உலகம்

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோ பைடன்!

Quick Share

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற அமெரிக்க அதிபர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

81 வயதாகும் நிலையில் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

அதற்கு ஏற்றாற்போல் அண்மைக்காலமாக அவருடைய நடவடிக்கைகள் அமைந்து வருகின்றமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் தேர்தலில் போட்டியிடுவேன் என பைடன் பிடிவாதமாக உள்ளார்.

இந்த நிலையில் ஜோ பைடன் தனது மனைவி என நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைடன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் அந்த பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுக்க செல்கிறார். அப்போது பைடனின் மனைவி பதற்றத்துடன் ஓடி வந்து பைடனை தடுக்கிறார். அதன் பின்னர் பைடன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் விவாதங்களை உண்டாக்கி உள்ளது.  

அதிசயம்!! 32 பற்களுடன் பிறந்த பெண் குழந்தை!

Quick Share

பொதுவாக பல் இல்லாமல் தான் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு 6 முதல் 12 மாதங்களில் பற்கள் வளர ஆரம்பிக்கும்.

ஞானப் பல் உட்பட 32வது பல் வெளிவர சுமார் 21 வருடங்கள் ஆகும். ஓரிரு ஆண்டுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் இங்கு ஒரு குழந்தை பிறக்கும்போதே 32 பற்களுடன் பிறந்துள்ளது. இது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தையின் வீடியோவை பகிர்ந்து ஆச்சரியமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த பெண் குழந்தை பிறக்கும் போது முழுமையாக 32 பற்கள் கொண்டிருந்தது. அதுவும் ஒரு நேர்த்தியான பற்கள்.

32 பற்கள் என்றால் ஆச்சரியப்படவும் கவலைப்படவும் வேண்டாம். இது ஒரு அரிய நோய். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ நிகா திவா அன்னோவின் இன்ஸ்டா கணக்கில் பகிரப்பட்டது. இதுமட்டுமின்றி இந்நோய் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டியில் இருந்து விலகும் பைடன்: அதிகரிக்கும் டிரம்ப் செல்வாக்கு

Quick Share

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான ஜோ பைடன் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார்.

தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லாஸ் வேகாஸ் பயணத்தை ரத்து செய்த ஜோ பைடன், தான் நன்றாக இருப்பதை கூறும் வகையில் செய்தியாளர்களிடம் வெற்றி செய்கையை காண்பித்து சென்றார்.

சில நாட்களாக சளி தொந்தரவு, இருமலால் ஜோ பைடன் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, டெலாவேரில் உள்ள ரெஹோபோத் வீட்டில் பைடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

முன்னதாக பைடன் அளித்த பேட்டியில், தனக்கு ஏதேனும் அவசர மருத்துவ கோளாறு ஏற்படும் பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பைடன் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அவருக்கான ஆதரவு அமெரிக்காவில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் அவர் இலகுவாக வெற்றிபெரும் சூழலும் உதயமாகியுள்ளது.

இதன் காரணமாக மிகவும் வலிமையான வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களமிறக்க வேண்டிய சூழலுக்கு ஜனநாயக கட்சி தள்ளப்பட்டுள்ளது.

போர்க்களமான பிரித்தானிய நகரம்: கலவரக்காரர்களால் தப்பியோடிய பொலிசார்!

Quick Share

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரம் போர்க்களமாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொலிஸ் வாகனம் ஒன்றை கவிழ்த்தக் கலவரக்க்காரர்களால் பொலிசார் சம்பவயிடத்தில் இருந்து வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Harehills பகுதி மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5 மணியளவில் Luxor Street பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மட்டுமின்றி, சமூக ஊடகத்தில் கவனம் ஈர்த்த காணொளி ஒன்றில், நூறுக்கும் மேற்பட்டவர்கள் தெருவில் காணப்பட்டனர். மட்டுமின்றி, இன்னொரு காணொளியில் பொலிஸ் கார் ஒன்று தாக்கப்படுவதும், கவிழ்க்கப்படுவதும் பதிவாகியுள்ளது.

மற்றொரு காணொளியில் டசின் கணக்கானவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் ஒரு ஸ்கூட்டரை எடுத்து ஒரு பொலிஸ் கார் மீது வீசுகிறார், பலர் பொலிஸ் கார் மீது தாக்குகின்றனர்.

இந்த நிலையில் சம்பவயிடத்திற்கு மேலதிக பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காயமடைந்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, Gipton மற்றும் Harehills பகுதியின் கவுன்சிலர் சல்மா ஆரிப் விடுத்த கோரிக்கையில், மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து தற்போது வெளியே வரவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தில் ஒருவராக எவரேனும் சிக்கியிருந்தால் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் பொலிஸ் தரப்பில் அப்பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்திற்கு காரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோக்கள்-ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல் சாதனை!!

Quick Share

உயிருள்ள மனித தோல் செல்களிலிருந்து புன்னகைக்கும் ரோபோ முகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

உயிரோடு இயங்கும் தோல்

ஜப்பானிய விஞ்ஞானிகள் மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை வழங்கும் முகத்தைக் உருவாக்கியுள்ளனர்.

இது மனிதர்களுடனான ரோபோக்களின் தொடர்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முகத்தயாரிப்பு முறையில், ஆய்வகக் கூடத்தில் வளர்க்கப்பட்ட மனித தோல் செல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்பை Cell Reports Physical Science என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

மனித தோல் எவ்வாறு உடலுடன் இயற்கையாக இணைக்கப்படுகிறதோ அதையே இங்கு பின்பற்றியுள்ளனர்.

தோல் தசைகளைப் போன்ற ஒரு கட்டமைப்பை கொலாஜென் (collagen) மூலம் உருவாக்கி, அதன் மீது உயிரோடு இயங்கும் தோல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முகத்தின் தசை அசைவுகளைப் போன்றே தோலும் அசைந்து இயற்கையான புன்னகையை தோற்றுவிக்கிறது.

மனித-ரோபோ உறவில் புதிய பரிமாணம்

 இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்கள் மற்றும் ரோபோக்களின் உறவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.

மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ரோபோக்கள், மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த உயிரோடு இயங்கும் தோலுக்கு தன்னைக் குணப்படுத்திக் கொள்ளும் திறனும் உள்ளது.

12 வது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்!

Quick Share

உலகின் பிரபல பணக்காரான எலான் மஸ்க் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.

எலான் மஸ்க் – சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் – சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் – ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று ப்ளூமன்பெர்க் அறிக்கை குறிப்பிடுகிறது.

எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பில் பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார்.

அண்மையில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சதை உண்ணும் பக்டீரியா தொற்றால் அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

Quick Share

ஜப்பானில் சதை உண்ணும் பக்டீரியா தொற்றால் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் கூறுகையில், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் பக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது தசைகளை கரைக்கும், ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறியால் (STSS) ஏற்படுகிறது.

ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் எனப்படும் இந்த நிலையை ஏற்படுத்தும் பக்டீரியாவை தசையை கரைக்கும் அல்லது சாப்பிடுவது மிகவும் அரிதானது, ஆனால் கடந்த ஆண்டு ஜப்பானியர்களிடையே இது வேகமாக பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

ஜப்பானிய மருத்துவர்களின் கூற்றுப்படி, காய்ச்சல், குளிர், தசை வலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த பக்டீரியத்தால் பாதிக்கப்பட்ட பிறகு முக்கிய அறிகுறிகளாகும்.

அதன் பிறகு, தொண்டை வலி, உறுப்பு செயலிழப்பு, உடல் வீக்கம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஸ்ட்ரெப்டோகாக்கால் நச்சு அதிர்ச்சி நோய்க்குறியை ஏற்படுத்தும் இந்த பக்டீரியா ஸ்ட்ரெப்டோகாக்கி குழுவிற்கு சொந்தமானது.

பக்டீரியாவின் இந்த குழு ஆபத்தானது. இந்த பக்டீரியா உடலில் நுழைந்து தசைகளுக்கு இடையில் பரவுகிறது. பின்னர் அது இரத்த ஓட்டத்தில் நுழைகிறது.

பக்டீரியாவின் விஷத்தை உடலில் வெளியிடுவதன் மூலம். வைரஸ் பரவுவதைப் போன்று பக்டீரியாக்கள் வேகமாகப் பரவுவதில்லை என்றும், இந்த பக்டீரியா வேகமாகப் பரவுவது குறித்தும் அவர்கள் மிகுந்த கவலையுடன் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையைப் பேணுதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், இருமல் அல்லது தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுதல் போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் இந்த பக்டீரியாவின் தொற்றுநோயைத் தடுக்க உதவும் என கூறப்படுகின்றது.

அதேசமயம் இந்த பக்டீரியத்தால் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நோயாளி மிகவும் மோசமாகிவிடுவதாகவும் கூறப்படுவதுடன் இறப்பு விகிதம் 30 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி செல்கள் கலந்த புதிய அரிசி வகை அறிமுகம்.

Quick Share

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் விஞ்ஞானிகள் குழு ஒன்று , மாட்டிறைச்சி செல்கள் கலந்த புதிய அரிசி வகையை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் பல இறைச்சி பிரியர்களுக்கு அவர்களின் புதிய வகை அரிசி ஓர் அற்புதமான உணவாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சியின் ஊட்டச்சத்து மதிப்பை இந்த அரிசியில் சேர்ப்பதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ‘இறைச்சி அரிசி’யை எதிர்கால விண்வெளி நடவடிக்கைகளிலும், கிரக ஆய்வுகளிலும் எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு வகையான சத்தான அரிசியாக அறிமுகப்படுத்துவார்கள் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதுடன் இது வெண்ணெய் போன்ற வாசனை கொண்டுள்ளது.

துஸ்பிரயோகம், போதை மருந்து: அம்பலமாகும் எலோன் மஸ்க்கின் உண்மை முகம்!

Quick Share

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலோன் மஸ்க் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தொடர்பில் புயலைக்கிளப்பும் 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதில், தமது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பலருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார் என அறிக்கை ஒன்றில் அம்பலமாகியுள்ளது.

பெண் ஒருவரை தமது குடியிருப்புக்கு அழைத்ததாகவும், அவருடன் நள்ளிரவு கடந்தும் குறுந்தகவல் அனுப்பியதாகவும், இதனால் தமது வேலைக்கு சிக்கல் ஏற்பட்டது என்றும் தொடர்புடைய பெண் குறிப்பிட்டுள்ளார்.

எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் உறவுக்கு ஈடாக பரிசுகளை வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மைக்கு புறம்பானது என மஸ்க் மறுத்துள்ளார்.

இன்னொரு SpaceX பெண் ஊழியரிடம் பல முறை தமது பிள்ளைக்கு தாயாக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் குறித்த பெண் ஊழியர் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

அதே வேளை மஸ்க்கின் Neuralink நிறுவனத்தின் பெண் ஊழியர் மூலமாக அவருக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். மேலும், எலோன் மஸ்க் அதிகமாக போதை மருந்து பயன்படுத்துபவர் என்றே அவரது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பு வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அவரது சட்டத்தரணிகள் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்துள்ளதுடன், வாடிக்கையாக சோதனை மேற்கொள்பவர் என்றும் ஒரு சோதனையில் கூட மஸ்க் தவறிழைத்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மஸ்க் நிறுவனங்களில் புகார் எழுப்பப்பட்டாலும், அது தொடர்பில் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படுவதில்லை என்றும், ஆனால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என மட்டும் உறுதி அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எலோன் மஸ்க் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் இதுவரை நேரிடையாக பதிலளிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

பலூனில் வந்திறங்கிய மனிதக்கழிவுகள்: பிரித்தானிய மருத்துவர் விடுத்துள்ள எச்சரிக்கை

Quick Share

வடகொரியா, பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்குள் மனிதக்கழிவுகளைக் கொண்டு இறக்கிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காற்றில் பரவும் மனிதக்கழிவுகளால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறித்து எச்சரித்துள்ளார் பிரித்தானிய மருத்துவர் ஒருவர்.

தென்கொரியாவில் வந்திறங்கிய 260 ராட்சத பலூன்கள்

வடகொரியாவிலிருந்து அனுப்பப்பட்ட பலூன்களுடன், மலம் மற்றும் குப்பை அடங்கிய 260 மூட்டைகள் தென்கொரியாவில் வந்திறங்கியுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் மேலும் வலுவடைந்துள்ளது.

உலகளவில் அதிக முறை கைதாகி பிரபலமடைந்த நபர்!

Quick Share

அமெரிக்கா – கென்டகி மாகாணத்தில் வசித்து வந்த 74 வயதான ஹென்றி இயர்ல் உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் என அந்நாட்டில் பிரபலமடைந்துள்ளார். அவருடைய வாழ்நாளில் 1,300 முறைக்கும் கூடுதலாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹென்றிக்கு 18 வயது இருக்கும்போது, அவரை தத்தெடுத்து வளர்த்த தாய் மரணம் அடைந்துள்ளார்.

இந்த துக்கத்தில் ஹென்றி மதுபானம் குடிக்க தொடங்கினார். அவர் முறையாக எந்த அலுவலகத்திலும் பணியாற்றியதில்லை. ஒரேயொரு முறை மோட்டல் ஒன்றில் வேலை செய்துள்ளார்.

அதுவும், அவர் குடிகாரர் என தெரிந்ததும் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். 1970-ம் ஆண்டு ஜூலையில், பயேட் கவுன்டி பகுதியில் முதன்முறையாக அவர் கைது செய்யப்பட்டார்.

20 வயது இருக்கும்போது ஆயுதம் ஒன்றை மறைத்து எடுத்து சென்றதற்காக கைது செய்யப்பட்ட அவர், சிறையில் மொத்தம் 6 ஆயிரம் நாட்களை கழித்துள்ளார்.

1000-ஆவது முறையாக 2008-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். யாரோ ஒருவரின் வீட்டுக்கு பின்னால் மதுபோதையில் சிறுநீர் கழித்த காரணத்திற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புனரமைப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டு தெளிவடைந்த அவர் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், 5 தசாப்தங்களில், 1,500 முறை அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என ஸ்மோகிங் கன் என்ற ஊடக செய்தி தெரிவிக்கின்றது.

கடைசியாக, 2017-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கென்று குடும்பம் என எதுவும் இல்லை. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் அவர் மரணம் அடைந்து விட்டார். ஆனால், உலகில் அதிக முறை சிறையில் வாழ்நாளை கழித்த நபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

அவரை பற்றி உள்ளூர்வாசிகள் கூறும்போது, வசீகரிக்க கூடிய ஒரு நபர் என்றும் சமூக விதிகளை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் சுதந்திர மனப்பான்மையுடன் தான் விரும்பியவற்றை மகிழ்ச்சியுடன் செய்ய கூடியவர் என்றும் கூறுகின்றனர்.

பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியில் சாதனை படைத்த தமிழன்!

Quick Share

பிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார். தனது தமிழ் பின்னணியிலிருந்து தைரியமான ஆக்கபூர்வமான சுவைகளின் சேர்க்கைகளை உருவாக்கப்பெற்ற உத்வேகத்தின் காரணமாகவே மாஸ்டர் செவ்வில் வெற்றிபெற முடிந்ததாக பிரின் பிரதாபன் கூறியுள்ளார்.

மாஸ்டர் செவ் 2024 போட்டி- சாதனை படைத்த தமிழன் அதோடு தனது பெற்றோர்களே தனக்கு உணவு மற்றும் சுவையின் மீதான ஆர்வத்தை தூண்டினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

பிரின் பிரதாபனின் தந்தை கோபால் ஒரு பொறியியலாளர் என்பதுடன் தாயார் டார்க்கே வங்கியில் பணிபுரிகின்றார். தனது வெற்றிகுறித்து கூறிய பிரின் பிரதாபன் , எனது சமையலில் தமிழ் கலாச்சாரம் முக்கிய பங்கு வகித்தது இந்த விடயத்தில் நான் அதிஸ்டசாலி என அவர் தெரிவித்துள்ளார்.

எனது பெற்றோர் மிகச்சிறந்த சமையல்திறன் மிக்கவர்கள் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் சுவையால் வழிநடத்தப்படும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழ் பின்னணியை பொறுத்தவரை ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளதெனவும், சிலர் பொருட்களை சேர்க்க முடியாது சில பொருட்களை சேர்க்க முடியும் சுவைகள் சிலவேளை ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது தமிழ் கலாச்சாரத்திலிருந்து பாடங்களை கற்று நான் தயாரிக்கும் பல உணவு வகைகளில் அவற்றை சேர்த்துள்ளதாக குறிப்பிட்ட பிரின் பிரதாபன் , ஐரோப்பிய உணவு வகைகளிலும் அவற்றினை சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்ரிபெற்றமைக்கு அபலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




You cannot copy content of this Website