Uncategorized

‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024’: ஒரு பார்வை!

Quick Share

சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ – ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கை, தமிழ்நாடு குறை கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுக் கொள்கை 2024-ஐ முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில், செங்கல்பட்டில் அமையவுள்ள கோத்ரேஜ் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.177 கோடியில் குவால்காம் நிறுவன வடிவமைப்பு மையத்தை தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் – பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்தார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள க்வால்காம் டிசைன் சென்டரை திறந்து வைத்தார். இதேபோன்று பல்வேறு நிறுவனங்களின் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும் டாடா நிறுவனம் சார்பில் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.10,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கோத்ரேஜ் நிறுவனத்தின் உலகளாவிய விநியோக மையம் ரூ.515 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிறுவனம் 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் குழுமம் சார்பில் தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப துறையில் கூடுதல் முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பெகட்ரான் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ. 6 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்காக ஹூண்டாய் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கோத்ரெஜ் நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினர்.

அரிசி கழுவும் போது செய்யக்கூடாத தவறுகள்!

Quick Share

அரிசி கழுவும் போது நாம் செய்யும் சில தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக சமைக்கும் போது அரிசியை ஊற வைத்து சமைக்கும் பழக்கத்தை தான் பலரும் தற்போது செய்து வருகின்றனர். ஊற வைத்து கழுவும் அரிசியை நன்றாக பிசைந்து கழுவுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

ஆனால் அவ்வாறு பிசைந்து கழுவும் அளவிற்கு அரிசியில் அழுக்கு சேர்வது இல்லை. ஏற்கனவே இயந்திரங்களில் சிக்கி வெளியே வரும் அரிசியை நாம் கழுவுகிறேன் என்று இவ்வாறு செய்தால் அரிசி முழுவதும் குருணையாக உடைந்துவிடுமாம்.

ஆதலால் அரிசியை கழுவும் போது இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் கழுவ வேண்டும். அதிலும் காற்றில் இலை அசையும் விதமாக அரிசியை கழுவினால் போதுமாம்.

மேலும் விவசாயிகளின் பல கஷ்டத்திற்கு பின்பு நமது கையில் கிடை

தந்தை இறப்பு… 17 வயது விராட் கோலி ஆடிய ஆட்டம் குறித்து ஆச்சர்யப்பட்ட சக வீரர்!

Quick Share

இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்துவரும் விராட் கோலி, இந்திய அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பது ரசிகர்கள் அறிந்ததுதான். ஆனால் 17 வயதில் போட்டிக்கு முன்பு தந்தையின் இறப்பு செய்தி கேட்டுவிட்டு விராட் கோலி களம் இறங்கியது குறித்து அவருடைய நண்பரும் சக வீரருமான இஷாந்த் சர்மா தற்போது பகிர்ந்து கொண்டுள்ள ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் அண்டர் 17 கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே விராட் கோலியுடன் ஒன்றாக விளையாடியும் நண்பராகவும் இருந்துவரும் இஷாந்த் சர்மா பகிர்ந்து கொண்டுள்ள கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளராக இருந்துவந்த இஷாந்த் சர்மா கடந்த 2022 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதுவரை 105 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 311 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பக்க பலமாக இருந்துள்ளார். மேலும் கபில்தேவ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போட்டிகளிலும் அதேபோல தோனி தலைமை, விராட் கோலி தலைமை என்று மூத்த வீரர்களுக்கு பக்க பலமாக இருந்து வந்தவர்.

தற்போது 34 வயதில் மீண்டும் கம்பேக் கொடுத்து ஐபிஎல் போட்டிகளுக்காக டெல்லி அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தன்னுடைய நெருங்கிய நண்பர் விராட் கோலியைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்ட அவர், நாங்கள் 17 அண்டர் கிரிக்கெட்டில் விளையாடி வந்தோம். அப்போது ஒருநாள் கோலி சோகமாக தனித்து இருந்தார். ஏனென்று கேட்டேன். அருகில் இருந்தவர் அவரது தந்தை இறந்த தகவலைக் கூறினார். இதைக் கேட்டவுடன் எப்படி அந்த நேரத்தை எதிர்கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

ஆனால் தந்தை இறப்பின்போதும் விராட் கோலி களத்தில் இறங்கி டெல்லி அணிக்காக, கர்நாடக அணியை எதிர்த்து அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாடினார். 80 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்றே தெரியவில்லை. நானாக இருந்தால் களத்திற்கே சென்றிருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஃபிட்னஸ் விஷயத்தில் விராட் கோலி அதிக அக்கறை கொண்டவர். கிரிக்கெட் வீரர்களும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பார். அவருடைய தலைமையில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் விஷயத்தில் அக்கறை காட்டினர் என்றும் தற்போது ஆன்மிக விஷயத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார். இதற்கு அனுஷ்கா சர்மாதான் காரணம் என்றும் விராட் கோலி குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் 17 வயதில் தந்தையின் இறப்பு செய்தி கேட்ட பிறகும் போட்டிக் களத்தில் இறங்கி விளையாடிய விராட் கோலியை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்

வாய்ப்பில்லாததால் சீரியலில் நடிக்கும் ஷிகர் தவான்

Quick Share

ஷிகார் தவான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தனது இடது கையால் விளையாடும் பழக்கம் உடையவர். மேலும் இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டிகள் சங்கத்தால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் உலகக்கோப்பை, லீக் தொடர் மற்றும் ஒருநாள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் அணித்தலைவராகவும், சில முக்கிய போட்டிகளில் தொடக்க பேட்ஸ்மேனாகவும் விளையாடியுள்ளார்.

தவான் ஐபிஎல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அணித் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் அணியில் அதிக எண்ணிக்கையிலான ஓட்டக்காரர்களாகவும் பெருமைப்படுகிறார். வரலாற்றில் தனது அணிக்காக தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் இபில் பெற்றுள்ளார். தவான் பள்ளி படிப்பிற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் வீரர்களைப் பயிற்றுவித்த தாரக் சின்ஹா, வழிகாட்டுதலின் படி “அண்டர் சோனாத் கிளப்பில்” பயிற்சி பெற்றார்.

தவான் கிளப்பில் பயிற்சி பெற்று கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடினார். 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2015 உலகக்கோப்பை மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய போட்டிகளில் இந்திய அணிக்காக பெரும்பகுதியை மலமலவெனே எடுத்தார். மேலும் அவர் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தனது சிறந்த நாடகத்திற்காக அந்தப் போட்டியில் “பிளேயர் ஆஃப் தி டோர்ன்மென்ட்” விருதையும் வென்றுள்ளார். பன்னாட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பல்வேறு நாடுகளின் ஒரு அணிக்கு எதிராக விளையாடியதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தற்போது அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.சிகர் தவான் ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


ஒரு விதை போதும்: ஆயுளுக்கு தொப்பை வராது!

Quick Share

பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களின் பெரும் பிரச்சினையாக இருப்பது இந்த அதிக எடை பிரச்சினை தான். இதனால் காலையிலும் மாலையிலும் ஜிம்மிலும் டயட்டிலும் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் நவீன வளர்ச்சியால் சந்தைக்கு வந்திருக்கும் துரித உணவுகளின் தாக்கம் தான் இந்த அதிக எடை.

அந்த வகையில் அதிக எடையை எப்படி இலகுவாக குறைப்பது என தேடிபார்த்த போது கிடைக்கப்பெற்ற மிக இலகுவான வைத்தியம் தான் இந்த சியா விதைகள் வைத்தியம். இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

சியா விதைகளில் என்ன இருக்கிறது தெரியுமா?

1. இந்த சியா விதைகளில் அதிகமான நார்ச்சத்து காணப்படுவதால் சமிபாட்டிற்கு உதவி உணவை முழுமையாக சமிபாடடைய வைக்கிறது.

2. பொதுவாக இந்த விதைகளுக்கு கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தி இருக்கிறது. இது உடல் பருமனை ஏற விடாமல் கட்டுக்குள் வைக்கிறது.

3. உடலுக்கு தேவையான ஒமேகா-3 அளவு இந்த சியா விதைகளில் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த அமிலம் சால்மீனில் மட்டும் தான் இருப்பதாக நினைத்திருப்போம். மாறாக மீனை விட சியாவில் 8 மடங்கு அதிகமாக இந்த அமிலம் இருக்கிறது.

4. அதிகமானோருக்கு வயது ஏற ஏற சில வலிகள் உருவாகும். இதற்கு முக்கிய காரணம் இந்த கால்சியம் குறைபாடு தான். சியா விதைகள் இந்த பிரச்சினையும் சரிச் செய்கிறது. இதிலும் சாதாரண பாலை விட 6 மடங்கு கால்சியம் சத்துக்கள் இருக்கிறது.

இதனை தொடர்ந்து இதனை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

1. யோகர்ட் ( கொழுப்பு அல்லாமல்) – 2 டேபிள் ஸ்பூன்

2. சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இரண்டையும் ஒரு பவுலில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் காலை உணவு உட்கொண்டதன் பின்னர் இந்த கலவை தினமும் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு 2 மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால் ஜிம் செல்லாமல் டயட் செய்யாமல் இந்த எடை குறைப்பு செய்யலாம்.

இங்கிலாந்து கிராமம் ஒன்றில் அவ்வப்போது காணாமல் போன உள்ளாடைகள்: திருடியது யார் என தெரியவ...

Quick Share

இங்கிலாந்து கிராமம் ஒன்றில் அவ்வப்போது உள்ளாடைகள் முதலான விலைமதிப்புள்ள பொருட்கள் காணாமல்போன நிலையில், அவற்றைத் திருடியவர் யார் என தெரியவந்தபோது, சம்பந்தப்பட்டவர் அசௌகரியமாக உணர நேர்ந்துள்ளது.

அவ்வப்போது காணாமல் போன உள்ளாடைகள்

இங்கிலாந்திலுள்ள Darley Abbey என்னும் கிராமத்தில் வாழும் Donna Hibbert என்னும் பெண்ணுக்கு சொந்தமான பூனைகளில்

இந்த Harry, அடிக்கடி அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து, உள்ளாடைகள், விலையுயர்ந்த காலணிகள் என பல பொருட்களை திருடிக்கொண்டுவந்துவிடுமாம்.

சுமார் 300 பவுண்டுகள் மதிப்புடைய பொருட்களை Harry இதுவரை திருடிக்கொண்டு வந்துள்ளதாம். 

உரிமையாளருக்கு தலைகுனிவு

இப்படி Harry அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பொருட்களை திருடிக்கொண்டுவந்துவிட, அதன் உரிமையாளரான Donnaவுக்கு தலைக்குனிவாகப் போய்விட்டது.

ஆகவே,அவர் பேஸ்புக்கில் அதற்காக ஒரு பக்கத்தைத் துவக்கி, தன்னிடம் இந்த இந்த பொருட்கள் உள்ளன என்று கூறி அவற்றின் புகைப்படத்துடன் இடுகை இடுகிறாராம்.

அப்படி பொருட்களைக் காணும் மக்கள், Donna வீட்டுக்கு வந்து தங்களுடைய பொருட்களை திரும்ப வாங்கிச் செல்கிறார்களாம்.

இப்போதும், அப்படி Harry திருடி வந்த பொருட்களை ஆறு கவர்களில் போட்டுவைத்துவிட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்காக காத்திருக்கிறார் Donna. 


கோடையில் தர்பூசணியை தொடர்ந்து சாப்பிடுங்கள் அதன் அற்புத நன்மைகள் ஏராளம்..!!

Quick Share

தர்பூசணியில் நீர்ச்சத்து, கலோரிகள், கார்போஹைட்ரேட், விட்டமின் A, C, புரதம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவில் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது.

இவ்வளவு சத்துக்கள் நிறைந்த தர்பூசணி கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடல் நலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

மேலும் தர்பூசணி பழம் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது

வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஐந்து கிலோ அளவுக்கு தர்பூசணி சாப்பிடலாம்.

தர்பூசணியின் நன்மைகள்

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கோடையில் அதிக வியர்வையின் காரணமாக ஏற்படும் அரிப்புகள் மற்றும் சருமப் பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து, ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கிறது.

தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. எனவே இது உடலின் ரத்தோட்டத்தை சீராக்கி, மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதன் மூலம் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, ஆஸ்துமா பிரச்சனை வராமல் தடுக்கிறது.

துருக்கி நிலநடுக்கம் -105 மணி நேரத்திற்கு மண்ணின் புதைந்த உரிமையாளரை வளர்ப்பு நாய் கண்ட...

Quick Share

துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கத்தை அடுத்து, வளர்ப்பு நாயால் 105 மணி நேரத்திற்கு பின்னர் அதன் உரிமையாளர் மீட்கப்பட்டுள்ளார்.

புதைந்து போயிருந்த பெண்மணி

துருக்கியின் அந்தாக்யா பகுதியில் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்து போயிருந்தார் Duygu என்ற பெண்மணி. இந்த நிலையில் அவரது வளர்ப்பு நாய் காரணமாக 105 மணி நேரத்திற்கு பின்னர் மீட்பு குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

பனை மரங்கள், பொட்டிக்குகள் மற்றும் அரசாங்க கட்டிடங்கள் என காணப்பட்ட முக்கிய தெருக்கள், ரிக்டர் அளவில் 7.8 என பதிவான நிலநடுக்கத்தால், சில நொடிகளில் சிதைந்துபோயுள்ளது.

25,000 கடந்துள்ள இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. 80 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கியை மொத்தமாக சிதைத்துள்ள இந்த நிலநடுக்கத்தில் மிக மோசமாக பாதித்த பகுதிகளில் ஒன்று அந்தாக்யா.

தெருக்களில் வசிக்கும் நிலை

சுமார் 20,000 மக்கள் வசித்துவந்த இப்பகுதியானது தற்போது தரைமட்டமாகியுள்ளது. மக்கள் தற்போது வீடற்றவராகியுள்ளதுடன், கடும் குளிரில் தெருக்களில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்கள் கடந்துள்ள நிலையில், உள்ளூர் மீட்புக் குழுவினர் அல்லது அமெரிக்கா, பிரித்தானியா, கனடா அல்லது உக்ரைன் குழுவினரால் இன்று அதிகமாக சடலங்களை மட்டுமே மீட்க முடிந்ததாக கூறப்படுகிரது.

துருக்கியில் மட்டும் 110,000 மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பேரிடருக்கு பின்னர் மூன்று நாட்களில் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துவிடும், ஆனால் துருக்கியில் நான்கு நாட்கள் கடந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், அரசாங்கம் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த தவறியுள்ளதாகவும் மெத்தனமாக செயல்படுவதாகவும் அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இந்தியாவிலே சென்னை விமான நிலையம்தான்ரூ.189.85 கோடி அதிக நஷ்டத்தை சந்தித்தது…

Quick Share

2021-22 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள பொது விமான நிலையங்களிலேயே சென்னை விமான நிலையம் தான் அதிக இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களவையில் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த பதிலில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் (AAI) நடத்தப்பட்ட 124 விமான நிலையங்கள், கடந்த மூன்று நிதியாண்டுகளில் அவை அடைந்த லாபம் அல்லது நஷ்ட விவரங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட தரவுகளின்படி, சென்னை சர்வதேச விமான நிலையம் அதிகபட்சமாக ரூ.189.85 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது, அதைத் தொடர்ந்து டேராடூன் (ரூ. 98.02 கோடி இழப்பு) மற்றும் அகர்தலா விமான நிலையங்கள் (ரூ. 80.67 கோடி)
ராஜஸ்தானின் ராஜ்யசபா எம்பி நீரஜ் டாங்கி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. அவர் மூன்று கேள்விகளை எழுப்பியிருந்தார்: மாநிலம்/யூனியன் பிரதேசம் வாரியாக நாட்டில் உள்ள நஷ்டத்தில் உள்ள விமான நிலையங்களின் விவரங்கள் மற்றும் அத்தகைய இழப்புகளுக்கான காரணங்களும்; கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த விமான நிலையங்கள் சந்தித்த இழப்புகளின் விவரங்கள்; மற்றும் இந்த விமான நிலையங்களை லாபகரமாக மாற்ற அரசு எடுத்த அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள். இதற்குப் பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், வருமானம் குறைந்ததால்தான் இழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இதனால் அந்தந்த விமான நிலையங்களின் பராமரிப்பு செலவு உட்பட மொத்த செலவினங்களை விமான நிலையங்கள் பூர்த்தி செய்வதில் தடை ஏற்பட்டது. “COVID-19 தொற்றுநோய் 2020-21 நிதியாண்டு மற்றும் 2021-22 நிதியாண்டில் விமான நிலையங்களின் வருவாயையும் மோசமாக பாதித்துள்ளது,” என்று அவர் கூறினார்.இந்த விமான நிலையங்களை லாபகரமாக மாற்ற ஏஏஐ நடவடிக்கை எடுத்து வருவதாகவும், “மாஸ்டர் கான்செஷனர்கள் மூலம் ஒப்பந்தங்களை வழங்குவதன் மூலம் வானூர்தி அல்லாத வருவாயை அதிகரிப்பதன் மூலம், வருவாய் மேம்பாட்டிற்கான வணிக இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துதல், நகரத்தின் பக்க மேம்பாடு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வருவாய் பங்கு மாதிரி வணிக ஒப்பந்தங்கள் மற்றும் எல்இடி மாற்றுதல், சோலார் பேனல் நிறுவுதல் போன்ற பயன்பாட்டுச் செலவு மேம்படுத்தல். AAI பெரிய விமான நிலையங்கள் அல்லாத விமான நிலையங்களில் விமான நிலையக் கட்டணங்கள் அதிகரிப்பு வடிவில் வானூர்தி வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கருவளையம், சரும சுருக்கத்தை போக்கும் வைட்டமின் ஈ ஆயில்..!!

Quick Share
  • வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம்.
  • வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும்.
  • காஃபி தூள், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து முகத்தில் வட்டப்பாதையில் ஸ்கிரப் செய்ய இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும்.
  • இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு செய்து வர சுருங்கிய தோல்கள் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும்.
  • கண்களை சுற்றி கருவலையங்கள் இருந்தால் இரவு தூங்கும் முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய கருவளைம் நீங்கும்.
  • இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ எண்ணெயை புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அடர்த்தியான புருவங்களைப் பெறலாம்.
  • கை கால்கள் வறட்சியாக இருந்தால் குளித்துவிட்டு வைட்டமின் ஈ எண்ணெயை மாய்ஸ்சரைசர் போல் தடவுங்கள். தோல் மென்மையாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு இருக்காது.
  • தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் ஈ எண்ணெயை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்சனையும் எட்டிப்பார்க்காது.

பெண்களுக்குக்கான பயனுள்ள சிறு சிறு அழகு குறிப்புகளும் ஆரோக்கிய தகவலும்.

Quick Share

பெண்கள் சார்ந்த அணைத்து தகவலும் கிடைக்கும் ஒரே இடமாக இருக்கும் இணையத்தளம், இந்த இணையத்தளத்தி அணைத்து விதமான ஆரோக்கிய தகவல், அழகு குறிப்புக்கள், மருத்துவ தகவல், பெண்கள் தொழில் முனைவோர், மற்றும் பல்வேறு சிறப்பு தகவல் பெறவும் https://singapenne.com/




You cannot copy content of this Website