தர்மபுரி

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை.. தர்மபுரியில் துயரம்..

Quick Share

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி. இவருக்கும் இவரது மனைவி சுகுணாவுக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சுகுணா வீட்டில் சாம்பார் செய்த பாத்திரத்துடன் அதனை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றுள்ளார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்த அவரது ஒன்றரை வயதான இரண்டாவது மகள் தேன்மொழி எழுந்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் குழந்தை நிலை தடுமாறி சாம்பார் பாத்திரத்தில் விழுந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தாய் சுகுணா ஓடி வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் குழந்தையை மீட்டு அவர் மாரண்டஹள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து மாரண்டஹள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இரும்பு பீரோவை மேல் மாடியிலிருந்து கீழே இறக்கும்போது மின்சாரம் தாக்கி மூவர் பலி!!கதறும்...

Quick Share

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட வேல்பால் டிப்போ அருகே உள்ள சந்தைப்பேட்டை என்ற பகுதியில் வசிப்பவர் பச்சையப்பன். இவர் தனது முதல் மாடி வீட்டை இலியாஸ் என்ற நபருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். இந்த நிலையில், இலியாஸ் தனது வாடகை வீட்டை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு குடிபெயர நினைத்துள்ளார். 

அதற்காக நேற்று அவரது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல வேன் ஒன்று அமைக்கப்பட்டது. அதில் பொருட்களை ஏற்றும்போது அவர் வீட்டில் இருந்த இரும்பு பீரோவை கயிறு கட்டி கீழே இறக்கியுள்ளனர். இதற்கு வேன் ஒட்டுநர் கோபி, வீட்டு உரிமையாளர் பச்சையப்பன், குமார் என்ற நபர் என 3 பேர் இலியஸுக்கு உதவி புரிந்துள்ளனர். அதன்படி 4 பேரும் சேர்ந்து பீரோவை கீழே இறக்கியுள்ளனர். 

அப்போது எதிர்பாராவிதமாக வீட்டை ஒட்டியபடி செல்லும் மின்சார கம்பியில் இரும்பு பீரோ உரசியது. இதில் மின்சாரம் அவர்கள் 4 பேர் மீதும் தாக்கியுள்ளது. இந்த மின் தாக்குதலில் இலியாஸ், பச்சையப்பன், வேன் ஓட்டுநர் கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை கண்டதும் பதறி போன அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடி கொண்டிருந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த மூன்று பேர் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழை மக்களின் பணத்தை ஏலச்சீட்டு போட்டு ரூ.3 கோடி ரூபாயை ஏமாத்திய அரசு பள்ளி ஆசிரியர்&#...

Quick Share

தருமபுரி மாவட்டம், தோக்கம்பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பவர் பாப்பாரபட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 10 ஆண்டுகளாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்.

ஆசிரியர் முனியப்பனுடன் திருமல்வாடியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் கலாராண என்பவரும் கூட்டு சேர்ந்துள்ளார். இவர்கள் அரசுப்பள்ளிக்கு செல்லும் போது நான்கு பேரை பணிக்கு அமர்த்தி சீட்டு பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.

இவர்களிடம் சிறு தொழில் செய்து வரும் நடுத்தர மக்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக சீட்டு ஒழுங்காக நடக்காததால் சீட்டு போட்ட மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், ஆரியர்களை தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களிடம் முறையான தகவல் வராததால் சீட்டு பணத்தை திருப்பி கொடுக்க சொல்லி பாதிக்கப்பட்ட மக்கள் ஆசிரியர் முனிப்பனிடம் கேட்டுள்ளனர். அதற்கு ஆசிரியர் சீட்டு பணத்தை உங்களிடம் வசூல் செய்தவர்கள் ஏமாற்றி சென்றுவிட்டதாகவும் இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி உள்ளனர். இதனால் சீட்டுபோட்டவர்கள் அதிர்சியடைந்தனர். 

திருமண செலவு மற்றும் தொழில் தொடங்கவும், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம், மருத்துவ செலவு என பல்வேறு காரணங்களுக்காக சீட்டு பணத்தை நம்பியிருந்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஆசிரியர்கள் முனியப்பன் மற்றும் கலாராணி மீது நடவடிக்கை எடுப்பதோடு, பணத்தை மீட்டுக்கொடுக்கும் படி தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆசிரியர் படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு வேலை கிடைக்காமல் பலர் குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனங்களிலும் பெயிண்டர் பணிகளுக்கு சென்று பணி செய்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணி செய்து வரும் பலர் சம்பளத்தை வாங்கிக்கொண்டு பள்ளிகளுக்கு ஒழுங்காக செல்லாமல் கந்துவட்டி விடுவதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதும், ஏலசீட்டு நடத்தும் தொழில் செய்தும், தனியாக பள்ளிகள் நடந்துவதும் என பல்வேறு தொழில் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கல்விதுறை அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு இது போன்ற தொழில் செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், இது போன்று சீட்டு மற்றும் கந்துவிட்டி விட்டு தொழில் செய்பவர்களை தமிழக அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைன் கேம் மோகம்! ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை!

Quick Share

தருமபுரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தருமபுரி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பெரியசாமி (வயது 20) என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.

10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி 2 வாரம் வைத்திருந்த வாலிபர்!!

Quick Share

அரூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்புபடித்து வந்த சிறுமி கடந்த 17ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால், சிறுமி பள்ளியிலும் இல்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீட்டில் பெற்றோர்கள் தேடி பார்த்தனர். 

ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து சிறுமியை காணவில்லை என, காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் அதே பகுதியைச் சார்ந்த வல்லரசு என்ற இளைஞர் கடத்தியிருக்கலாம் என, சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் தெரிவித்தனர். 

இதனையடுத்து வல்லரசு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அரூர் பகுதியில் உறவினர் வீட்டில் சிறுமியை கடத்திச் சென்று வல்லரசு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் வல்லரசு மற்றும் சிறுமி இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை, இளைஞர் வல்லரசு ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதும், இரண்டு வாரமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பெற்றோரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து பத்தாம் வகுப்பு சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் வல்லரசுவை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை ..தனியார் பள்ளி ஆசிரியர் ..!!

Quick Share

பாலியல் தொல்லை புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 8-ம் வகுப்பு சிறுமி கடந்த வியாழக்கிழமை, பள்ளி சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்தபோது, மாணவியை அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய முபாரக் என்பவர் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் விசாரணை செய்த, காவல் துறையினர், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 8-ம் வகுப்பு படிக்கு சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்ற ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். 

தனியார் பள்ளியில் படித்த சிறுமியை, பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியரே கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘உங்க அம்மாவை கொலை செய்துவிடுவேன்” என மிரட்டி +1 மாணவியை பாலியல் பலாத்காரம்...

Quick Share

உறவினர் வீட்டிற்கு சென்ற பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே டி.என்.எச்.பி. குடியுருப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அதில் 16 வயது மூத்த மகள் தருமபுரி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் பிளஸ்-1 மாணவி தற்போது குள்ளனூரில் உள்ள தனது அத்தை கவிதா (வயது40) என்பவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார். இவரது கணவர் டெம்போ டிரைவர் ஓம்சக்தி.

இதையடுத்து கடந்த 11-ந்தேதி அன்று பள்ளியில் இருந்து மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது கவிதா அந்த மாணவியிடம் உன்னை மாமா கூப்பிடுகிறார் என்று அழைத்து செல்கிறார்.

அங்கு மாணவியிடம் கவிதா உன் மீது மாமா ஆசைப்படுகிறார். அதனால் நீ அவர் சொல்வதை எல்லாம் கேள். அப்படி இல்லை என்றால் உங்க அம்மாவை கொலை செய்து விடுவார் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் வலுக்கட்டாயமாக மாணவியை இழுத்து சென்று படுக்கை அறைக்கு தூக்கி சென்றுள்ளார். அங்கு வாயில் துணியை வைத்து அடைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையும் மீறி நீ உன் பெற்றோரிடம் கூறினால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் நடந்த சம்பவத்தை எல்லாம் மறந்து அந்த வீட்டை விட்டு தனது தந்தை வீட்டிற்கு நேற்று வந்தார். அங்கு தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உறவினர் தனது மகளை பத்திரமாக பார்த்து கொள்வார்கள் என்று அனுப்பி வைத்தால் இப்படி செய்து விட்டார்களே என புலம்பி கதறி அழுதார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஓம் சக்தி, கவிதா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் வீட்டிற்கு சென்ற பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தற்கொலை !காரணம் தெரியாமல் கதறும் குடும்பம் ..

Quick Share

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் – பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை சேர்ந்த கம்ப்யூட்டர் இஞ்சினியர் அரசகுமார் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் பாலக்கோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு மகேஸ்வரியும் கணவரும் வந்தனர்.

நேற்று முன்தினம் மகேஸ்வரியின் கணவர் வேலை விஷயமாக ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மகேஸ்வரியின் அறை கதவை தட்டி கூப்பிட்டுள்ளார். கதவு திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போது மகேஸ்வரி துப்பட்டாவால் பேன் கொக்கியில் தூ.க்கு மாட்டி த.ற்.கொ.லை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை மாதத்தில் த.ற்.கொ.லை செய்து கொண்டதால் தருமபுரி சப் கலெக்டர் சித்ரா விஜயன் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று விசாரனை நடத்தி வருகிறார்.

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பென் த.ற்.கொ.லை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!

Quick Share

பாலக்கோடு அருகே காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-கல்லூரி மாணவிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகள் லலிதா (வயது19). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த தமிழ்செல்வனின் பெற்றோர் மாணவியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டு  உள்ளனர். 

ஆனால் மாணவியின் பெற்றோர் மகளுக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை. படிப்பு முடியட்டும் பார்க்கலாம் என கூறியதாக தெரிகிறது. இருப்பினும் மாணவி, காதலனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி லலிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணைஇதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி சத்துணவு அறைக்குள்ளேயே தலைமை ஆசிரியை கண்டித்து 90 மாத்திரைகள் விழுங்கிய சத்துணவ...

Quick Share

சின்னபசங்க முன்னாடியெல்லாம் என்னை அவமானபத்துறாங்க என்று கதறிய கிரிஜா 90 தூக்க மாத்திரைகள் விழுங்கி உள்ளார்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சொர்ணம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் அதேபேகுதியை சேர்ந்த கிரிஜா (வயது35) சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை குறைவாக உள்ளதாக அமைப்பாளர் கிரிஜா மற்றும் ஆசிரியர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிரிஜா பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு அறை கதவை பூட்டிக்கொண்டு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அவர் வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி விரைந்து சென்று சத்துணவு அமைப்பாளர் கிரிஜாவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கல்வித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிஜாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. கணவர் பெயர் கலைத்தென்றல். இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார்.

இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. கிரிஜா கடந்த 4 வருடங்களாக சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் கிரிஜாவுக்கு கருத்து வேறுபாடு அடிக்கடி எழுந்து வந்துள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட முட்டையில் குறைந்து உள்ளதாக கூறி, கிரிஜாவை மாணவர்கள் முன்னிலையில், தலைமை ஆசிரியர் சாந்தி தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறாராம்.

இது சம்பந்தமாகவே, கிரிஜாவுக்கு அளவுக்கு அதிகமான தொந்தரவும் தந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் மனமுடைந்துபோன கிரிஜா, பள்ளி சத்துணவு அறைக்குள்ளேயே தலைமை ஆசிரியை கண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதுவும் 90 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தன்னுடைய தற்கொலை முயற்சியை அவரே செல்போனில் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டு, அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இந்த வீடியோ பதிவில் கிரிஜா கூறியதாவது,

என் பெயர் கிரிஜா.சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கிறேன்.என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க.சின்ன பசங்க முன்னாடிலாம் அசிங்க படுத்துறாங்க.

ரொம்ப அவமானமா இருக்கு..என்னால முடியல..என் கொழந்தய பாத்துக்குங்க கலெக்டரம்மா.

ரொம்ப அவமான படுத்துறாங்க.. எங்கம்மா கிட்டயே கொழந்தய குடுத்திருந்து அவுங்கதான் வளத்தாங்க என்று சொல்லி கொண்டே மாத்திரைகளை வாயில் கொட்டுகிறார் கிரிஜா.

விசாரணை நடத்தி முடித்தால்தான் இது தொடர்பான விவரங்கள் மேலும் தெரியவரும்

ஆண்டிகளை தேர்ந்தெடுத்து குறிவைக்கும் காம கொடூரன்..,

Quick Share

தருமபுரியை அடுத்துள்ள நூலஅள்ளி பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது செல்போனில் தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நெம்பர் என கட் செய்தாலும், மீண்டும் மீண்டும் போன் செய்தும் வாட்சப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

ரவியின் தொல்லையால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் தெரிந்த நண்பர்கள் உதவியுடன் ரவியின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். அவனுடைய செல்போனை பறித்து அதை ஆய்வு செய்து பார்த்த போது, ரவியும் அவனுடைய நண்பர் நரசிம்மனும் என்பவரும் சேர்ந்து பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் ஏராளமாக இருந்தன.

வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் தருமபுரியை சேர்ந்த திருமணமான பெண்களின் புகைப்படம் இருந்ததால், அதிலுள்ள
தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இருவரும் வலை வீசிசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அவர்களுக்கு உடன்படும் பெண்களின் போன் உரையாடல்கள் மற்றும் போட்டோக்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து ஆசைக்கு இணங்க மிரட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவி மற்றும் அவரின் நண்பன் நரசிம்மனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவர்களது தொல்லையால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண், தருமபுரி நகர் காவல் நிலையத்தில் கடந்த 12 ஆம் தேதி புகார் அளித்ததின் பெயரில் காவல் துறை அதிகாரி ஒருவர் ரவியிடம் செல்போனில் விசாரித்துள்ளார். அப்போது, தான் வேலூரை சேர்ந்த விஜய் எனவும், தோழி சிம்ரனுக்கு போன் செய்தேன் என்றும் அப்பாவியை போல கெஞ்சி நடித்து தப்பியதும் தெரியவந்துள்ளது.




You cannot copy content of this Website