திருச்சிராப்பள்ளி

ஓரினச்சேர்க்கை: ரூ.75,000 பணம் பறிப்பு!

Quick Share

மணப்பாறை புத்தாநத்ததை சேர்ந்த முருகேசன் மகன் தியாகராஜன். சம்பவத்தன்று மணப்பாறையை சேர்ந்த அறிவழகன், முகமது ரியாஸ், அருண்குமார், யுவராஜ், லியோ பிளாய்டு, செந்தில்குமார் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து, தியாகராஜனை மது போதையில் மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்துள்ளனர். பின்னர் அதனை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்து தியாகராஜனிடம் இருந்து ரூ.75,000 பணத்தை கூகுள் பே மூலம் அபகரித்துள்ளனர். பணத்தை 6 பேரும் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.

பிளஸ்-1 மாணவியை 14 முறை கத்தியால் குத்திய வாலிபர் ரெயில் முன் பாய்ந்து சாவு!

Quick Share

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆதிக்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் நேற்று பிளஸ்-1 தேர்வு எழுதிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். 

அப்போது, அந்த மாணவி திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மாம்பாலத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவங்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், அந்த வாலிபர் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த வாலிபார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தினார். கத்தியால் கழுத்து உள்பட பல இடங்களில் அந்த நபர் மாணவியை 14 முறை கொடூரமாக குத்தியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால், மாணவியை கத்தியால் குத்திய அந்த வாலிபர் அங்இருந்து தப்பியோடிவிட்டார்.

கத்திக்குத்து தாக்குதலால் படுகாயமடைந்த மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் மாணவியை கத்தியால் குத்தியது பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த கேசவன் (வயது 22) என்பது தெரியவந்தது.

விசாரணையில் கேசவன் கடந்த ஆண்டு இதே சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கேசவன் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நேற்று மீண்டும் அதே மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். 

இதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மாணவியை குத்திவிட்டு கேசவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இதனை தொடர்ந்து தப்பியோடிய கேசவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கீழே பூசரிப்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக கிடந்தது பள்ளிமாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கேசவன் என்பது தெரியவந்தது. காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி மாணவியை கத்தியால் குத்திவிட்டு கேசவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கேசவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சொந்த மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை!!

Quick Share

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த 36 வயது கூலி தொழிலாளிக்கு, ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் அவர் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, துன்புறுத்தியுள்ளார். மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அந்த தொழிலாளி மீது லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

சொந்த தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்!! மகனை வெட்டி கொன்ற தாய்!!

Quick Share

திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா (வயது 58). இவரது மகன் விஜயராகவன் (27). இவர் கடந்த 7 ஆண்டுகளாக மன நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயராகவன் தன்னுடைய வீட்டில் கத்தியால் கழுத்தில் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தாய் புனிதா உறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார் 

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விஜயராகவன் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது வாலிபர் விஜயராகவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை யாரோ தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார்கள் என்று பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் போலீசாருக்கு தெரியவந்தது. 

இது தொடர்பாக உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விஜயராகவனின் தாய் புனிதாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் மகனை கொன்று விட்டு தாய் நாடகமாடியது அம்பலம் ஆனது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மகன் விஜயராகவன் கடந்த சில தினங்களாக தாய் புனிதாவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்று உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த புனிதா அரிவாளால் மகனை வெட்டி கொலை செய்து உள்ளார். தற்போது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகனை கொலை செய்த தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

என்ன கொடும இது… பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா!

Quick Share

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 59). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதுபற்றி யாரிடமாவது கூறினால் அவரையும், அவருடைய பெற்றோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதன்பின் பல முறை அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இந்தநிலையில் 2019-ம் ஆண்டு மாணவி பிளஸ்-1 படித்தபோது, பள்ளியில் கல்தடுக்கி விழுந்ததில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருந்ததும், அவர் கீழே விழுந்ததில் கரு கலைந்ததும் தெரியவந்தது. இதுபற்றி அவருடைய பெற்றோர் விசாரித்தபோது, மாணவி நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜரானார். இந்த வழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னப்பனுக்கு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஆயுள்தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 1 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிடப்பட்டு இருந்தார். மேலும், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

கடன் பிரச்சனை -மாணவனை வெட்டி கொலை செய்து பழி தீர்த்த கொடுமை ..!!

Quick Share

கடன் பிரச்சினையில் பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடன் படித்த மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கிருஷ்ணன் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராமலிங்கம் வெள்ளையம்மாள் என்பவரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை வெள்ளையம்மாள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இதற்கிடையில், கடந்த 21-ந் தேதி அந்த மோட்டார் சைக்கிளை ராமலிங்கத்தின் மகன் கிருஷ்ணன் கேட்க சென்றுள்ளார். அப்போது, வெள்ளையம்மாளுடன் இருந்த பச்சமுத்து என்பவர் அரிவாளால் கிருஷ்ணணை வெட்டி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் கிருஷ்ணன் ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பச்சமுத்துவை கைது செய்தனர். ஆனால், வெள்ளையம்மாள் கைது செய்யப்படவில்லை.

சொத்து தகராறு – அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பி…!

Quick Share

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை சேர்ந்த  மைக்கேல் டைசனின் மனைவி தனலட்சுமி (வயது 24 ). இவரது சகோதரர் தனக்கோடி (22).
தனலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

தற்போது தனது சகோதரன் தனக்கோடி வீட்டில் தனலட்சுமி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகின்றது. 
இதனால் இன்று திடீரென இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தனக்கோடி தான் வைத்திருந்த அரிவாளால் அவரது சகோதரி தனலட்சுமியையும் அவரது குழந்தையையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த வெட்டு காயமடைந்த தனலட்சுமி கூச்சலிடு உள்ளார். இதனை அறிந்த  அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்கை அளித்து வருகின்றனர்.
இத்தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை!கதறும் பெற்றோர் ..

Quick Share

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்தவர் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆசிரியை சர்மிளா (வயது 26). இவரும், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5-ந் தேதி ஒரே நாளில் மாயமாகினர். பள்ளிக்கு சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 6-ந் தேதி மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவனை ஆசிரியை சர்மிளா அழைத்து சென்றது தெரிய வந்தது. தஞ்சை கோவிலில் திருமணம்மேலும், மாணவனுடன் ஆசிரியை எங்கு இருக்கிறார் என்று அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண்காணித்த வண்ணம் இருந்தனர். அப்போது இருவரும் திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகளில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. கடைசியாக இருவரும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் எடமலைப்பட்டிபுதூருக்கு விரைந்து சென்று அங்கு தோழியின் வீட்டில் தங்கியிருந்த சர்மிளா மற்றும் மாணவனை மீட்டு துறையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில், திருவாரூரில் சுற்றித் திரிந்த இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டதும், பின்னர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள சர்மிளாவின் தோழியின் வீட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.போக்சோ சட்டத்தில் கைதுஅதனைத்தொடர்ந்து திருமண வயதை அடையாத பள்ளி மாணவனை அழைத்து சென்று திருமணம் செய்த சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாணவனுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய ஒரு ஆசிரியை, அவரை அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு மேய்த்த பெண்ணை கர்ப்பமாக்கிய 80 வயது முதியவர்!

Quick Share

திருச்சி வடக்கு மணிகண்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(வயது 80). இவர், அப்பகுதியை சேர்ந்த திருமணமாகாத 28 வயது ஆடு மேய்க்கும் பெண்ணை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அப்பெண்ணுக்கு வயிற்றுவலி ஏற்படவே, அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சங்கப்பிள்ளையை கைது செய்தனர்.

அரசுப் பள்ளி ஆசிரியையை இட மாற்றம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் பஸ் மறியல்..!

Quick Share

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த மூவராயன்பாளையம் மேலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 92 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்ததாகவும் சில தினங்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளுக்கு நன்றாகக் கல்வி கற்று கொடுத்து வந்த ஒரு ஆசிரியையை இடமாறுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூடுதலாக ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தியும் கல்வி அமைச்சர் மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. விடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை 10.45 மணிக்கு மூவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட பெண்கள் கடைவீதி அருகே ஒன்று திரண்டனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக சித்தாம்பூர் மற்றும் தண்டலை ஆகிய கிராமங்களுக்குச் சென்ற 2 அரசு பஸ்களை திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

567 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண் கைது …

Quick Share

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அந்த வகையில் திருச்சியில் மதுபான விநியோம் மற்றும் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாட செய்பவர்களுக்கு எதிராக மாவட்ட நிர்வாக தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பெண் ஒருவர் மதுபானத்தை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இபி ரோடு பகுதியை சேர்ந்த கோமதி (வயது35) என்ற பெண்ணின் வீட்டில் இருந்த  567 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

“இறந்துபோன தாயின் சடலத்தை வைத்து 7 நாட்களாக ஜெபம் செய்த மகள்கள்” -திருச்சிய...

Quick Share

தாயாரின் சடலத்தை வைத்து ஒரு வார காலமாக ஜெபம் செய்து வந்த மகள்களின் செயல் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்துள்ளனர். ஊருக்கு சற்று தொலைவில் இவர்களது வீடு இருந்ததால் ஊர் மக்களும் இவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலான நேரம் இவர்கள் ஜெபம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியை பார்க்க இவர்களது உறவினர் ஒருவர் புதுச்சேரியில் இருந்து சொக்கம்பட்டிக்கு வந்து மேரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் இறந்து விட்டதும் அவரது சடலத்தை வீட்டினுள் கிடத்தி வைத்து மகள்கள் இருவரும் தங்களது தாயை உயிர்பிப்பதாகக் கூறி ஜெயம் செய்து வருவதையறிந்து அவர்களிடம் பேசி அடக்கம் செய்ய கூறினார்.

ஆனால் அவரை சகோதரிகள் இருவரும் திட்டி வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து வந்த அவர் ஊர் மக்கள் சிலரிடம் இதுகுறித்த தகவலை கூறிவிட்டு மீண்டும் புதுச்சேரி சென்று விட்டார். இது குறித்து ஊர்மக்கள் மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

நேற்று இரவு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் வீட்டின் கதவுகளை தட்டியபோதும் சகோதரிகள் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தனர். பின்னர் உள்ளே சென்றபோது, மேரியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

அவரது உடலில் பைபிள் ஒன்றை வைத்து ஜெபம் செய்துள்ளதும் தெரிந்தது. ஆனாலும் சகோதரிகள் தங்களது தாயார் உயிரோடு இருப்பதாகவும், அவரது உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை தாசில்தார் சேக்கிழார், 108 ஆம்புலன்ஸ் மருத்துவக்குழுவினரை வரவழைத்து மேரியை பரிசோதனை செய்தபோது அவர் உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவரது உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது சகோதரிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவரும் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து ஏழு நாட்கள் ஆகியிருக்கும் என தெரிவித்தார். ஆனாலும் மேரியின் மகள்கள் இருவரும் மருத்துவர் கூறியதையும் ஏற்க மறுத்து தங்களது தாய் இறக்கவில்லை, அவர் உயிருடன் வருவார் என கூறி மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரும் மேரி எவ்வாறு இறந்தார் என்பதை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இரவு 9 மணிக்கு துவங்கி சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னரே சகோதரிகளிடமிருந்து அவர்களது தாயாரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த தங்களது தாயாரின் உடலை வைத்து ஒரு வார காலமாக ஜெபம் செய்து வந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You cannot copy content of this Website