உலகம்

பெருந்துயரமான நாள்… 830,000 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு!!

Quick Share

இயற்கை பேரிடர் ஒன்றால் ஒரே நாளில் சுமார் 1 மில்லியன் மக்கள் பலியாவது என்பது உண்மையில் பேரழிவு என்றே கூறுகின்றனர்.

வரலாற்றில் மிக மோசமான

சீனாவின் Shanxi மாகாணத்தின் Shaanxi பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே, வரலாற்றில் பதிவான மிகப்பெரிய பேரிடர் என கூறுகின்றனர். 1556 ஜனவரி 23ம் திகதி ரிக்டர் அளவுகோலில் 8 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் 830,000 உயிர்கள் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது, பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கமானது பரவலான அழிவை ஏற்படுத்தியதுடன், அக்கால கட்டிடங்கள், வீடுகள் மற்றும் முழு நகரங்களும் இடிந்து விழுந்தன. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உடனடி உயிர் இழப்பு தவிர, நீண்ட கால விளைவுகளாக பஞ்சம், நோய் மற்றும் சமூக நெருக்கடி உள்ளிட்டவை ஏற்பட்டது. பேரழிவின் அளவைக் கருத்தில் கொண்டு, அது இன்னும் இயற்கையின் சக்தி மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை நினைவூட்டுவதாகவே கூறப்படுகிறது.

தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டால், Shaanxi நிலநடுக்கமானது நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்றே கூறுகின்றனர். பதிவு செய்யப்பட்ட வரலாற்றில், இதுவரை எந்த நாளையும் விட அதிகமான மனித உயிர்களை பலிவாங்கிய நாள் அந்த ஜனவரி 23 என்றே கூறுகின்றனர்.

மிங் வம்சம்

சீன வரலாற்றில் மிகவும் அழிவுகரமான நிலநடுக்கம் ஜியாஜிங் நிலநடுக்கம் என்றே பதிவாகியுள்ளது. இது மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது தற்போதைய ஷன்சி, ஷான்சி, ஹெனான் மற்றும் கன்சு மாகாணங்களை மொத்தமாக தாக்கியுள்ளது.Shaanxi நிலநடுக்கத்தை விடவும் ஜியாஜிங் நிலநடுக்கமானது 1 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பலிவாங்கியிருக்கலாம் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரிடர் காரணமாகவே மிங் வம்சம் பலவீனமானது என்றும் கூறுகின்றனர்.

பெற்றோரை கொல்லுமாறு 14 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய AI!

Quick Share

டெக்சாஸை சேர்ந்த தாய் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகிவிட்ட நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸில் நடந்த சம்பவம், AI-யின் ஆபத்துகள் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது.

டெக்சாஸை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் அளவுக்கு மீறி செல்போன் பயன்படுத்தியதால், அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு அவரிடம் செல்போன் கொடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் பதற்றமடைந்த சிறுவன் Character.AI என்ற AI சாட்பாட்டின் உதவியை நாடியுள்ளார்.

சிறுவனின் செல்போன் பயன்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த AI சாட்பாட் அதிர்ச்சிகரமான பதிலை வழங்கியுள்ளது.

அதாவது, செல்போன் பயன்பாட்டுக்கு பெற்றோர் தடை விதிப்பதாகவும் அதற்கான தீர்வு குறித்து சிறுவன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த AI சாட்பாட், பெற்றோரை கொலை செய்து விடுவதே தீர்வு என்று அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு தொடர்ந்த பெற்றோர்

சாட்பாட்டின் இந்த பதிலை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் சம்பந்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சாட்பாட் உடனான சிறுவனின் உரையாடல் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமர்பிக்கப்பட்டது.

இந்த சம்பவம், AI தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் நிறுவனங்கள், அதன் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. 

உயிருள்ள தவளைகளை பாலில் வைக்கும் ரஷ்யர்கள்!!ஏன் தெரியுமா?

Quick Share

பண்டைய காலங்களில் உணவுப்பொருட்களை பாதுகாப்பதற்கு மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர். தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டியின் முதன்மையான நோக்கம் பால் மற்றும் பிற உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் வரையில் பாதுகாப்பது தான்.

ஆனால் பால் மற்றும் உணவுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் நுகர்ப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பாலை எப்படி கெட்டுப்போகாமல் பாதுகாத்தார்கள் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? 

குளிர்சான பெட்டிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், ரஷ்யர்கள் தங்கள் பால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க கையாண்டதாக கூறப்படும் வினோதமான தந்திரம் குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் தொடர்பாகவும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ரஷ்யர்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்க பால் இருக்கும் பாத்திரத்தில் ஒரு தவளையை விடுவார்கள். இந்த பால் சிகிச்சை எவ்வாறு வேலை செய்கிறது என்று ரஷ்யர்களுக்கு உறுதியாக தெரியவில்லை, ஆனால் அவர்கள் அதை நம்பினார்கள்.

ஆனால் ரஷ்ய தவளைகள் தங்கள் தோலின் மூலம் சுரக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக தற்போது அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு ரஷ்ய வேதியியலாளர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த தவளைகளின் சுரப்பியை மூலக்கூறு அளவில் உடைக்க முயற்சித்து புதிய மருந்துகளின் கலவைகளை கண்டறிந்துள்ளனர்.

தவளைகளுக்கு பற்கள் அல்லது நகங்கள் இல்லை, எனவே அவற்றின் தோலில் இருந்து வெளியேறும் சுரப்புகள் பாக்டிரியா எதிர்ப்பு பண்டுகளை கொண்டுள்ளது என அறிவியல் ஆதாரங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.

தவளையை வைத்து பாலைப் பாதுகாக்கும் பின்னணியில் உள்ள அசல் காரணத்தை அவர்கள் புரிந்துக்கொள்ளாத போதும் ஒரு தவளையின் இயற்கையாகவே குளிர்ச்சியான, ஈரமான உணர்வு கிடைக்கின்றமையால் அவற்றை பாலை பாதுகாக்க பயன்படுத்தினார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

பாலை புதியதாக வைத்திருக்க தவளைகளைப் பயன்படுத்துவது சற்று வினோதமாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருந்தாலும் ஆனால் பழங்கால ரஷ்யர்கள் மத்தியில் தவளை அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரதிர்ச்சி!!நடுவரின் சர்ச்சை தீர்ப்பால் வெடித்த வன்முறை! கால்பந்து மைதானத்தில் 100 பேர...

Quick Share

கினியா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதில் 100 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சர்ச்சையான தீர்ப்பு 

கினியாவின் N’Zerekore நகரில் உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. அப்போது நடுவர் சர்ச்சையான தீர்ப்பு அளித்ததையடுத்து கிளர்ச்சியடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்துள்ளனர்.பின்னர் இருதரப்பு ரசிகர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் இந்த மோதல் வன்முறையாக மாறிய நிலையில், மைதானத்திற்கு வெளியேயும் பல ரசிகர்கள் சாலைகளில் அடிதடியில் ஈடுபட்டனர். 

100 பேர் மரணம்

வன்முறையின் உச்சமாக காவல்நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 100 கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதுகுறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், “மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உடல்கள் வரிசையாக உள்ளன. மற்றவை நடைபாதையில் தரையில் கிடக்கின்றன. பிணவறை நிரம்பியுள்ளது” என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். 

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை:அரசு உத்தரவு!!எந்த நாட்டில் தெரியுமா?

Quick Share

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசாங்கம் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் பெரும் பகுதியாகிவிட்டாலும், குறிப்பாக சிறுவர்களின் மீது அதன் தாக்கம் கவலைக்குரியதாக உள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு சிறுவர்களின் மனநிலை, படிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிப்பதாக தெரிவித்துள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய சட்டத்தை அவுஸ்திரேலிய அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டத்தின்படி, சமூக ஊடக நிறுவனங்கள் குழந்தைகளின் கணக்குகளை நீக்க வேண்டும் மற்றும் இதற்கு இணங்காவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன, சிலர் இது குழந்தைகளின் தகவல் பெறும் உரிமையை கட்டுப்படுத்தும் என்று வாதிடுகின்றனர்.

ஒட்டகங்களுக்கு ஏன் உயிருள்ள விஷப் பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகிறது?

Quick Share

சில பிரதேசங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய நடைமுறையில் ஒன்றாக திகழும் திகழும் விடயம் தான் ஒட்டகங்களுக்கு உயிருள்ள பாம்புகள் உணவாக கொடுக்கப்படுவது. ஆனால் இந்த அசாதாரண உணவு முறை பாரம்பரிய மருத்துவத்துடன் தொடர்புப்பட்டதாக நம்பப்படுகிறது. காரணம் பாம்புகளை உட்கொள்வது ஒட்டகங்களின் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

பொதுவாக ஒட்டகம் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும். அதன் உணவு முறையில் பாம்புகள் ஒருபோதும் இடம்பெறுவது கிடையாது. ஆனால் சில சூழ்நிலைகளில் ஒட்டகங்களுக்கு பாம்புகள் உணவாக கெடுக்கப்படுகின்றது. 

ஹைம் நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகத்திற்கு அதன் வாயைத் திறந்து பாம்பைச் செருகுவதன் மூலம் ஒட்டகங்களுக்கு பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகின்றது.

இந்த நோய் காரணமாக ஒட்டகம் உணவு சாப்பிடுவதையும் தண்ணீரை அருந்துவதையும் முழுமையாக நிறுத்திவிடுகின்றது. 

மேற்கு ஆசிய நாடுகளில், ஹைம் நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு பாம்புகளை சாப்பிட கொடுப்பதால் அவை குணமாகும் என்று நம்பப்படுகிறது.

பாம்பிலிருந்து வரும் விஷம் ஒட்டகத்திற்கு ஆன்டிபாடிகளை உருவாக்கி, நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

பாம்பை உண்பதால் அதன் விஷம் ஒட்டகத்தின் உடலில் பரவி நோயின் பாதிப்பிலிருந்து ஒட்டகத்தை குணப்படுத்துகிறது.

பாம்பு விஷத்தின் தாக்கம் நீங்கிய பிறகு, ஒட்டகம் மீண்டும் முற்றிலும் ஆரோக்கியம் அடைகின்றது. அதன் காரணமாகவே இந்த விசித்திரமான நடைடுறை பின்பற்றப்படுகின்றது.

மூன்றாம் உலகப்போர் அச்சம்: உணவு தண்ணீரை சேமித்துவைக்க உத்தரவிட்டுள்ள நாடு

Quick Share

ரஷ்யா – உக்ரைன் போரில், தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளது.

மூன்றாம் உலகப்போர் அச்சம்

மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு ஸ்வீடன் நாடு தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, சில நாட்களுக்குள் அவை பயன்படுத்தப்படும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கான அனுமதி தொடர்பில் ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், தாக்குதல்கள் வார்த்தைகளால் நடத்தப்படுவதில்லை. அவை அறிவிக்கப்படுவதும் இல்லை. ஏவுகணைகளே தங்களுக்காக பேசும் என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.

ஆக, தனது ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பயன்படுத்தலாம் என அமெரிக்கா உக்ரைனுக்கு அனுமதி வழங்கியுள்ள விடயமும், சில நாட்களுக்குள் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ள விடயமும், மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என அக்கம் பக்கத்து நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளன.

உணவு தண்ணீரை சேமித்துவைக்க உத்தரவு

அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்துவது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்ட சில மணி நேரத்துக்குள், ஸ்வீடன், சுமார் ஐந்து மில்லியன் எச்சரிக்கை துண்டுபிரதிகளை விநியோகித்துள்ளது.அதில், உலகில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், அப்படி அணு ஆயுதம், உயிரியல் ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில், வான்வழித்தாக்குதல் நடத்தப்படும்போது எப்படி பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக்கொள்ளவேண்டுமோ அதேபோல செயல்படவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பக்கத்து நாடான பின்லாந்து முதலான சில நாடுகளும், தத்தம் குடிமக்களுக்கு இதேபோல் எச்சரிக்கைகள் விடுத்துள்ள விடயம், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. 

கனடாவில் தட்டம்மை நோய் அதிகரிப்பு!

Quick Share

கனடாவின் நியூ பிரவுன்ஸ்வீக் பிராந்தியத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பிரிட்ரிக்ஷன், அப்பர் செயின் ஜோன் ரிவர் வெலி ஆகிய பகுதிகளில் இவ்வாறு தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நியூ பிரவுன்ஸ்விக் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது.

நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் நோயாளர் எண்ணிக்கை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

தட்டம்மை நோய் மிக வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகளை உரிய முறையில் ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கு முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசிகளை முடிந்த அளவு ஏற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதார அலுவலகம் பிரதேச வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட சில நோய் அறிகுறிகள் இருந்தால் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய நகர்வு… முகேஷ் அம்பானிக்கு சவால் விடும் Swiggy

Quick Share

உணவு மற்றும் மளிகை விநியோக சேவை நிறுவனமான Swiggy தற்போது ரூ 11,300 கோடி தொகையை திரட்டும் வகையில் பொதுத்துறை நிறுவனமாக உருவாக உள்ளது.

Swiggy-ன் ரூ 11,300 கோடி IPO

இதன் முதற் நகர்வாக இந்தியாவின் SEBI அமைப்பிடம் தங்களின் செயல்பாடுகள், நிதி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான வாய்ப்புகள் பற்றிய தகவல்களை குறிப்பிடும் RHP என்ற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

Swiggy-ன் ரூ 11,300 கோடி IPO என்பது மிகப்பெரிய நகர்வாக பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் உட்பட Blinkit, Zepto ஆகிய பிரபலமான நிறுவனங்களின் சவால்களையும் Swiggy எதிர்கொண்டு வருகிறது.

IPO திட்டத்தின் ஒருபகுதியாக திரட்ட திட்டமிட்ட முதலீடு தொகையை ரூ 3,750 கோடியில் இருந்து ரூ 4,499 கோடி என Swiggy அதிகரித்துள்ளது. இந்த ரூ 1,179 கோடி தொகையானது Swiggy-ன் இன்னொரு பிரிவான Instamart நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவான சேவையை அளிப்பது என்ற கொள்கையை Swiggy மற்றும் Blinkit வகுத்துள்ள நிலையில், தற்போது மிகப்பெரும் சவாலாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.

புதிதாக 150 மில்லியன் டொலர்

10ல் இருந்து 30 நிமிடங்களுக்குள் என்ற உறுதியை தங்களின் சில்லறை வணிகங்கள் ஊடாக ரிலையன்ஸ் சாத்தியப்படுத்த உள்ளது. Zepto நிறுவனத்தின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களை கவர, தற்போது அந்த நிறுவனம் புதிதாக 150 மில்லியன் டொலர் தொகையை முதலீடாக பெற்றுள்ளது.

இந்த நிலையில் புதிய நகரங்களில் குத்தகை மற்றும் உரிமம் பெறுவதற்காக Swiggy நிறுவனம் ரூ 423.3 கோடி தொகையை முதலீடு செய்ய உள்ளது. மட்டுமின்றி, தங்களின் விநியோக மையங்களை விரிவாக்கம் செய்ய ரூ 755.4 கோடி செலவிட உள்ளது.

இதனால் மொத்த விநியோக மையங்களின் எண்ணிக்கை 741 என அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. Blinkit நிறுவனம் தங்களின் விநியோக மையங்களின் எண்ணிக்கையை 791 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ 84,000 கோடி இழப்பீட்டு கேட்டு செய்தி நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த ட்ரம்ப்

Quick Share

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பேட்டி திருத்தப்பட்டது மற்றும் தேர்தல் தலையீடு என குறிப்பிட்டு CBS செய்தி ஊடகம் மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இஸ்ரேல் நடவடிக்கை

இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றி ஹாரிஸிடம் எழுப்பிய கேள்வி தொடர்பில் CBS செய்தி ஊடகம் இரண்டு வெவ்வேறு பதில்களை ஒளிபரப்பியதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

அத்துடன் அக்டோபர் 6ம் திகதி ஒளிப்பரப்பான 60 நிமிட காணொளியில் இஸ்ரேல் அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஜோ பைடன் நிர்வாகத்தின் செல்வாக்கு தொடர்பில் கமலா ஹாரிஸ் அளித்த பதில் இல்லை என்றும் ட்ரம்ப் வாதிட்டுள்ளார். 

குறித்த நேர்காணலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏன் அமெரிக்காவிற்கு செவி சாய்க்கவில்லை என்று ஹாரிஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிக விளக்கமான பதிலளித்திருந்தார். ஆனால், அவரது பதில் தெளிவாக இல்லை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் கேலி செய்தனர்.

ஆனால் அடுத்த நாள் ஒளிப்பரப்பான இதே நேர்காணலில், இஸ்ரேல் தொடர்பான கேள்விக்கு கமலா ஹாரிஸ் சுருக்கமாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்கத் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, வியாழன் அன்று டெக்சாஸின் வடக்கு மாவட்டத்தில் ட்ரம்பின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பெரும்பாலான மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையில் இருப்பதாக குறிப்பிட்டு, CBS செய்தி ஊடகம் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இழப்பீடாக CBS செய்தி ஊடகம் 10 பில்லியன் டொலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ 84,000 கோடி இழப்பீட்டு வழங்க வேண்டும் என்றும், அத்துடன் விரிவான நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்கள்: எச்சரிக்கும் அமெரிக்கா

Quick Share

உக்ரைன் எல்லையில் சுமார் 8,000 வடகொரிய வீரர்கள் நிலைகொண்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 10,000

எதிர்வரும் நாட்களில் வடகொரிய துருப்புக்களை உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபடுத்த ரஷ்யா தயாராகி வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவிற்கு மொத்தம் 10,000 துருப்புக்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக அமெரிக்கா நம்புவதாக ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். உக்ரைனின் எல்லையில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்திற்கு வடகொரிய வீரர்களை அனுப்புவதற்கு முன்பு, அவர்களை முதலில் தூர கிழக்கில் உள்ள பயிற்சி தளங்களுக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது.

வடகொரிய வீரர்களுக்கு ரஷ்யா அளித்துள்ள பயிற்சிகள் தொடர்பாக வெளியான தகவலின் அடிப்படையில், வடகொரிய படைகளை முன்னணி நடவடிக்கைகளில் பயன்படுத்த ரஷ்யா முழுமையாக உத்தேசித்திருக்கலாம் என ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் ஊடுருவல் நடவடிக்கையில், முதல் முறையாக வெளிநாட்டு ராணுவத்தை ரஷ்யா களமிறக்குகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரியப் போராக இது விரிவடையலாம் என்றே அஞ்சப்படுகிறது.

கடுமையாக எச்சரித்துள்ளனர்

வடகொரிய துருப்புக்களிடம் ரஷ்யா திரும்புவதற்கான காரணங்களில் ஒன்று, ரஷ்யாவின் மிக மோசமான நிலை என்றே பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, வெளிவிவகாரத்துறை மற்றும் பென்டகன் ஆகியவற்றின் அதிகாரிகள் அனைவரும் வட கொரிய துருப்புக்களை உக்ரைன் போரில் களமிறக்கும் செயலை கடுமையாக எச்சரித்துள்ளனர்.

அப்படி நடந்தால், வடகொரிய வீரர்கள் ஒரு முறையான இராணுவ இலக்காக மாறுவார்கள் என்றும் பிளிங்கன் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியப் படைகள் சில நாட்களில் இணையலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்னதாக எச்சரித்திருந்தார்.

மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் பதில்களுக்கான ஒரு சோதனையாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவின் மிக வயதான பெண்ணான எலிசபெத் காலமானார்!

Quick Share

அமெரிக்காவின் மிக வயதான பெண்ணான எலிசபெத் பிரான்சிஸ் 115 வயதில் உயிரிழந்தார். 1909ஆம் ஆண்டில் லூசியானாவில் பிறந்தவர் எலிசபெத் பிரான்சிஸ். இவர்தான் அமெரிக்காவின் மிக வயதான பெண்ணாக அறியப்பட்டார். அதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார்.

இவருக்கு முன் கலிபோர்னியாவின் எடி செக்கரெல்லி தனது 116வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பின் இறந்தார். 

மேலும், ஏப்ரல் மாதம் LongeviQuestயில் இருந்து அமெரிக்காவில் மிகவும் வயதான நபராக அங்கீகரிக்கும் விருதையும் எலிசபெத் பிரான்சிஸ் பெற்றார். 

இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டெக்ஸாஸின் ஹூஸ்டனில் கழித்தார். முதல் உலகப்போரில் இருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அறிந்திருந்தார். 

காபி கடை ஒன்றை ஹூஸ்டனில் நடத்தி வந்த எலிசபெத், வாகனம் ஓட்டுவதை விட நடைப்பயிற்சி செய்வதை அதிகம் விரும்பினார்.

இவர் அமெரிக்காவில் 20 ஜனாதிபதிகளின் ஆட்சியை கண்டுள்ளார். இந்நிலையில் எலிசபெத் தனது 115 வயதில் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இவர் தனது பிறந்தநாளின்போது நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பது குறித்த குறிப்பை வழங்கினார்.




You cannot copy content of this Website