வேலூர்

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்ததால் இளைஞர் விபரீதமுடிவு – உருக்கமான கடிதம்!

Quick Share

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது 39) என்ஜினியரான இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். 

இவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி இருந்தார். 

இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.26 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்தார். நிதி நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவருக்கு பணம் கிடைக்கவில்லை. 

இதனால் பிரசாத்துக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு பிரசாத் வந்தார். 

இன்று காலை கடன் தொல்லையால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குடியாத்தம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக பிரசாத் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நான் தனியார் நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி பணம் செலுத்தினேன். 

நான் பணம் செலுத்திய ஏஜெண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கடன் நெருக்கடி காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன். 

என் சாவுக்கு தனியார் நிறுவனம் நிதி நிறுவனம் தான் காரணம். இதன் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையால் 9ஆம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து பலி!! கதறும் பெ...

Quick Share

வகுப்பறையில் சத்தமிட்ட மாணவர்களை தலைமை ஆசிரியர் மைதானத்தைச் சுற்றி 4 முறை ஓடுமாறு தண்டனை கொடுத்துள்ளார்

தன்னால் ஓட முடியவில்லை எனக் கூறிய மோகன்ராஜ் கட்டாயப்படுத்தப்பட்டதில் சுருண்டு விழுந்துள்ளார்  

தமிழக மாவட்டம் வேலூரில் மைதானத்தைச் சுற்றி ஓடியதால் 9ஆம் வகுப்பு மாணவன் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மோகன்ராஜ். அணைக்கட்டில் உள்ள அரசு பள்ளியில் மோகன்ராஜ் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இன்று வழக்கம்போல் மாணவர் மோகன்ராஜ் பள்ளிக்கு சென்றுள்ளார். மதிய வேளையில் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால், மாணவர்கள் கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், சத்தமிட்டுக் கொண்டிருந்த மாணவர்களுக்கு தண்டனை அளிக்க, பள்ளி மைதானத்தை 4 முறை சுற்றி ஓடி வருமாறு கூறியுள்ளார். 

மாணவர்களும் மைதானத்தை சுற்றி ஓடிய நிலையில், மோகன்ராஜ் தன்னால் இதற்கு மேல் ஓட முடியாது என்று கூறியுள்ளார். மோகன்ராஜுக்கு மூச்சிறைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தலைமை ஆசிரியர் அதனை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவரின் வார்த்தையை கேட்காத அவர், கண்டிப்பாக 4 முறை சுற்றி வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் தொடர்ந்து ஓடிய மோகன்ராஜ் திடீரென சுருண்டு விழுந்திருக்கிறார்.

இதனைக் கண்டு பதறிப் போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவரை மீது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே மாணவர் உயிரிழந்துள்ளார். அங்கிருந்த மோகன்ராஜின் பெற்றோர் தங்கள் மகனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மாணவரின் உடலைக் கேட்டபோது அவரது பெற்றோர் தர மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிரேத பரிசோதனை நடந்தால் மட்டுமே மாணவரின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளார். மைதானத்தைச் சுற்றி ஓடிய மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ஜரில் இருந்து செல்போனை எடுத்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி!

Quick Share

வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுடைய மகன் கோபிநாத் (வயது 9). செந்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையின் எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவர் அந்த பகுதியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். கோபிநாத் கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து முடித்துள்ளான். 

தற்போது கோடை விடுமுறை என்பதால் பானுமதி, கோபிநாத் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்தனர். நேற்று மாலை பானுமதி செல்போனுக்கு சார்ஜர் போட்டுள்ளார். அப்போது குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி உள்ளான். அந்த சமயம் எதிர்பாராத விதமாக அவன் மீது மின்சாரம் பாய்ந்து அலறியபடி சம்பவ இடத்தில் மயங்கி சரிந்து விழுந்தான். 

கோபிநாத் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பானுமதி மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குடித்துவிட்டு வந்து அடிதடியில் ஈடுபட்ட கணவனை வெட்டிக்கொன்ற மனைவி!

Quick Share

வேலூர் வேலப்பாடியை சேர்ந்தவர் குமரவேல் (60). இவர் லாரி மெக்கானிக் கடையில் பணியாற்றுகிறார். இவரது மனைவி கோமதி(48). இவர் கூட்டுறவு வீடு கட்டும் கடன் சங்கத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மகள் பிரியா (20) இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். 

இந்த நிலையில், குமரவேல் தினசரி குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த சூழலில் நேற்று நள்ளிரவில் சுமார் 1.30 மணி அளவில் குமரவேல் மனைவி கோமதியை கத்தியால் கை கால்களில் வெட்டியுள்ளார். 

இதில் அலறித்துடித்த கோமதி குமரவேலிடமிருந்து கத்தியை பிடுங்கி குமரவேலை கழுத்தின் பின்பக்கமாக வெட்டியுள்ளார். இதில் குமரவேல் ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயமடைந்த கோமதி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காக அவரது மகள் பிரியா மற்றும் வீட்டின் உரிமையாளரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

செல்ஃபி மோகத்தால் நடந்த விபரீதம் …!ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞ...

Quick Share

ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (22) இவர், தனியார் கேபிள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், டிக்-டாக் ரீல் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூர் ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தபால் துறை பெயரில் பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ்- நூதன மோசடி

Quick Share

தபால் துறை பெயரில் பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி மோசடி செய்வதாக வேலூர் அதிகாரி எச்சரித்துள்ளார். இதுகுறித்து வேலூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தபால் துறை அனுப்புவது போன்ற தகவல் வாட்ஸ் அப்பில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது . அதில் தபால் துறை வாயிலாக மானியம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கபடுவதாகவும் மேலும் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதற்காக குறுஞ்செய்தியுடன் லிங்க் அனுப்பி பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது . 

மேலும் அஞ்சலகத்தின் பெயரில் வரும் போலி லிங்கை தொடும் போதும் பிறந்த தேதி , செல்போன் எண் , வங்கி கணக்கு விவரங்கள் கேட்கப்படுகிறது . இதன் மூலம் பொதுமக்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது . எனவே இதுபோன்ற போலி வலைதளங்களில் பொதுமக்கள் யாரும் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் .தபால் துறைக்கும் இதுபோன்று பரப்பப்படும் போலி செய்திகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை . எனவே பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் . இதுபோன்ற போலி தகவல்களை தடை செய்ய தபால் துறை உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மானியம் , பரிசு வழங்குவதாக செல்போனுக்கு மெசேஜ் தபால் துறை பெயரில் வரும் போலி லிங்கில் விவரங்களை பதிவு செய்து ஏமாறாதீர்கள். மானியம், பரிசு வழங்குவதாக கூறி தபால் துறை பெயரில் செல்போனுக்கு வரும் போலி லிங்கில் விவரங்களை பதிவு செய்து ஏமாற வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

கட்டாய தாலி; பாலியல் தொழிலுக்கு வற்புறுத்துவதாக டிவி நடிகை தீக்குளித்து தற்கொலைக்கு முய...

Quick Share

வேலுார் மாவட்டம் கஸ்பா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி என்கிற பைரவி. 37 வயதாகும் இவர் சின்னத்திரை சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ள இவருக்கு விவாகரத்தும் ஆகிவிட்டது. இந்த நிலையில் ராஜாதேசிங்கு என்பவர் நடிகை பரமேஸ்வரியிடம், திரைப்பட இயக்குனர் என சொல்லி அறிமுகம் ஆகியுள்ளார்.
பின்னர் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமான நிலையில் பரமேஸ்வரியிடம் ஆசைவார்த்தை கூறி கோவிலுக்கு கூட்டிச்சென்ற ராஜா தேசிங்கு, அங்கு அவருக்கு கட்டாய தாலி கட்டி மனைவி ஆக்கி உள்ளார். 
இந்த நிலையில்  பணத்திற்காக தன்னை பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துவதாகக் கூறி நடிகை பரமேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நான் அவர் சொல்வது போல் நடந்து கொள்ளவில்லை என்றால் என்னையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். என்னை போல பல பெண்களையும் அவர் ஏமாற்றியுள்ளார். அது போல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் அவர் ஏற்கெனவே போக்சோ சட்டத்தில் கைதானவர் என கூறி உள்ளார்.
இந்த நிலையில், தனியாக வசித்து வந்த பரமேஸ்வரிக்கு ராஜா தேசிங்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டல் விடுத்ததை அடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று புகார் அளிக்க வந்த பரமேஸ்வரி, திடீரென மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் பரமேஸ்வரியை காப்பாற்றினர். துணை நடிகை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துமீறிய பள்ளி மாணவர்கள்… அதிரடி காட்டிய வேலூர் ஆட்சியர்!

Quick Share

வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 12-ஆம் வகுப்பு சி பிரிவில் படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் மேசைகளை உடைக்கும் காட்சி இணையத்தில் வைரலானது.

சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்பள்ளியில் பொது சொத்துக்களை சேதப்படுத்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நேற்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு சம்பவத்திற்கு காரணமான 10 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். மேலும், பள்ளியில் ஒழுங்கீனமாக உள்ள மாணவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாணவர்கள் இனி பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை விதித்திக்கப்பட்டுள்ளது. அதனை மீறி பள்ளிக்கு செல்போன் எடுத்து வரும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

29 வயது வாலிபருடன்பள்ளி மாணவிக்கு திருமண ஏற்பாடு : கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தம்!

Quick Share

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பத்தில் பள்ளி மாணவிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சைல்டுலைன் ஊழியர்கள், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவைமைய ஊழியர்கள் உள்ளிட்டோர் அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த வடுகந்தாங்கலில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொட்டாளத்தை சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கொட்டாளத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. 

அதையடுத்து பள்ளி மாணவியின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 12ஆம் வகுப்பு மாணவியை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜர்படுத்தினர். 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோரிடம் எழுத்துப்பூர்வ ஆவணத்தை பெற்றுக் கொண்டனர்.

மாணவியை பலாத்காரம் செய்த மாணவர்- தாயையும் உல்லாசத்துக்கு அழைத்த வக்கிரம்!

Quick Share

மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலூர் விருஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து, அரசு பஸ் டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 20). இவன் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் இறுதியாண்டு படித்து வந்தார்.

இவருக்கும் திருச்சி நவல்பட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு மலர்ந்தது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 5-ந்தேதி கோகுல் அந்த மாணவியிடம், தனது பெற்றோர் தனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கின்றனர். ஆகவே உன்னை பார்ப்பதற்காக திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் அறையில் எடுத்து தங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை நம்பிய மாணவியும் பெற்றோருக்கு தெரியாமல் கோகுல் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு சென்றார்.

பின்னர் மாணவியை பார்த்த மறுகணம் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து கோகுல் அவரது கழுத்தில் கட்டினார்.

அதை தொடர்ந்து மாணவியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் மாணவிக்கு தெரியாமல் செல்போன் மூலம் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். அதன் பின்னர் இருவரும் தங்களின் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். காதலன் தாலி கட்டிய விவகாரத்தை பெற்றோரிடம் மறைத்து மாணவி வழக்கம்போல் பள்ளி சென்று வந்தார்.

இதையடுத்து அடிக்கடி கோகுல் திருச்சி வந்து ஓட்டலுக்கு வரவழைத்து அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதனையும் அவருக்கு தெரியாமல் வீடியோ மற்றும் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு அரசல் புரசலாக தெரிந்துள்ளது. ஒருகட்டத்தில் மாணவியின் தாயாரிடமும் கோகுல் பேசி வந்தார்.

இந்த நிலையில் கோகுல் தனது அவசர தேவைக்கு ரூ.10 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. உடனே அனுப்பி வையுங்கள் என மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்தார்.

உடனே உனது மகள் என்னுடன் தனிமையில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். மேலும் எல்லை மீறிய கோகுல் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க மாணவியின் தாயாரையும் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர் நேராக நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

பின்னர் வழக்கு திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் கோகுலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

செல்போன் பயன்பாட்டால் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடும் மாணவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை தொலைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது

இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு: பிளஸ்-1 மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டல்..!!அதிர்ச...

Quick Share

வேலூர் மாவட்டம், விருஞ்சிபுரம் கிராமம் தென்னை மரத்தெருவை சோ்ந்தவர் மார்கபந்து. இவரது மகன் கோகுல். இவருக்கும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவிக்கும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்துள்ளனா். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு காதல் அரும்பி இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி கோகுல் செல்போன் மூலம், அந்த மாணவியை தொடர்பு கொண்டு தனக்கு வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று கூறி, அந்த மாணவியை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றுக்கு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியும் உடனடியாக புறப்பட்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு, பாலியல் வன்புணா்வில் கோகுல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். மாணவியை நிர்வாணமாகவும் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறி அழுதார். இதனால் உடனடியாக கோகுலை தொடர்பு கொண்டு மாணவியின் தாய் கண்டித்துள்ளார். அப்போது கோகுல், இணையதளத்தில் மாணவியின் ஆபாச படங்களை பகிராமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து அந்த மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் கோகுல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

எரிந்த நிலையில் ஆண் சடலம்: கொலையா…? தற்கொலையா..?

Quick Share

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வசந்தி இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.  மூத்த மகன் அசோக் (வயது 32)  பல இடங்களில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

கடைசியாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இவருக்கும் ஆம்பூர் அடுத்த வலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குழந்தைகள் இல்லை.
அசோக்  ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் எப்போதும் மூழ்கி இருப்பார் என்று கூறப்படுகின்றது.  
மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ளார்.  இதனால் மனைவி கோபித்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று உள்ளார்.
இந்நிலையில் அசோக் நேற்று மனைவியை அழைத்துவர அவர்கள் வீட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர்.  நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
வீட்டின் மாடியில் தனியாக வசித்து வரும் அசோக்கிற்கு அவர்கள் பெற்றோர்கள் நேற்று இரவு உணவு கொடுத்து உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் அசோக்கின் வீட்டிற்கு பின்புறம் எரியும் வாடை வந்துள்ளது.  அக்கம்பக்கத்தினர் போய் பார்த்தபோது அசோக் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.  இடுப்புக்கு கீழே முழுவதும் எரிந்து கால்கள் எரிந்து துண்டாகி உள்ளன. 
இதுகுறித்து  அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு சம்பவம் இடத்துக்கு விரைந்துவந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். 
பின்னர், கருகிய நிலையில் இருந்த அசோக்கின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் அசோக் ஆன்லைன் ரம்மியில் பல ஆயிரம் இழதந்தாலும், மனைவி வாழாமல் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாலும் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து எரித்து விட்டார்கள் என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 




You cannot copy content of this Website