இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார்.
அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஆகஸ்ட் 8 ஆம் தேதி பார்சிலோனா கால்பந்து கிளப்புடன் விடைபெற்றதை அடுத்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனது கண்ணீரை அடக்க போராடியபோது மிகவும் இதயத்தை உடைக்கும் தருணம் வைரலானது. அந்த உணர்ச்சிகரமான தருணம் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த ஐகான் உடைந்ததைப் பார்த்து கண்ணீர் விட்டனர்.
செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றும் போது, மெஸ்ஸி தனது அணிக்கு முன்னால் உடைந்து தனது கண்ணீரைத் துடைக்க ஒரு துணியைப் பயன்படுத்தினார், அதை அவரது மனைவி அன்டோனெலா ரோகுஸோ அவரிடம் கொடுத்தார்.
அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அது தொடர்பான ஒரு சுவாரசியமான செய்தி தற்போது தலைப்புச் செய்தியாகியுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மெஸ்ஸி கண்ணீரை துடைக்க பயன்படுத்திய டிஷ்யூ ஏலத்தில் விடப்பட்டது போல் தெரிகிறது.
அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, அது தொடர்பான ஒரு சுவாரசியமான செய்தி தற்போது தலைப்புச் செய்தியாகியுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மெஸ்ஸி கண்ணீரை துடைக்க பயன்படுத்திய டிஷ்யூ ஏலத்தில் விடப்பட்டது போல் தெரிகிறது.
மார்வல் படங்கள் மூலம் உலகளவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் கேப்டன் அமெரிக்கா [Chris Evans]. இவர் பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் தான் இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது.
42 வயதாகும் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியான Alba Baptista என்பவரை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நடிகை Alba Baptistaவிற்கு 26 வயது ஆகும் நிலையில், இருவரும் 16 வயதி வித்தியாசம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த காதல் திருமணம் அவர்களுடைய வீட்டில் தான் நடந்துள்ளது. ரகசிய திருமணம் என்றாலும் தகவல் வெளியாகி கசிய துவங்கிய நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
மொராக்கோ நாட்டை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், இறப்பு எண்னிக்கை தற்போது 2,000 கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை 2,000
மொராக்கோவை பொறுத்தமட்டில் மிக அரிதான சம்பவமாக பார்க்கப்படும் இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் ரிக்டர் அளவில் 7.2 என பதிவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
மொராக்கோ அதிகாரிகள் தெரிவிக்கையில், இதுவரை இறப்பு எண்ணிக்கை 2.000 கடந்துள்ளதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக முடியலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய மக்கள் மிக அதிகமாக செல்ல விரும்பும் Marrakech நகரம் நில்நடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் உள்ளனர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
200 மைல்களுக்கு அப்பால் உள்ள தலைநகர் ரபாத்திலும், காசாபிளாங்கா மற்றும் எஸ்ஸௌயிராவிலும் நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த 24 முதல் 48 மணிநேரம் மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
கொடிகள் அரைக்கம்பத்தில்
இதுவரை 2,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 1,404 பேர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மொராக்கோவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த துக்கக் காலத்தில் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர், உணவுப் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் போர்வைகளை வழங்குவதற்காக நாட்டின் ஆயுதப்படைகள் தங்கள் மீட்புக் குழுக்களை அனுப்பி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்தில் உள்ள கிரேஸ்டோன்ஸ் நகரில் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாடு
ஸ்மார்ட்போன் பயன்பாடு பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் பல குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை விரும்புவதில்லை.
உலகளவில் 10 வயதுடைய குழந்தைகளில், ஐந்தில் 2 பங்கு குழந்தைகள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் யுனெஸ்கோ பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியது.
தடை விதித்த பெற்றோர்கள்
இந்நிலையில் அயர்லாந்து நாட்டில் உள்ள கிரேஸ்டோன்ஸ் எனும் நகரில், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்க வேண்டாம் என அவர்களின் பெற்றோர்களே முடிவெடுத்துள்ளனர்.
முன்னதாக, கிரேஸ்டோன்ஸில் உள்ள 8 பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது பள்ளியின் பெற்றோர் சங்கங்கள் தானாக முன்வந்து, தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் கொடுக்க மாட்டோம் என முடிவெடித்துள்ளனர்.
உலகில் 12 வயதுகளில் உள்ள 71 சதவீத குழந்தைகளும், 14 வயதில் இருப்பவர்களில் 91 சதவீத குழந்தைகளும் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர் என்பது 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவு விபரம் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மை ஒரு அறையில் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்.? முதலில் கொஞ்ச நேரம் வருத்தமாக இருக்கும் பிறகு கோபம் வரும். கொஞ்ச நேரம் சலிப்பு ஏற்படும், பின்னர் நம் கோபத்தை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தத் தொடங்குவோம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் பொறுமையை முற்றிலுமாக இழக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தில் சிக்கிய ஒருவர் உலகில் இருக்கிறார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இன்றும் அதே நிலையில் தான் அவர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
இந்த மனிதனின் பெயர் பால் அலெக்சாண்டர். அவர் ஒன்றல்ல இரண்டல்ல கடந்த 70 ஆண்டுகளாக இயந்திரத்திற்குள் பூட்டப்பட்டுள்ளார். அந்த இயந்திரத்திற்குள் இருந்தபடியே உணவு மற்றும் பானங்கள் அனைத்தும் எடுத்துக்கொள்கிறார்.
சுவாரஸ்யமாக, இயந்திரத்தில் சிக்கியிருந்தாலும், அவர் பட்டப்படிப்பு படித்தார். புத்தகமும் எழுதினார். ஆனால் இத்தனை வருடங்களாக அந்த நபர் ஏன் இயந்திரத்தில் சிக்கியிருக்கிறார் என்று தெரிந்தால் சிலருக்கு அழுகையே வந்துவிடும். அந்த கண்ணீர் கதையை இங்கு காண்போம்..
இந்த மனிதனின் பெயர் பால் அலெக்சாண்டர். அவருக்கு இப்போது 77 வயதாகிறது. அவர் போலியோ பால் என்றும் அழைக்கப்படுகிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் பால், 1952-ஆம் ஆண்டு அவருக்கு 6 வயதாக இருந்தபோது போலியோவால் பாதிக்கப்பட்டார். இந்த நோயால் அவரது உடல் முழுவதும் செயலிழந்தது. கழுத்தில் உள்ள பகுதி மட்டும் வேலை செய்கிறது. அவரது உடல் முழுவதும் உயிரற்ற நிலையில் இருந்தது. இந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை ஒரு இயந்திரத்தில் ஏற்றினர். அதுவே அவரது உயிரைக் காப்பாற்றியது. இந்த இயந்திரத்தின் பெயர் இரும்பு நுரையீரல்.
அறிக்கையின்படி., பாலை இயந்திரத்திலிருந்து வெளியே எடுக்கலாம். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவர் இயந்திரத்திற்குள் தனது வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்தார்.
இந்த இரும்பு நுரையீரல் இயந்திரத்தில் மிக நீண்ட காலம் வாழும் நோயாளியாக பால் இப்போது இருக்கிறார். கின்னஸ் உலக சாதனைகளிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
அவரது பராமரிப்புச் செலவுகளுக்காக கடந்த ஆண்டும் நிதி வசூலிக்கப்பட்டது. ஒரு நிதி திரட்டுபவர் அவருக்காக 1 லட்சத்து 32 ஆயிரம் டொலர்களை வசூலித்தார்.
இந்த பரிதாப நிலை இருந்தும் பால் மனம் தளராமல் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். பல ஆண்டுகளாக வழக்கறிஞர் பயிற்சி செய்தார். அதன் பிறகு அவர் தன்னைப் பற்றி ஒரு புத்தகத்தையும் எழுதினார். இவை அனைத்தும் அவரை இந்த இயந்திரத்திற்குள் இருந்தபடியே செய்துள்ளார்.
மேலும், வாயால் அற்புதமாக ஓவியம் வரையக் கூடியவர் என்பது இவரின் மிகப்பெரிய சிறப்பு.
தற்போது, அலெக்சாண்டர் கான்ட்ராப்ஷனுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளார் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ், டல்லாஸில் உள்ள ஒரு வசதியில் 24 மணிநேரமும் கவனிப்பு தேவைப்படுகிறது.
ஜேர்மனியின் ஹார்ஸ் மலைப் பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கோட்டையில் நிர்வாண கோலத்தில் மர்ம மனிதன் ஒருவரை நேரில் பார்த்துள்ளதாக சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஜேர்மன் வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபர் குடியிருந்து வருவதாக நம்பப்படுகிறது. அந்த மர்ம மனிதரின் புகைப்படத்தை இரு மலையேறும் பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
அந்த நபர் ஒரு பாழடைந்த கோட்டையின் அடிவாரத்தில் நிர்வாணமாக உட்கார்ந்து ஒரு மர ஈட்டியைப் பிடித்திருப்பதைக் கண்டுள்ளனர். தொலை தூரத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட புகைப்படம் என்பதால், காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை.
இருப்பினும், அந்த மனிதன் தரையில் அமர்ந்து மணலில் விளையாடுவது போல் காணப்படுகிறார். 31 வயதான Gina Weiss மற்றும் அவரது நண்பர் 38 வயதான Tobi ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மதியத்திற்கு மேல் Blankenburg பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஒரு மணல் குகைகள் அருகே சென்றபோது அந்த மர்ம நபரை பார்த்ததாக குறிப்பிட்டுள்ளனர். மரத்தாலான ஈட்டியுடன் கற்கால நபர் போல நிர்வாண கோலத்தில் காணப்பட்டுள்ளார்.
அவருக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும் எனவும், சுமார் 10 நிமிடங்கள் அவர் அந்த பகுதியில் காணப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் Blankenburg பகுதியில் இதுபோன்ற மர்ம நபர்கள் தென்படுவது இது முதன்முறை அல்ல எனவும், கடந்த 5 வருடங்களில் பலர் இப்படியான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் அப்படியான நபர் அந்த வனப்பகுதியில் இல்லை எனவும், மக்களை ஏமாற்ற இதுபோன்ற புகைப்பட வதந்திகள் பரவலாக வெளியிடப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இதனாலையே மக்கள் இதுபோன்ற கட்டுக்கதைகளை உருவாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நதி என்றால் நிறைய தண்ணீர் ஓடும். நடுவில் அழகான மணல் திட்டுகள் இருக்கும். ஆனால், ரஷ்யாவில் உள்ள ஒரு நதியில் அப்படி எதுவும் இல்லை. தண்ணீரின் தடயமே தெரியவில்லை. அப்படியென்றால் அந்த ஆற்றில் தண்ணீர் இல்லை என்றுதானே அர்த்தம்.. மழைக்காலங்களில் மட்டும்தான் தெரியும் என்று நினைக்கிறீர்களா..? ஆனால் அப்படி இல்லை. இந்த ஆற்றில் பாறைகள் மட்டுமே காணப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தெரியவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கற்கள் பெரிய பாறைகள். அதனால்தான் இது ‘ஸ்டோன் ரிவர்’ அல்லது ஸ்டோன் ரன் என்று அழைக்கப்படுகிறது.
பாறைகள் நிறைந்த இந்த ஆற்றில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை பெரிய பாறைகள் மட்டுமே தெரியும். யாரோ நேர்த்தியாக அடுக்கி வைத்தது போல் இருக்கும் பாறைகள் கூட ஆச்சர்யமளிக்கிறது.
இந்த ஆற்றில் உள்ள கற்கள் ஒவ்வொன்றும் 10 டன் எடை கொண்டவை. இந்த பாறை நதியைச் சுற்றிலும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடு. இந்தக் காட்டில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. கல் நதி என்று அழைக்கப்படும் இந்த கடை நதி ரஷ்யாவில் அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் யூரல்ஸ் பகுதியில் உள்ள டாகானி மலைகளில் உருவாகி சில நூறு கிலோமீட்டர்கள் பயணிக்கிறது. அந்த ஆறு கிலோமீட்டரிலும், ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அகலங்களைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில இடங்களில் 200 மீட்டர் அகலமும், சில இடங்களில் 700 மீட்டர் அகலமும் உள்ளது. அதனால் ஆறு கிலோமீட்டர் தூரம் சென்றாலும் கண்ணில் படவில்லை, ஒரு குவளை தண்ணீர் கூட இல்லை.
தண்ணீர் இல்லை என்றால் அதை எப்படி நதி என்று சொல்வது? என்ற கேள்வி வரலாம். இங்கு அந்தப் பெரிய பாறைகளுக்கு அடியில்தான் தண்ணீர் எல்லாம் ஓடுகிறது.
அருகில் சென்றால் தண்ணீர் நன்றாக தெரியும். ஆனால் இந்த ஆற்றில் உள்ள மற்றொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த நதியில் உள்ள நீர் பாறைகளை கடந்து ஓடுவதில்லை, அதாவது அவை மூழ்கிவிடும். ஆற்றில் உள்ள நீர் பாறைகளைத் தாண்டி வெளியே வருவதில்லை.
இந்த பாறை நதி இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாகும். இந்த பாறை நதியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த கற்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விஞ்ஞானிகளின் கணிப்பின்படி.. அப்போது தாகனேய் மலைகள் முற்றிலும் பனியால் மூடப்பட்டிருந்தன. அந்த மலைகள் 15 ஆயிரம் அடிக்கும் அதிகமாக இருந்தது. பனியின் கனத்தால் கற்கள் துண்டு துண்டாக உடைந்து, நாளடைவில் பனி உருகத் தொடங்கிய பின், கற்கள் அனைத்தும் வெளியேறின. தண்ணீர் ஓட்டத்தின் வேகத்தால் அவை அனைத்தும் சறுக்கி ஆற்றில் குவிகின்றன.
இந்த ஆற்றில் உள்ள பாறைகளில் சிலிக்கா மற்றும் இரும்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் அவை பளபளப்பாகத் தெரிகின்றன. தூரத்தில் இருந்து பார்த்தால் ஆற்றில் கற்கள் ஓடுவதைப்போல் உணரலாம். ஆனால் உண்மையில் கற்கள் அசையாதவை மற்றும் நிலையானவை. ஆனால் தண்ணீர் கீழே இருந்து பாய்கிறது.
நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா 15 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்து திரும்பினார்.
2001ல் தாய்லாந்தின் பிரதமராக பதவியேற்று, 2006ல் ராணுவ புரட்சியில் பதவி பறிக்கப்பட்ட ஷினவத்ரா, 15 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்.
டான் மியூயாங் விமான நிலையத்தில் தக்சின் ஷினவத்ராவை வரவேற்க ஆயிரக்கணக்கான சிவப்பு உடை அணிந்த ஆதரவாளர்கள் திரண்டனர். Futai கட்சியின் முக்கிய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
சினவத்ரா சிறையிலிருந்து தப்பித்து திரும்ப 20 முறை முயன்றார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஷினவத்ரா திரும்பியுள்ளார்.
2008-ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் தண்டனைக்கு சற்று முன்னதாக, ஷினவத்ரா தாய்லாந்துக்குள் நுழைந்தார். ஊழல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளைத் தவிர்க்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டது.
நாடு திரும்பிய சினவத்ரா ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியதற்காக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார். எவ்வாறாயினும், அவருக்கு 74 வயது ஆவதால், அவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடு சிலி. இதன் தலைநகர் சான்டியாகோ.
சான்டியாகோவை தளமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு விமான நிறுவனம் ‘லாட் ஆம் விமான நிறுவனம்.
இதன் வர்த்தக விமானமான LA505 அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாநில மியாமியிலிருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தை தலைமை விமானியான 56 வயதான கேப்டன் இவான் ஆண்டர் என்பவர் இயக்கினார். ஆண்டர் 25 வருடங்களுக்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.
மியாமியிலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே விமானத்தின் டாய்லெட் அறைக்கு ஆண்டர் சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
hஇது தெரிய வந்ததும் உடனடியாக துணைவிமானி விமானத்தை இயக்கினார். அதே நேரம், ஆண்டருக்கு அவசர கால முதலுதவி சிகிச்சையும் விமானத்தின் உள்ளே இருந்த குழுவால் கொடுக்கப்பட்டது.
எனினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதனால் விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமாவின் டாகுமென் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவரை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக மருத்துவ நிபுணர் குழு ஒன்று அந்த விமானத்தை அடைந்து அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்க முற்பட்டது. பரிசோதனையில் துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கெனவே இறந்திருந்தது தெரிய வந்தது.
அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பின், விமானம் சிலி நாட்டை நோக்கி பயணித்தது. அவரது இறப்பு குறித்து விமான நிறுவனம் அறிவித்திருப்பதாவது: “ஆண்டரின் உயிரை காப்பாற்ற விமானத்தின் உள்ளே அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டது.
இவான் ஆண்டரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது நீண்ட சேவையையும், அர்ப்பணிப்பையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். அவரது இறப்புக்கு எங்கள் வருத்தங்களை தெரிவிக்கிறோம்.” இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தின் உள்ளேயே எதிர்பாராதவிதமாக தலைமை விமானி உயிரிழந்ததும், விமானம் துணை விமானியால் இயக்கப்பட்டு பத்திரமாக தரையிறங்கியது சிலி நாட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.-
அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே ‘பாப் இசையின் ராணி’ என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவரும் ஸாம் அஸ்கரி (Sam Asghari) எனும் நடிகரும் 5 வருட காலம் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். பிறகு 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது.
இந்நிலையில் தங்களுக்கிடையே ‘தீர்க்க முடியாத’ கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அஸ்கரி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இருவரும் கடந்த ஜூலை 28 முதல் பிரிந்து விட்டதாக அறிவித்து, அஸ்கரி நேற்று விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
மேலும் ஈட்டு தொகையையும், வழக்கறிஞர் கட்டணத்தையும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் தான் தர வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.
விவாகரத்து கோரும் தம்பதியினருக்கு சொத்து பிரிவினை செய்யும் போது சிக்கல்கள் ஏற்படுவதனால், விவாகரத்து கிடைக்கும் காலம் நீள்வதும், இதனால் அவர்களின் எதிர்கால திட்டங்கள் தாமதமடைவதும் நடந்து வந்தது.
இதனை தவிர்க்க திருமணத்திற்கு பிறகு ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டால், அதற்கு பிறகு பிரித்து கொள்ள வேண்டிய சொத்துக்கள் மற்றும் தங்கள் முன்னாள் மணத்துணை குறித்து எப்போதும் வெளியில் கருத்து கூறாமல் இருப்பது உள்ளிட்ட பல அம்சங்களை இணைத்து மேலை நாடுகளில் திருமணத்திற்கு முன்பாக ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.
‘ப்ரி நப்ஷல் ஒப்பந்தம்’ (pre-nuptial agreement) எனும் இதனை ப்ரிட்னி வலுவாக செய்திருப்பதாகவும் அதனால் விவாகரத்திற்கு பிறகும் தனது சொத்துக்களை காப்பாற்றி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ரிட்னி ஸ்பியர்ஸின் சொத்து மதிப்பு சுமார் ரூ.498 கோடி ($60 million) ஆகும். பிரபலமானவர்களின் விவாகரத்து வழக்குகளை நடத்தும் லாரா வாஸ்ஸரை தனது தரப்பு வழக்கறிஞராக ப்ரிட்னி நியமித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரிட்னியின் புகைப்படங்களில் அவர் திருமண மோதிரத்தை அணியாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எவ்வாறு அவர் அமைத்து கொள்ள போகிறார் என்பதை அறிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இத்தாலியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் நகரமொன்றை சூழ்ந்தது மக்களை பீதியடைய செய்தது.
கனமழை வெள்ளம்
ஐரோப்பிய நாடான இத்தாலியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் Bardonecchia.
இங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், மெர்டோவின் நதியில் சேற்று சுனாமி வெள்ளத்துடன் சேர்ந்து விட்டது.
ஆர்ப்பரித்து வந்த வெள்ளத்தைக் கண்டு மக்கள் பீதியடைந்தனர். நகரின் நடுவே ஓடும் இந்த நதியில் உண்டான சேற்று சுனாமியால் நகரம் முழுவதும் சேற்றால் பூசப்பட்டது போல் மாறியது.
எனினும் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 120 பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீயணைப்புப் படையினர் வீதிகளில் சேற்றில் சிக்கிய கார்கள் உள்ளிட்ட வாகனங்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.