திண்டுக்கல்

திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளையை வெட்டி கொன்ற மர்ம கும்பல்!

Quick Share

திண்டுக்கல் மாவட்டம், அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இளைஞரான இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சூர்யா என்ற நண்பரின் பிறந்நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரபாகரன் சென்றுள்ளார். 

அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளது. இதை தடுக்க வந்த அவரது நண்பர் கார்த்திக் என்பவரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த பிரபாகரனை மீட்டு அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமேயான நிலையில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த 9 மாதங்களில் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர கணவன்!!

Quick Share

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு கணவனும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டிகோரெயான். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அதன்பின் தம்பதியினர் திண்டுக்கல் YMR பட்டி காளியம்மன் கோயில் அருகே உள்ள மாடிவீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் ஸ்டிகோரெயான் தாயாரும் வந்து தங்கியுள்ளார். இதனிடையே அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் செல் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். மேலும் கணவன்- மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்றும் 11.04.2022 வழக்கம்போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டிகோரெயான் தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். மனைவியை கொலை செய்த பயத்தில் தானும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலைய போலீசார், இறந்துபோன ஜெபினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காதல் திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்: அடிக்கடி சந்தித்த டிரைவர் வெறிச்செயல்!

Quick Share

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில சிறுமிக்கு உடல் நிலை குறைவு காரணமாக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். 

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 6 மாத கர்ப்பமாக இருந்ததை உறுதி செய்தனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து சிறுமியிடம் கேட்டு உள்ளனர். 

அப்போது லாரி டிரைவர் முனியப்பன் (26) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்ததாக அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் முனியப்பனை தாடிக்கொம்பு போலீசார் போக்சோவில் கைது செய்து உள்ளனர்.

ஆசைக்கு இணங்க மறுத்ததால் தம்பி மனைவி, 2½ வயது குழந்தையை எரித்துக்கொன்ற தொழிலாளி!

Quick Share

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா பெரியமலையூர் வலசை பகுதியை சேர்ந்தவர் நல்லபிச்சை. இவருடைய மகன்கள் கருப்பையா (வயது 30), சிவக்குமார் (26). இருவரும் கூலிவேலை பார்த்து வருகின்றனர். இதில் கருப்பையாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சிவக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சலை (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இவர்களுக்கு மலர்விழி என்ற 2½ வயது மகள் உள்ளாள். அஞ்சலை தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் அஞ்சலை தனது மகளுடன் ஆடு மேய்ப்பதற்காக பெரியமலையூர் வலசை அடுத்த மலைப்பகுதிக்கு சென்றார்.
அப்போது அங்கு விறகு வெட்ட வந்த சிவக்குமாரின் அண்ணன் கருப்பையா, காட்டுப்பகுதியில் தனது தம்பி மனைவி அஞ்சலை குழந்தையுடன் தனியாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே அவருடைய மனதில் கொடூர எண்ணம் தோன்றியது. அஞ்சலையை தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார்.  
அதற்கு அஞ்சலை சம்மதிக்காமல் கருப்பையாவிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த கருப்பையா தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அஞ்சலை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். 
இதற்கிடையே அஞ்சலையை உயிருடன் விட்டால் குடும்பத்தினரிடம் தன்னை காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயந்த கருப்பையா, கர்ப்பிணி என்றும் பாராமல் அஞ்சலை, 2½ வயது பெண் குழந்தை ஆகியோரை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றார். சிறிது நேரத்தில் தாயும், மகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் விரைந்து சென்று தாய், மகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கருப்பையாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவி மற்றும் 2½ வயது பெண் குழந்தையை தொழிலாளி எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாய்-மகன் கொடூரமாக வெட்டிக் கொலை..! மர்ம நபர்கள் செய்த கொடுமை…

Quick Share

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே குறுக்களையன்பட்டியில் வசித்து வருபவர் செளந்தரம் (62). அவரது மகன் செல்வம் (42) அருகே உள்ள தனது சொந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்

இந்நிலையில் நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் சௌந்தரம் மற்றும் செல்வம் தோட்டத்து வேலையை முடித்துவிட்டு இரவு தூங்கிக் கொண்டிருந்த உள்ளார்கள். அதிகாலை அவரது மனைவி அவருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது சுவிட் அப் என்று வந்ததினால் தோட்டத்து வீட்டிற்கு வந்து பார்த்த போது தாய் மகன் இருவரும் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது
உடனடியாக எரியோடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அவர்கள் தோட்ட வீட்டில் தேங்காய் பரிவதற்காக வந்த நபர் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கு அவர்கள் பணம் கேட்டு உள்ளதாகவும் அதனால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், மேலும் வேறு ஏதும் காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் பழக்கம்: 2 குழந்தைகளுடன் கடத்தப்பட்ட இளம்பெண்..கள்ளக்காத லன் ஓட்டம் ..

Quick Share

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 27 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்தநிலையில் தனது 2 குழந்தைகளுடன் கடந்த மாதம் வீட்டில் இருந்து அந்த பெண் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இளம்பெண்ணின் மகள் செல்போன் மூலம் தன் தந்தைக்கு தொடர்பு கொண்டாள். அப்போது அண்ணனையும், தன்னையும் ஒருவர் அடித்து துன்புறுத்தி வருவதாகவும், காப்பாற்றும்படி கூறி கதறி அழுதாள்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமி பேசிய செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் அடைத்து வைக்கப்பட்ட வீட்டு முகவரியை கண்டறிந்தனர்.
பின்னர் போலீசார் மராட்டிய மாநிலம் புனேக்கு விமானம் மூலம் விரைந்து சென்றனர். அங்கு புனே போலீசார் உதவியுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து இளம்பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் மீட்டனர். 
போலீசார் வருவதை அறிந்த கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளை வேடசந்தூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் மற்றும் உறவினரிடம் அவர்களை ஒப்படைத்தனர். தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று கூறியதால், ஆற்றில் வீசி குழந்தையை கொலைசெய்த தாய்! விசா...

Quick Share

குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே சென்று வந்த நிலையில் குழந்தையைக் காணவில்லை என்று தாய் கதறி அழுதுள்ளார்.

புதரில் சடலமாக குழந்தை

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், ராசாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மகேஷ்வரன், லதா தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதாக மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி பார்த்தபோது இரண்டாவது குழந்தை ராகுலைக் காணவில்லை என தாய் லதா கதறி அழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குழந்தையை அக்கம் பக்கம் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பாலாற்று அருகே உள்ள புதர்ச்செடியில் குழந்தை ராகுல் சடலமாக இருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மூடநம்பிக்கையில் தாய் செய்த கொலை

குழந்தையின் சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து தாய் லதா மனக்கஷ்டத்தில் இருந்துள்ளாராம்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று கூறியதால், ஆற்றில் வீசி குழந்தையை கொலை செய்ததாக ஓப்புக்கொண்டுள்ளார்.

செல்போன் தராததால் தூங்கிக்கொண்டிருந்த தங்கையை வெட்டிக்கொலை செய்த அக்கா!

Quick Share

திண்டுக்கல் அருகே மகனுடன் பேசுவதற்கு செல்போன் தராததால் தூங்கிக்கொண்டிருந்த தங்கையை வெட்டிக்கொலை செய்த அக்காவை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரைச் சேர்ந்த தமிழ்செல்வி(43) இவர் இதே ஊரில் உள்ள நூலகத்தில் துப்புரவுப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் தங்கவேல் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் இதே ஊரில் உள்ள தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தமிழ்செல்வியின் உடன் பிறந்த அக்கா வெங்கடேஷ்வரி (46) இவரது கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகன் நாகமணிகண்டன் கோயமுத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு தனது தாயார் பழனியம்மாள், வெங்கடேஷ்வரி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் தனியாக தூங்கி கொண்டிருந்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை (15.3.2022) சுமார் 4 மணிக்கு வெங்கடேஷ்வரி எழுந்து தூங்கிக்கொண்டிருந்த தமிழ்செல்வியை தட்டி எழுப்பி எனது மகன் நாகமணிகண்டனிடம் பேசவேண்டும் செல்போனில் போன் செய்து கொடு என்று கூறியுள்ளார்.

தூக்க கலக்கத்தில் இருந்த தமிழ்செல்வி காலையில் போன் செய்துகொள்ளலாம் என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ்வரி வீட்டில் காய்கனி நறுக்க வைத்திருக்கும் அரிவாள்மனையை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த தமிழ்செல்வியை சரமரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதன் பிறகு வீட்டுக்கு வெளியே வந்து வெங்கடேஷ்வரி என் தங்கயை கொன்றுவிட்டேன் என்று சத்தம் போட்டுள்ளார். இதை கேட்ட ஊர் மக்கள் திடுக்கிட்டு எழுந்து கூட்டமாக ஓடி வந்து பார்த்தபோது தமிழ்செல்வி இறந்து கிடந்தது தெரிந்தது.

இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வியை வெட்டிகொன்ற அக்கா வெங்கடேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடன் பிறந்த தங்கையை அக்காவே அரிவாள்மனையால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நிதி நிறுவன அதிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது மகளின் காதலனே நண்பர்களுடன் சேர்ந...

Quick Share

வேடசந்தூர் அருகே நிதி நிறுவன அதிபர் மர்ம சாவில் திடீர் திருப்பமாக அவரது மகளின் காதலனே நண்பர்களுடன் சேர்ந்து எரித்து கொலை செய்தது தெரிய வந்து உள்ளது.


நிதி நிறுவன அதிபர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நத்தப்பட்டியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 46). நிதி நிறுவன அதிபரான இவர், வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே போட்டோ ஸ்டூடியோவும் வைத்திருந்தார். மேலும் அரிமா சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார்.


இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி இரவு வேடசந்தூரில் நடந்த அரிமா சங்க கூட்டத்தில் பாலசுப்பிரமணி கலந்துகொண்டார். பின்னர் கூட்டம் முடிந்ததும் நள்ளிரவில் அவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி உறவினர், நண்பர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணி குறித்து கேட்டார். ஆனால் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை

தீயில் கருகி சாவு
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை பாலசுப்பிரமணி, தனது வீட்டிற்கு செல்லும் மண் சாலையில் தென்னம்பிள்ளை தோட்டம் என்ற இடத்தில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் அவரது மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்பிரமணி எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வந்தனர்.

எரித்துக்கொலை
இந்தநிலையில் பாலசுப்பிரமணி மர்ம சாவு குறித்து விசாரிக்க வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், முதலில் பாலசுப்பிரமணியின் குடும்பத்தினரிடம் இருந்து தங்களது விசாரணையை தொடங்கினர். அப்போது அவரது மகள் பயன்படுத்திய சிம் கார்டு எண்ணுக்கு, எந்தெந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தது என்பதை சோதனை செய்தனர்.


அதில், அவரது மகளுக்கு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகுளிப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரான விமல்ராஜ் (20) என்பவரிடம் இருந்து அடிக்கடி அழைப்பு வந்ததை கண்டுபிடித்தனர். இதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன்படி பாலசுப்பிரமணியை எரித்துக்கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


மகள் காதல்
கொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணிக்கு 16 வயதில் மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் அவரது மகள், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதேபோல் அங்குள்ள தனியார் கல்லூரியில் விமல்ராஜ் படித்து வந்தார். பாலசுப்பிரமணியின் மகள் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வந்தார். அதன்மூலம் அவருக்கும், விமல்ராஜூவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து காதல் ஜோடி அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்தனர்.


இதற்கிடையே மகளின் காதல் விஷயம் பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதனால் தனது மகளை கண்டித்ததுடன், அவர் பயன்படுத்தி வந்த செல்போனை பறித்து உடைத்துவிட்டார். மேலும் சின்னகுளிப்பட்டிக்கு நேரில் சென்ற பாலசுப்பிரமணி, அங்கு விமல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து தனது மகளுடன் பழக கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

கொலை செய்ய திட்டம்
காதலியின் செல்போனை உடைத்ததால், அவருடன் பேசமுடியாமல் விமல்ராஜ் தவித்தார். இதனால் எப்படியாவது தனது காதலியை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து, நத்தப்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு விமல்ராஜ் சென்றார். அங்கு காதலியை சந்தித்து, உனது தந்தை தன்னை மிரட்டியதாகவும், அவர் 2 பேரையும் பிரித்துவிடுவார் என்றும் விமல்ராஜ் தெரிவித்தார்.


இதனால் காதலுக்கு இடையூறாக இருக்கும் பாலசுப்பிரமணியை கொலை செய்ய விமல்ராஜ் ஆலோசனை கூறினார். இதற்கு தந்தை என்று கூட பார்க்காமல் பாலசுப்பிரமணியின் மகளும் சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமல்ராஜ் தனது நண்பர்களான சின்னகுளிப்பட்டியை சேர்ந்த சரவணன் (20), கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த மற்றொரு நண்பர் அஜித் (19) ஆகியோருடன் சேர்ந்து பாலசுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டார். அவரை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று அஜித் திட்டம் போட்டு கொடுத்தார்.


பெட்ரோல் ஊற்றி…

அதன்படி பாலசுப்பிரமணி தனது நிதி நிறுவனம் மற்றும் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு இரவு 9 மணிக்கு மேல் தான் நத்தப்பட்டி தோட்டத்து வீட்டிற்கு வருவது வழக்கம். அதனை விமல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் நோட்டமிட்டனர். மேலும் சம்பவத்தன்று அரிமா சங்க கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, அவர் தாமதமாக தான் வருவார் என்பதை அறிந்துகொண்ட விமல்ராஜ், தனது நண்பரான சரவணனுடன் கடந்த 10-ந்தேதி நள்ளிரவு கேனில் பெட்ரோல் மற்றும் இரும்பு கம்பி ஆகியவற்றை வைத்துக்கொண்டு டொக்குவீரன்பட்டி-நத்தப்பட்டி இடையேயான மண் சாலையில் தென்னம்பிள்ளை தோட்டம் அருகில் காத்துக்கொண்டிருந்தார்.


இதற்கிடையே அந்த வழியாக பாலசுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த விமல்ராஜ் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால், பாலசுப்பிரமணியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் நிலைதடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து, உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் விமல்ராஜ், சரவணன் ஆகியோர் பெட்ரோலை ஊற்றி தீவைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டனர். பாலசுப்பிரமணி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.


3 பேர் கைது
இதனையடுத்து சின்னகுளிப்பட்டியில் பதுங்கியிருந்த விமல்ராஜ், அவரது நண்பர்கள் சரவணன், அஜித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் நடந்த சம்பவங்களை 3 பேரும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பி, பெட்ரோல் கேன், சம்பவத்தன்று அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பாலசுப்பிரமணியின் மகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலை சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையை சேர்ந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், சுப்பிரமணி, தனிப்பிரிவு போலீசார் பாஸ்கரன், குமாரசாமி உள்ளிட்ட போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்.
மகளுடனான காதலை கண்டித்த நிதி நிறுவன அதிபரை கல்லூரி மாணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மெழுகு சிலை மடியில், குழந்தைகளுக்கு காதுகுத்து…! தம்பியின் ஆசையை நிறைவேற்றிய அக்க...

Quick Share

சாலை விபத்தில் இறந்த தம்பியின் ஆசையை அக்கா நிறைவேற்றியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இதில் இளைஞர் பாண்டித்துரை பங்கேற்க வேண்டும் என விரும்பினர். 

அதன்படி, பாண்டித்துறை குடும்பத்தார் அவரது உருவ அமைப்பில் மெழுகு சிலை ஒன்றை வாங்கி உள்ளனர். இதனையடுத்து, காதணி விழாவின் போது இளைஞர் பாண்டித்துரையின் மெழுகு சிலையில் அமர வைத்து அவரது மூத்த சகோதரியின் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தார் காதுகுத்தினர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அங்குள்ளவர்களை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியது. 
இதுகுறித்து இளைஞர் பாண்டித்துரையின் தாய் கூறும்போது, தனது அக்கா குழந்தைகளுக்கு தனது மடியில் அமரவைத்து காதணி விழா நடத்த வேண்டும் என்பதுதான் தனது மகனின் ஆசை என்றும் அதனை நிறைவேற்றும் வகையிலே இந்த காதணி விழாவை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

8 வருடமாக தலை முதல் கால் வரை பாம்பு தோல் போல தோலானது உதிர்ந்து கொண்டே இருக்கும் சிறுவன்...

Quick Share

8 வயதுடைய சிறுவன் ஒருவன் பாம்பு போல தோல் உரியும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். தொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவரின் மனைவி ஜெயசித்ரா. இந்த தம்பதிகளுக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் பொன்குமரன் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், சிறுவன் பொன்குமரன் பிறக்கும் போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளான். தலை முதல் கால் வரை பாம்பு தோல் போல் தோலானது உதிர்ந்துகொண்டே இருக்குமாம்.

மேலும், உடல்சத்துக் குறைபாடு உள்ளதால், எட்டு வயதானாலும் அவன் பார்ப்பதற்கு மூன்று வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியுடன் உள்ளான். இதனால் தனியாக வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளான்.

சிறுவனின் உடல்நிலை சரியாக பெற்றோர்கள் பல மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனாலும், அதெல்லாம் பயனளிக்கவில்லை. ஆயுர்வேதம் சித்த மருத்துவமும் கட்டுப்படவில்லை என வேதனையை தெரித்துள்ளனர் பெற்றோர்கள்

மேலும், பொன்குமரனின் இந்த நோய்க்கு காரணம் பெற்றோர்கள் தெரிவிக்கையில், மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில், தன வீட்டுக்கு முன்பு இரு பாம்புகள் நடனமாடியதாகவும், பக்கத்துவீட்டு பெண் முறத்தால் அடித்ததால் காயம் பட்டு வீட்டு வாசலில் வந்து இறந்துவிட்டதாகவும், பாம்புவின்ஆன்மா கொடுத்த சாபத்தால் தனது மகன் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்து விட்டதாக கூறியுள்ளனர்.

காதலனை நம்பி சென்ற அப்பாவி பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்

Quick Share

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தயம் வா தரையில் உள்ள இலக்கை வில்லுக்கு பின்புறம் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அவர் வேடசந்தூர் அருகே உள்ள தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்பது தெரியவந்தது வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 1ஆம் தேதி மாலை பணிக்குச் சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை எங்கே தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ஜெயஸ்ரீயின் செல்போனை ஆய்வு செய்ததில் ஒரே நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை ஒரே எண்ணிலிருந்து போன் வந்ததை கண்டறிந்த போன் வந்த எண்ணெய் ஆய்வு செய் அதில் அந்த எண் ஜெயஸ்ரீ உடன் பணிபுரிந்து வந்த தங்கதுரை என தெரியவந்தது.

கள்ளிமந்தையம் போலீசார் தங்கதுரை பற்றி விசாரணையை மேற்கொண்டனர் பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் ஜெயந்தியும் பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகி உள்ளன. 6 மாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார் சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த தங்கதுரை தன்னை திருமணம் செய்துகொள்ள ஜெயஸ்ரீ வற்புறுத்துவதாக அவரது வீட்டிற்கு போன் செய்ததால் ஜெயஸ்ரீயை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

கடந்த 31ஆம் தேதி அன்று இரவு தங்க துறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ மறுநாள் அங்கு வருவதாகவும் தன்னை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். 1ம் தேதி மாலை ஒட்டன்சத்திரத்தில் பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர் மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து காதலை முறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தங்கதுரை அவனது கூட்டாளியும் சேர்ந்து ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்து அங்கேயே ஒரு புதரில் உடலை மறைத்து வைத்து விட்டு தப்பியது விசாரணையில் அம்பலமானது.

இதற்கிடையே காதலனின் வெறிச்செயல் குறித்து அறிந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் கொலையாளிகள் இருவரையும் தூக்கிலிட வேண்டும் என கூச்சலிட்டு அவர்கள் மறியலை கைவிட்டு விட்டு ஜெயஸ்ரீயின் உடலை வாங்கிச் சென்றனர் கைது செய்யப்பட்ட தங்கதுரை மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் கள்ளிமந்தயம் போலீசார் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்திற்கு அழைத்துச் சென்ற அதே நேரத்தில் காதலில் விழுந்து காதலனை நம்பி சென்ற பாவத்திற்கு அப்பாவி பெண் கொல்லப் பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website