செதுக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை கிரேக்க தீவான சமோஸில் உள்ள புகழ்பெற்ற யூபலினோஸ் சுரங்கப்பாதையை ஒத்திருக்கிறது.யூபலினோஸ் சுரங்கப்பாதை கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது அதன் சிறந்த பொறியியல் வடிவமைப்பிற்காக புகழ்பெற்றது. டபோசிரிஸ் மேக்னா சுரங்கப்பாதை யூபனாலினோஸின் கட்டுமான அமைப்புகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அதன் சில பகுதிகள் யூபனாலினோஸ் சுரங்கப்பாதையை போலவே நீரில் மூழ்கியுள்ளது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் பணிகள் நடைபெற்று வந்தாலும் இந்த சுரங்கப்பாதை ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று மார்டினெஸ் நம்புகிறார்.கி.மு 230-ல் கட்டப்பட்ட இந்த கோயில் கிளியோபாட்ராவுக்கு தொடர்புடைய அசோரிஸ் மற்றும் ஐசிஸ் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலை இன்னும் முழுமையாக காண முடியவில்லை. காரணம் அதன் ஒரு பகுதி மத்தியதரைக் கடலில் உள்ளது.கி.பி 320 மற்றும் 1303-க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் அலைகள் காரணமாக அதன் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த சுரங்கப்பாதைகளில் கிளியோபாட்ராவின் கல்லறை உள்ளதா என்பதை கண்டறிய மரியாவுட் ஏரிக்கும், மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள சுரங்கங்ளில் தேண்டும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் விரைவில் அமுலுக்கு வரும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்!

Quick Share

கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். ஆனால், இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை. பிரித்தானியாவின் சட்டப்பூர்வ புலம்பெயர்தல் அமைப்பை மாற்றியமைத்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் அளவுக்குமீறிய புலம்பெயர்தலைக் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகள், இன்னும் சில வாரங்களுக்குள் அமுலுக்கு வரும் என பிரித்தானிய உள்துறைச் செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.

முன்னர் சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அது தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பிரித்தானிய பிரதமரும் உள்துறைச் செயலரும் டிசம்பரில் அறிவுப்புகள் வெளியிட்டிருந்தார்கள்.புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயல்வோரைக் கட்டுப்படுத்தும் விதிகள் மார்ச் மாத துவக்கம் முதல் நடைமுறைக்கு வர உள்ளன.ஆக, கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு சட்டப்படி புலம்பெயர்ந்தவர்கள் 300,000 பேர். இந்த ஆண்டு அத்தனை பேர் பிரித்தானியாவுக்கு வருவது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது.மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல், முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணி செய்வோர், தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர உள்ளதுடன், அது படிப்படியாக அதிகரிக்கவும் உள்ளது.மேலும், நாளை, அதாவது, ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல், உலகின் பிற பகுதிகளுடன் பிரித்தானியா எவ்வாறு வர்த்தகம் செய்கிறது என்பதிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், விசிட்டர் விசாவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.இதற்கிடையில், ஏற்கனவே, மாணவர் விசாக்களுக்கான மாற்றங்கள், ஜனவரி மாத துவக்கத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டன. அதன்படி, முதுகலை ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள் அல்லது அரசின் நிதி உதவி மூலம் ஸ்காலர்ஷிப் பெறும் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வாழ பிரித்தானியாவுக்கு அழைத்துவரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாறு வேடத்தில் நுழைந்து ஹமாஸ் வீரர்களை சுட்டுத்தள்ளிய இஸ்ரேல்!

Quick Share

இஸ்ரேலிய சிறப்பு படையினர் மாறுவேடத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து, ஹமாஸ் படையைச் சேர்ந்த மூவரை சுட்டுத் தள்ளிய வீடியோ வைரலாகியுள்ளது. Jenin நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய துருப்புகள் மருத்துவர், செவிலியர் மற்றும் பொதுமக்கள் போன்ற வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர்.பின்னர் அங்கிருந்த ஹமாஸ் போராளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

கத்தார் இளவரசருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் ட்ரூடோ!

Quick Share

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரச்சனை குறித்து கத்தார் இளவரசருடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நீடித்து வரும் நிலையில் போர் நிறுத்த முயற்சியில் கத்தார் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன், கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கத்தார் இளவரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானியுடன் மத்திய கிழக்கில் நிலவும் நிலைமை குறித்து பேசினார்.பிரதமரும், இளவரசரும் இஸ்ரேல் மற்றும் காஸாவின் நிலைமை குறித்தும், பாலஸ்தீனியர்களுக்கு நிலையான அமைதியைப் பாதுகாப்பதற்கான பாதையின் அவசியம் குறித்தும் விவாதித்தனர்.ஜஸ்டின் ட்ரூடோ இரண்டு நாடுகளின் தீர்வுக்கான கனடாவின் நீடித்த ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் அச்சமின்றி அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்தினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில், பிரதமர் ட்ரூடோ காஸாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.அத்துடன் கத்தார் மேற்கொண்டவை உட்பட பிராந்தியத்தில் மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க கனடாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார் என கூறப்பட்டுள்ளது.அதேபோல், காஸாவில் நிலவும் மோசமான மனிதாபிமான சூழ்நிலை குறித்து கவலைகொண்ட தலைவர்கள், இதுபோன்ற நிலைமையின்போது நெருக்கமான மற்றும் வழக்கமான தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜஸ்டின் ட்ரூடோ தனது பதிவில், ‘இன்று தமிம் பின் ஹமத் உடன் காஸாவில் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிப்பதற்கான எங்கள் முயற்சிகள் பற்றி பேசினேன். சர்வதேச மனிதாபிமான சட்டத்தை நிலைநிறுத்துவது மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்களுக்கு நீடித்த அமைதியைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்’ என தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய திட்டம்!

Quick Share

ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது. பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் , பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.

இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. அதன்படி நாளை பெப்ரவரி 1ம் தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது.4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தநிலையில் சோதனை நடைமுறையாக நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வாரத்தில் 4 நாள் வேலை செய்வது என்ற இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் நடைமுறைபடுத்தப்படுகிறது.உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



You cannot copy content of this Website