கோவை

விபத்தில் இறந்த மகன்… உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!

Quick Share

கோவையில் கிணற்றுக்குள் மூழ்கி மகன் பலியான துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் கணுவாய் ரோட்டை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர் (வயது 46). தொழில் அதிபர். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் சிறுவாணி அருகே உள்ள ரிசார்ட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட சென்றார்.

பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் ஒரு காரில் வீட்டிற்கு திரும்பினார். கார் தென்னமநல்லூர் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர். இந்தநிலையில் தங்களது ஒரே மகன் விபத்தில் இறந்ததால் சஞ்சீவ் சங்கர் மற்றும் நந்தினி ஆகியோர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

அவர்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாத நிலையில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சீவ்சங்கர், நந்தினி ஆகியோர் பூச்சி மருந்தை குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கினர். நந்தினியின் அண்ணன் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக நந்தினியின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் தனது தங்கை மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் சங்கர் ஆகியோர் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நந்தினி, சங்சீவ் சங்கர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

வாட்டர் ஹீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாயும், மகளும் உயிரிழந்த ...

Quick Share

கோவை மாநகரை அடுத்த துடியலூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கோவையில் உள்ள வீட்டில் அவரது மனைவி கார்த்திகா (52) மற்றும் மகள் அர்ச்சனா(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் அர்ச்சனா கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்காக தயாராகியுள்ளார். இதையொட்டி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பக்கத்தில் இருந்த தண்ணீரில் பாய்ந்துள்ளது. தண்ணீரை தொட்ட அர்ச்சனாவிற்கு எலக்ட்ரிக் ஷாக் அடித்துள்ளது. இதனால் அலறி துடித்துள்ளார்.

சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து அவரது அம்மா கார்த்திகா ஓடி வந்துள்ளார். அவர் தனது மகளை காப்பாற்ற உள்ளே வந்த போது அவருக்கும் ஷாக் அடித்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அர்ச்சனாவை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்ஸிகாரர் வீட்டின் அருகே வந்துள்ளார். அவர் காலிங் பெல் மற்றும் செல்போன் மூலம் அழைத்தும் பலனில்லை.

யாரும் போன் எடுக்கவில்லை. கதவும் திறக்கப்படவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பாத்ரூமில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மின்சாரத்தை துண்டித்தவர்கள் துடியலூர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆணின் கை குப்பை தொட்டியில் கிடந்ததால் பரபரப்பு.. கொலையாளி யார்?

Quick Share

கோவை அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் கை குப்பை தொட்டியில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
கோவை துடியலூர் அருகே வி.கே.எல் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பை தொட்டியில் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது, தொட்டியில் இருந்து எடுத்து லாரியில் போடப்பட்ட பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. 

அருகில் சென்று பார்த்தபோது 2 துண்டுகளான துண்டிக்கப்பட்ட ஆணின் கை ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கிடந்த கையை கைப்பற்றி ஆய்வு செய்த போது 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்தது. உடனடியாக 10 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை விரைந்து பிடிக்குமாறு காவல்துறைக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

உறவினருடன் செல்பி எடுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

Quick Share

கோவை இடையர்பாளையம் டிவி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் ஜான் (49). இவரது மனைவி கிரேஸ் பியூலா (33). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடிமையாகி பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கிரேஸ் பியூலா சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட், கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இதை அடுத்து மீண்டும் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு தங்கை வீட்டிற்கு சென்று மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து கழுத்திலும் வெட்டியுள்ளார். இதைக் கண்ட அவரது மகள் பயத்தில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து அப்போது கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கும் செல்போன் மூலம் அழைத்து தகவலை கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த அவர் இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


ஒன்றரை வயதில் உலக சாதனை படைத்த குழந்தை; குவியும் பாராட்டுக்கள்…!!

Quick Share

கோவை இடையார்பாளையம் அன்பு நகரை சேர்ந்தவர் கீர்த்திக்குமரன். இவரது மனைவி சுகன்யா லட்சுமி.

இவர்களின் 1 வயது 4 மாத குழந்தை சக்தி கந்தராஜ்.

குழந்தை சக்தி கந்தராஜ் தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை (பிளாஸ் கார்ஸ்) சரியாக சுட்டி காட்டி வியக்க வைத்து கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

கலாம் உலக சாதனை புத்தகம் சார்பில் குழந்தை சக்தி கந்தராஜை பாராட்டி ‘எக்ஸ்ட்ராடினரி கிரஸ்பிங் பவர் ஜெனியூன் கிட்’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்து உள்ளது.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற குழந்தையை உறவினர்கள் பாராட்டி வருகின்றனர்

மூதாட்டியிடம் நகையை பறித்து சென்று சிக்கிய காதலர்கள்.. என்ஜினீயரிங் மாணவர்கள் …!!

Quick Share

கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே வழக்கம்போல ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்தார். தொடர்ந்து அந்த வாலிபர் காளியம்மாளிடம் பேச்சு கொடுத்து, ஒரு முகவரியை கேட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இளம் பெண்ணுடன் தப்பி சென்றார். இந்த சம்பவம் காளியம்மாள் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

இதில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றது வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள காஸ்மா கார்டனை சேர்ந்த பிரசாத் (20) என்பதும், கோவை சுங்கம் ரோடு ஸ்ரீ நகர் முதல் வீதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேஜாஸ்வினி (20) என்பதும், இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.டெக் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு காதல் ஜோடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் 17 வயது சிறுமி 72 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்...

Quick Share

17 வயது சிறுமி ஒருவர் 72 வயது மூதாட்டியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

72 வயது முதியவர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் நாகலட்சுமி(72). இவருக்கு செந்தில்வேல் என்ற மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவர் மகன் செந்தில்வேல் மற்றும் பேரனுடன் மாரியப்பன் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை செந்தில் வேல் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். 

அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் மூதாட்டி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, செந்தில்வேலுக்கு தகவல் கொடுத்தனர்.

கழுத்தை நெறித்து கொலை

வீட்டுக்கு வந்து செந்தில்வேல் பார்த்த போது தாயின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த 15 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிக்கிய 17 வயது சிறுமி

கண்காணிப்ப கேமரா காட்சிகள் 17 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்குள் சென்று ஒரு மணி நேரமாக திரும்பி வராதது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தான் காதலித்த இளைஞரை திருமணம் செய்வதற்காக பணம் தேவைப்பட்டதால், மூதாட்டியை கொலை செய்து நகையை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் சிறுமி திருடிய 15 சவரன் நகை அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது. காதல் திருமணம் செய்ய பணம் இல்லாததால் 17 வயது சிறுமி மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து 15 சவரன் நகை திருடிய சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

Quick Share

கோவை கிணத்துக்கடவு அருகே 6 ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கிட்டனம்மாள். பழனி கூலித்தொழிலாளி. இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 பெண்களும் ஈஸ்வரன் (13), அர்ஜூனன் (12) ஆகிய 2 மகன்கள் என மொத்தம் 5 பேர் உள்ளனர். 

இதில் ஈஸ்வரன், அர்ஜுனன் இருவரும் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். ஈஸ்வரன் 8-ம் வகுப்பும், அர்ஜூனன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில்  ஈஸ்வரனும், அர்ஜுனனும் அடிக்கடி செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாடுவது சம்பந்தமாக சண்டை போட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு செல்போனில் ப்ரிபயர் கேம் விளையாட இருவரும் செல்போனுக்காக சண்டை போட்டனர். இதில் அர்ஜுனன் கீழே கிடந்த பிராந்தி பாட்டிலிலை எடுத்து உடைத்து தனக்குத்தானே வயிற்றில் குத்த முயற்சித்துள்ளான். இவர்களது அம்மா கிட்டனம்மாள் அதை பிடுங்கி சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் ப்ரிபயர் கேம் விளையாட செல்போன் கேட்டு இருவரும் சண்டை போட்டனர். இருவரையும் அக்கா வேப்பிலைக்காரி சமாதனம் செய்துள்ளார். 
அப்போது கோபமடைந்த அர்ஜுனன் வீட்டுக்குச் சென்று ஜன்னலில் தூக்குபோட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அர்ஜுனன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் சாவுக்கு காரணம் செல்போனில் கேம் விளையாடும் போது ஏற்ப்பட்ட தகறாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கட்டப்பையில் வைத்து வீசப்பட்ட 10 நாள் பச்சிளங்குழந்தை !

Quick Share

கோவையில் கட்டைப்பையில் வைத்து கோவிலில் வைக்கப்பட்ட பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மீட்டு, மாநகராட்சி அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை விமான நிலையம் அருகே உள்ள துரைசாமி நகரில், ராஜகணபதி கோவில் உள்ளது. 

இந்த கோவிலில், பிறந்து சில தினங்களே ஆன குழந்தை, கட்டைப்பையில் வைக்கப்பட்டு இருப்பதாக காவல் துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பீளமேடு காவல்துறையினரும், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணனும் கோவிலுக்கு சென்று குழந்தையை மீட்டனர்.

இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. 

அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில், அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

குழந்தையை பையில் வைத்து விட்டுச் சென்றவர்கள் யார்..? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமையல்காரரை நிர்வாணமாக்கி கல்லூரி மாணவர்கள் செய்த அட்டூழியம்…

Quick Share

சமையல்காரரரை நிர்வாணமாக்கி கல்லூரி மாணவர்கள் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன்(34). இவர் காந்திபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். 

ஓரினச்சேர்க்கையாளரான இவர் இது சம்பந்தமான சமூக வலைதள செயலியில் உறுப்பினராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரனை வாலிபர் ஒருவர் செயலியில் கங்காதரனின் செல்போன் எண்ணை பார்த்து அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

தனிமையில் இருப்பதற்கு ரயில்வே தண்டவாளத்திற்கு பின்னே வரக்கோரிய இளைஞரின் அழைப்பினை ஏற்று கங்காதரன் குறித்த இடத்திற்கு வந்துள்ளார்.

அப்போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் கத்தியால் கங்காதரனை மிரட்டி அவரை நிர்வாணப்படுத்தி காணொளி எடுத்ததோடு, அவ்வப்போது காணொளியை காண்பித்து மிரட்டி பணம் பறித்தும் வந்துள்ளனர்.

பின்பு கங்காதரன் பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில், சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பிரசாந்த் (19), நிஷாந்த்(21), மாணிக்கம் (20) ஆகியோர் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதில் பிரசாந்த் மற்றும் நிசாந்தை கைது செய்த பொலிசார் தலைமறைவாக இருக்கும் மாணிக்கத்தை் தேடி வருகின்றனர்.

தனது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனைவி! அதிர்ச்ச...

Quick Share

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் வினோத் குமார் (36). இவர் அதே பகுதியில் பாம்பு பிடிப்பது மற்றும் கால்நடைகளுக்கு பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி. தையல் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கிஷோர் மற்றும் நட்சத்திரா என இரு குழந்தைகள் உள்ளனர்.

வினோத் குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் நேற்று இரவும் வினோத்குமார் குடித்துவிட்டு வந்து எனது மனைவி மகாலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முத்திப்போகவே ஆத்திரமடைந்த மகாலட்சுமி தான் தையலுக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து கணவரை நெஞ்சில் ஆழமாக குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தால் வினோத்குமார் கூச்சலிட்டு கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த வினோத்குமாரை நீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வினோத்குமார் செல்லும் வழியிலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

கணவர் உயிரிழந்த செய்தியை கேட்ட மனைவி உடனடியாக வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சரண் அடைந்தார். தற்போது காவல்துறையினர் மகாலட்சுமி கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகமடைந்த கணவரை ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல் !…ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அ...

Quick Share

மொபைல் ஆப் மூலம் ஆண்களை ஓரினச் சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல், அவர்களை நிர்வாணபடுத்தி வீடியோ எடுப்பதும், சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஒரு மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (34).

இவர் கோவையிலுள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வருகிறார். கங்காதரன் தன்னுடைய செல்போனில் ஓரினைச் சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் (BLUED APP) செயலி ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த செயலி மூலம் கங்காதரனை தொடர்பு கொண்ட பிரசாந்த், ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். சாய்பாபா காலனி பகுதியிலுள்ள தனியார் மருத்துவனையின் பின்புறம் உள்ள ரயில்பாதை அருகே பிரசாந்த், தனது நண்பர்களான நிசாந்த் மற்றும் மாணிக்கம் ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுள்ளார்.

நள்ளிரவு 2.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கங்காதரன்- பிரசாந்த் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, அதை மறைந்திருந்த நிசாந்த் மற்றும் மாணிக்கம் இருவரும் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டிய மூவரும், கங்காதரனை தாக்கியதாக தெரிகிறது.

பின்னர் கையிலிருந்த 2500 ரூபாய் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசில் தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அச்சத்தில் இருந்த கங்காதரன் சம்பவம் தொடர்பாக நேற்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 397 (கொலை அல்லது கொடூரமான காயத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் கொள்ளை அல்லது கொள்ளை) மற்றும் 506 (ii) (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு பதிவு செய்த போலீசார் மூன்று இளைஞர்களையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரசாந்த் மற்றும் நிசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசார் இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சிவானந்தா காலனி பகுதியைச் பிரசாந்த் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியிலும், நிசாந்த் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

மூன்று மாணவர்களும் இணைந்து பிரபல ஒரின சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் ஆண்களை குறிவைத்து ஓரின சேர்க்கைகு அழைத்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதோடு அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரை, இதேபோன்று ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்து உள்ளதாகவும், கடந்த மார்ச் 9-ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த மருந்தாளுநரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துள்ளதும் போலீஸார் நடத்திய விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.




You cannot copy content of this Website