சென்னை
சென்னை விமானநிலையத்தில் ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள்..அலறிய பயணிகள்.!
சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று வந்துள்ளது. அதை விமானநிலைய அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்தனர்.
அப்போது அதில், ராஜநாகங்கள், குரங்குகள், மலைப்பாம்புகள் போன்ற விலங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அவற்றை அதே விமானத்தில் மீண்டும் பாங்காக்கிற்கே திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் கரையான் தொல்லை இருந்ததால் அழிக்கத் தீ வைத்த தந்தை- உடல் கருகி 13 வயது மகள் பரி...
சென்னை அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசேன்பாட்ஷாவின் 13 வயது மகள் பாத்திமா. இவர்கள் வீட்டில் கரையான் தொல்லை இருந்ததால், அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என அசேன்பாட்ஷா நினைத்துள்ளார். இதையடுத்து தீ வைத்து கரையானை அழித்துவிடலாம் என அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த 31ம் தேதி பெயின்டில் கலக்கும் தின்னரை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது திடீரென வீடு முழுவதும் தீ பிடித்துள்ளது. இதில் அசன்பாட்ஷா, அவரது மனைவி, மகள் பாத்திமா ஆகிய மூன்று பேரும் தீயில் சிக்கியுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இதில் சிறுமி பாத்திமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் லேசான தீக்காயத்துடன் அசன்பாட்ஷா அவரது மனைவி உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரையானை அழிக்க வைக்கப்பட்ட தீயில் 13 வயது சிறுமி ஒருவர் தீ பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியின் 300 சவரன் நகையை திருடி இளம்பெண்ணுக்கு கார் பரிசளித்த கணவன்!
சென்னை அருகே சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடியவரை இளம்பெண்ணுடன் போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர்(40) இவரது தம்பி ராஜேஸ்(37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஸ்விட் கடை உள்ளது. மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்த அவர் பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து மேலும் ராஜேஷ் தனது சோதனை செய்த போது தனது மனைவி மற்றும் அம்மாவின் சுமார் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையெடுத்து இச்சம்பவம் குறித்து ராஜேஷ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சேகரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம். மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகையை திருடிய சேகர் மற்றும் அவரது தோழி ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்து ஸ்வாதியிடமிருந்து கார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து மேற்க்கொண்டு வருகின்றனர்
பாரிஸ் கார்னருக்கு வந்த சோதனை-256 கடைகளுக்கு சீல் ..ஆடிப் போன வியாபாரிகள்!

சென்னையில் வர்த்தக ரீதியாக மிகவும் புகழ்பெற்று விளங்கும் பகுதி பாரிஸ் கார்னர். இது பெருமாள் முதலி தெரு, ஆண்டர்சன் தெரு, மின்ட் தெரு உள்ளிட்ட 25 சிறிய வீதிகளை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தெருவிலும் ஒரு குறிப்பிட்ட பொருட்களை கொண்ட கடைகள் மட்டும் இருக்கும். அதாவது ஆடைகள், நகைகள், பாத்திரம், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, உணவு என அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்.
இவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க முடியும். எந்நேரமும் கூட்டம் நிரம்பி காணப்படும் இப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் பழமையான பகுதியாகும். இந்நிலையில் பாரிஸ் கார்னரில் உள்ள டிவிகள், டிவிடி பிளேயர்கள், திரைப்பட சிடிக்கள், ஸ்பீக்கர்கள், லைட்கள் உள்ளிட்டவற்றை விற்கும் 256 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
256 கடைகளுக்கு சீல்
ஏனெனில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனர். இதன்மூலம் மாநகராட்சிக்கு 58 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகள் அனைத்தும் நார்த் பீச் ரோட்டில் உள்ள பர்மா பஸார் எக்ஸ்டன்ஷனில் இருக்கின்றன. இதுபற்றி சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி ஜி.தமிழ்செல்வன் கூறுகையில், பர்மா பஸார் எக்ஸ்டன்ஷனில் உள்ள 272 கடைகளில் 256 கடைகள் வாடகை செலுத்துவதே இல்லை.
வாடகை என்னாச்சு?
ஒவ்வொரு மாதமும் வெறும் 400 ரூபாய் மட்டும் வாடகையாக செலுத்த வேண்டும். அதைக் கூட அவர்கள் செலுத்தவில்லை. இவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விளக்கம் கேட்டோம். வாடகையை தவறாமல் செலுத்துமாறு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த சூழலில் கடைகள் சீல் வைக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதன் உரிமையாளர்கள் பலரும் வந்து DD-கள் மூலம் வாடகை பாக்கியை செலுத்த முன் வந்தனர்.
ஏன் இவ்வளவு லேட்?
மாநகராட்சிக்கு பணம் வந்து சேர்ந்த உடன், கடைகளை திறக்க அனுமதி அளிப்போம் என்றார். மேலும் பேசுகையில், பர்மா பஸார் பகுதியில் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன எனக் கூறினார். அதேசமயம் சமூக ஆர்வலர் டேவிட் மனோகர் கூறுகையில், 7 ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. ஏன் இவ்வளவு தாமதமாக தற்போது நடவடிக்கை எடுக்கிறார்கள்.
அதிகாரிகளுக்கு செக்
மாநகராட்சி அதிகாரிகளுக்கு தற்போது தான் தெரிந்ததா? குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஒருவேளை அரசியல் அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். இத்தனை ஆண்டுகள் வரி வசூலிக்காமல் இருந்த அதிகாரிகளை முதலில் விரட்டி அடிக்க வேண்டும். உரிய நேரத்தில் வரி வசூலிக்கப்பட்டால் உள்கட்டமைப்பு வசதிகளை சரியாக மேம்படுத்த முடியும்.
வங்கிகளில் செலுத்தினால் போதிய வட்டியும் கிடைக்கும் என்று அறிவுறுத்தினார். இதற்கிடையில் எழும்பூரில் உள்ள பாந்தியோன் லேன் பகுதியில் நீதிமன்றம் உத்தரவு இருந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்களா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
ஆண் நண்பர் பேசாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
சென்னை அடுத்து வளசரவாக்கம், பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணராவ். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி (25), பட்டப்படிப்பு முடித்த இவர் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் அரிதா ராஜேஷ்வரி உடலை கைப்பைற்றி விசாரணை நடத்தினர். இதில், அரிதா ராஜேஸ்வரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதுமோகன் என்பவரிடம் நண்பராகப் பழகி வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக அரிதா ராஜேஸ்வரியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன மிகுந்த மன உளைச்சலிலிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முன்பு அரிதா ராஜேஷ்வரி எழுதிய தற்கொலை கடிதமும் போலிஸாருக்கு கிடைத்துள்ளது.
ஏ.சி. வெடித்ததால் உயிரிழந்த மகன் !!கதறும் குடும்பம்
சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் உறங்கிக் கொண்டிந்தார்.
அங்கிருந்த ஏ.சி.இயங்கியதால் அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் அறையில் இருந்து புகை வெளிவந்ததை கண்ட தந்தை பிரபாகர், அதை உடைத்து பார்த்தபோது தீக் காயங்களுடன் மகன் ஷியாம் அலறியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக தண்ணீரை ஊற்றி காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அதற்குள் ஷியாம் படுக்கையில் கருகி நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஏ.சி.வெடிப்புக்கு மின்கசிவு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
அடித்து உதைக்கும் ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்.. பெரும்பாக்கத்தில் ஸ்விக்கிக்கு தடை.. வைரலாக...
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 503 குடியிருப்புகள் உள்ளது. இங்கு ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி பாய் நேற்று முந்தினம் மாலை 4 மணிக்கு உணவு டெலிவரிக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட் மூலம் உணவு டெலிவரி பாய் சென்றுள்ளார். அப்பொழுது லிப்ட் சரிவர இயங்காமல் கோளாறு ஆனதால் லிப்டில் உள்ள எமர்ஜன்சியை அழுத்தியதாக கூறப்படுகிறது. வெளியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஒடிசாவை சேர்ந்த 33 வயதான பிரதீப்குமார் ராவத், லிப்ட்டை சீக்கிரம் திறக்கவில்லை என ஸ்விகி பாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்
பின்னர் அங்கிருந்து சென்ற டெலிவரி பாய் பெரும்பாக்கம் எட்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சரத்குமார் என்ற ஸ்விகி டெலிவரி பாய், அவரது நண்பர்கள் மூவரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து காவலாளியை தாக்கியுள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு காவராளியை ஸ்விகி டெலிவரி பாய் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கும் காட்சி அங்கு பாதுகாப்பிற்காக பொறுத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் உணவி டெலிவரி செய்யும் இளைஞர்கள் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை நண்பர்களுடன் தாக்கும் அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சி.எஸ்.ஆர் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்விகி டெலிவரி பாய் குடியிருப்பு காவலாளியை நண்பர்களுடன் தாக்கியதால் இன்று முழுவதும் அந்த குடியிருப்பு பகுதியில் ஸ்விகி டெலிவரி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மது, பிரைட் ரைஸ் வாங்கிக்கொடுத்து ரவுடியை வெட்டிக்கொன்று பழி தீர்த்த கும்பல்!!சென்னையில...
சென்னை, சோழவரம் சிவந்தி ஆதித்தன் நகர் சுப்பிரமணி பாரதி தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் (எ) மதிவாணன்(26). இவர், மீது கொலை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், சோழவரம் பகுதியில், நேற்று நள்ளிரவில், மணிவண்ணணை, பஜனை கோயில் தெருவை சேர்ந்த ராம்கி (25) மது அருந்த அழைத்தார்.
மணிவண்ணன், அவரின் நண்பர்கள் அட்டந்தங்கலை சேர்ந்த சரத்குமார்(19), நாகத்தம்மன் நகரை சேர்ந்த தனுஷ் (18) ஆகியோரை அழைத்தார். பின்னர், அனைவரும் விடிய விடிய மது அருந்தியுள்ளனர். பின்னர், ராம்கி, மணிவண்ணனுக்கு, பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து கொடுத்தார்.
அப்போது, ராம்கி, பிரபாகரன் என்பவருக்கு போன் செய்து மணிவண்ணன் போதையாகி விட்டார், வந்தால் முடித்து விடலாம் என தகவல் கொடுத்துள்ளார். அங்கு பிரபாகரன் (23), சூய்ரா (எ) சொட்டை சூர்யா (22) சீனு (23) ஆகியோர் கிளம்பி வந்தனர். தீடீரென, மணிவண்ணனை சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
தடுக்க வந்த சரத்குமார், தனுஷ் ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர், ராம்கி, பிரபாகரன், சூர்யா, சீனு ஆகியோர் அங்கிருந்து தப்பினர். தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீசார், மணிவண்ணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், கஞ்சா மணியை கொன்றதால், அவரின் சகதோரர் பிரபாகரன் பழி தீர்த்தது தெரியவந்தது. இந்த வழக்கில், ராம்கி, மணிவண்ணன் கூடவே இருந்து, அவர் போதையானதும், பிரபாகரனுக்கு தகவல் கொடுத்ததும், கொலையில் மூளையாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நில்லையில், ஆவடி முத்தாபுதுப்பேட்டையில், ஆட்டோவில் தப்பிய ராம்கி, சூர்யாஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் ரத்தக்கறை படிந்த நான்கு கத்திகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிரபாகரன், சீனு ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சோழவரம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமணமான 3-வது நாளில் விஷம் குடித்த புதுமாப்பிளை தற்கொலை!!
சென்னிமலை அருகே திருமணம் ஆன 3-வது நாளில் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுமாப்பிள்ளை
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் குமார் (வயது 32). இவர் பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் இவர் ஊரில் உள்ள ஒரு கோவிலில் பூஜையும் செய்து வந்தார். கடந்த 19-ந் தேதி குமாருக்கும், மதுரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சென்னிமலையில் திருமணம் நடந்தது.
விஷம் குடித்துவிட்டதாக…
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் குமாரும், அவருடைய மனைவியும் பெருந்துறை செல்வதாக கூறிவிட்டு கொம்மக்கோவிலில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஆனால் மதியம் குமார் மட்டும் வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் மனைவியை எங்கே என குமாரிடம் கேட்டு உள்ளனர். அதற்கு, ‘மனைவி, மதுரைக்கு சென்றுவிட்டதாகவும், தான் விஷம் குடித்து விட்டதாகவும்,’ கூறிவிட்டு குமார் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமார் இறந்தார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி ஏதாவது கோபித்துக்கொண்டு ஊருக்கு சென்றதால் குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளையான குமார் இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது
15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி தாலி கட்டிய சம்பவம்!நண்பர்களுடன் அட்டகாசம்…
15 வயது சிறுமியை திருமணம் 17 வயது சிறுவன் கடத்தி தாலி கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது சிறுமிக்கு திருமணம்
சென்னை புளியந்தோப்பு அருகே அமைந்துள்ளது கொடுங்கையூர். இந்த பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சிறுவனுடன் சேர்ந்து சிறுமி அடிக்கடி வெளியில் சென்று சுற்றி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 7-ந் தேதியன்று புளியந்தோப்பில் உள்ள எல்லையம்மன் ஆலயத்திற்கு சிறுமியை சிறுவன் அழைத்து வந்துள்ளான்.
வீடியோ கண்டு அதிர்ச்சி
அப்போது, தான் தயாராக வைத்திருந்த தாலியை சிறுவன் சிறுமியின் கழுத்தில் கட்டியுள்ளான். மேலும், தாலி கட்டியது மட்டுமின்றி சிறுமியின் நெற்றியில் குங்குமம் வைத்து அழைத்துச் சென்றுள்ளான். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த சிறுவனின் நண்பர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.
பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நண்பனுக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் சென்னையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் உதவி மையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
விசாரணையில் வெளியான உண்மை
இதையடுத்து, குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில்,
அந்த 17 வயது சிறுவனுடன் இந்த 15 வயது சிறுமி பலமுறை தனிமையில் இருந்துள்ளதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், இந்த விவகாரம் குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டிய சிறுவனை தேடியபோது அவன் தலைமறைவாகியது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தாரிடமும், சிறுவனின் குடும்பத்தாரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தலைமறைவாகியுள்ள சிறுவனை தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் பழகி இளைஞர் செய்து வந்த மோசமான செயல்!!
சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
காளியம்மாளுக்கு கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வருகின்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு காளியம்மாளுக்கு அவரது உறவினர்கள் மேட்ரிமோனி மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர்.
அப்போது மேட்ரிமோனி மூலம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த அரவிந்த் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அப்போது காளியம்மாளிடம் தான் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும், தனக்கும் விவாகரத்து ஆனதாகவும் நல்ல வரனை பார்த்து வருவதாகவும், அரவிந்த் கூறியுள்ளார். இதனை நம்பிய காளியம்மாள் திருமணம் தொடர்பாக அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அரவிந்த் அன்பாக நடந்து கொண்டதால் காளியம்மாள் அவரை திருமணம் செய்து ஒப்பு கொண்டார். இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்து பேசி வந்த நிலையில் இருவரும் நெருங்கியும் பழகியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காளியம்மாளை செல்போனில் தொடர்பு கொண்ட அரவிந்த் பெற்றோர் இல்லாமல் தனிமையில் இருக்கும் நீ நகைகள், பணத்தை வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது, எனவே அதனை தன்னிடம் தந்துவிடுமாறு கூரியுள்ளார். அதனை நம்பி அப்பெண்ணும் தன்னிடம் இருந்த 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை தி.நகரில் தங்கியிருந்த அரவிந்தனிடம் கொடுத்துள்ளார்.
நகைகள், பணத்தை பெற்றுக் கொண்ட பின் அரவிந்தனை தொடர்பு கொள்ள முடிவில்லை. அதன் பின்னர் அரவிந்தன் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது அரவிந்த ஏற்கனவே திருமணம் ஆகி இங்கு குடும்பத்துடன் வசித்து வருவது தெரியவந்தது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காளியம்மாள் இது குறித்து சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலிஸார் அரவிந்தனை பிடித்து விசாரணை செய்த போது மேட்ரிமோனியில் கணவர் இல்லாமல் இருக்கும் பெண்கள், விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து திருமணம் செய்வதாக கூறி பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டு அதன் பின் தலைமறைவாகிவிடுவது தெரியவந்தது.
மேலும் அரவிந்த் மீது தேனாம்பேட்டையில் பல பெண்கள் புகார் அளித்திருப்பதும் , தியாகராய நகரில் குடும்பம் நடத்தி வரும் பெண் கூட இது போன்று ஏமாற்றி திருமணம் செய்த பெண் என்பதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண்ணும் அரவிந்த மோசடி பேர்வழி என்று தெரிந்தபின் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
இது போன்று சென்னையில் விவகாரத்து ஆன மற்றும் தனிமையில் இருக்கும் பல பெண்களை அரவிந்த் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரவிந்தை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.