CRIME

கார் மோதி முதியவர் பலி ! மோதியது நடிகர் சிம்புவின் கார் ?

Quick Share

சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் கடந்த 18-ந்தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 70) என்பது தெரியவந்தது.

மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மனைவியின் தலையை வெட்டி கத்தியும் ரத்தமுமாக வீதியில் சிரித்துக் கொண்டே நடந்த கணவர் …

Quick Share

நாட்டை விட்டு தப்பியோடிய மனைவியின் தலையை வெட்டி, ஒரு கையில் தலையும், மறு கையில் இரத்தக்கரை படிந்த கத்தியுமாக ஈரான் நாட்டவர் ஒருவர் வலம் வந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானிலுள்ள Ahvaz என்ற நகரில் வாழ்ந்துவந்த Mona Heydari(17) என்ற இளம்பெண், தன் கணவருக்குத் தெரியாமல் துருக்கிக்கு தப்பி ஓடியுள்ளார்.

அவர் தங்கள் குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக கருதிய அந்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் சென்று Monaவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்துள்ளனர்.

பொலிசார் Monaவின் கணவர் முதலான மூன்று ஆண்களை கைது செய்துள்ளனர்.

ஈரானில் இதுபோன்ற கௌரவக் கொலைகள் உறவினர்களாலேயே செய்யப்படுவதால், அவர்கள் மீது யாரும் புகாரளிப்பதில்லை.

எனவே இந்த குற்றங்கள் அதிகம் வெளி உலகுக்குத் தெரியாமலே இருந்து விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் ..கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொட...

Quick Share

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய நபரை கைது செய்து மத்தூர் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி என்பவரது மனைவி பார்வதி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார்வதியின் கணவர் சக்தி உயிரிழந்த நிலையில் 
இவருடைய இரண்டு மகன்களும் வட மாநிலத்தில் வேலை செய்து வருகின்றனர். பார்வதி சொந்த ஊரில் தினக்கூலிக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன்என்பவர் ஆசைக்கு இணங்க அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்த அந்த பெண் மீது ஆத்திரமடைந்த முருகன்தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பார்வதியை சரமாரியாக பல இடங்களில் குத்தியுள்ளார். பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வெள்ளத்தில் கிடந்த பெண்ணை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவலின் பேரில் விரைந்து வந்த மத்தூர் போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்வதியை மீட்டு மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்தவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை வெட்டிய சம்பவம் கிராம பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகனை கொலை செய்து தாய் தந்தை தூக்கிலிட்டு தற்கொலை ..திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கொடூர...

Quick Share

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மகனின் உடல்நல குறைபாட்டை குணப்படுத்த முடியாததால் மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகேயுள்ள கோவில்பதாகை பகுதியை சேர்ந்த தம்பதி முகமது சலீம், சோபியா இவர்களின் மகன் பிறவியில் இருந்து வாய் பேச முடியாமலும் காது கேட்காமலும் இருந்து உள்ளார்.

இதனை குணப்படுத்த முடியவில்லை எனக் கூறி தாய் தந்தை இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், முகமது சலீம் அவரது மகனை பாலித்தீன் கவர் மூலம் முகத்தை மூடி கொலை செய்துள்ளார். இதை தொடர்ந்து  அவரும், அவரது மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு  பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரடி குழிக்குள் குழந்தையை தூக்கி எறிந்து ..தாய் கொலை முயற்சி …

Quick Share

உஸ்பெகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காவில் 3 வயது மகளை கரடி குழிக்குள் தூக்கி எறியப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இருக்கும் மிருகக்காட்சிசாலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிபவான காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், கரடியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் தனது 3 வயதே ஆன பெண் குழந்தையை கரடி இருக்கும் வேலிக்குள் சுமார் 16 அடி கீழே உள்ள குழியில் வீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது.

அப்போது, கீழே விழுந்த குழந்தையை நோக்கி வேகமாக ஓடிய பெரிய கரடி, குழந்தையை மோப்பம் பிடித்துள்ளது.

அதற்குள் அங்கு வேடிக்கை பார்க்கவந்த மக்கள் கத்தி கூச்சலிட, மிருகக்காட்சிசாலைக்காரர்கள் விரைந்து சென்று கரடியை திசை திருப்பி கூண்டு இருக்கும் பகுதிக்குள் விரட்டியுள்ளனர். பின்னர் குழந்தையை காப்பாற்றி தூக்கிச்சென்றனர்.

குழந்தைக்கு கரடியினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனால், கீழே வீசப்பட்டதன் விளைவாக மூளையதிர்ச்சி ஏற்பட்டதாகவும் மற்றும் ஓரிரு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளார். அவரது நோக்கம் என்ன என்பது முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை என்று மிருகக்காட்சிசாலையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் ,2 மகள்களுடன் தாய் தீக்குளித்து தற்கொலை !

Quick Share

திருவனந்தபுரம், பிப். 2- கேரள மாநிலம் ஆலப்புழை அருகே உள்ள கிழக்கே புரி பகுதியை சேர்ந்தவர் சசிதரன். இவருடைய மனைவி பிரசன்னா (வயது 54). இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என 2 மகள் இருந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சசிதரனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் கணவரின் சிகிச்சைக்கும்,குடும்பத்தை நடத்துவதற்கும் பிரசன்னா கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்தப் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் பிரசன்னாவால் கடனை திருப்பி அடைக்க முடியவில்லை.
மேலும் கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதன்காரணமாக பிரசன்னா மிகுந்த மனவேதனை அடைந்தார்.இந்தநிலையில் நேற்று காலை பிரசன்னா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் தன்னுடைய உடலில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெயை ஊற்றியதோடு மகள்களான மீனு, சசிகலா மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதனால் அவர்கள் 3 பேரும் உடல் கருகிய நிலையில் அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து அவர்கள் 3 பேரையும் மீட்டனர். எனினும் அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் ஆலப்புழை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மற்றும் மகள்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலப்புைழ அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடன் தொல்லை காரணமாக 3 பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தண்ணீர் தொட்டியில் பிணமாக மிதந்த 2குழந்தைகள் ..தாய் விபரீத முடிவு !

Quick Share

தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெபஷைன் (வயது 35). கேரளாவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜி (27). இவர்களுக்கு 2 வயதான பிரியா மற்றும் பெயரிடப்படாத 6 மாத பெண் குழந்தையும் இருந்தனர். ஜெபஷைன் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், அவரது மனைவி விஜியுடன், ஜெபஷைனின் தாயார் ராஜம்மாள் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று ராஜம்மாள் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தனது பேத்திகள் 2 பேரும் பிணமாக மிதந்ததை பார்த்து பதறிதுடித்தார். உடனே அவர் கதறியபடியே வீட்டுக்குள் ஓடிச்சென்றார்.

அங்கு விஜி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் அவர் சத்தம் போட்டு கதறி அழுதார்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்து விட்டு, விஜி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்ய வேறு காரணம் எதுவும் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

வயலில் தனியாக வேலை செய்த மூதாட்டி பலாத்காரம் ,வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு ….

Quick Share

பாகூர்பாகூர் அருகே வயலில் தனியாக வேலை செய்த 63 வயது மூதாட்டியை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தடியால் தாக்குதல்; புதுவை மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி  மணிலா விவசாயம் செய்ய நிலத்திற்குச் சென்றார். வயலில் தனியாக களை எடுத்துக்கொண்டிந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு வந்து, மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார்.

சற்று தயங்கிய மூதாட்டி, அந்த வாலிபர் குறித்து விசாரித்தபடி தான் வைத்திருந்த செல்போனை கொடுத்தார். அதை வாங்கி பேசியவாறு, திடீரென அங்கிருந்து ஒரு தடியால் மூதாட்டியை வாலிபர் தாக்கினார். இதில் கழுத்தில் படுகாயமடைந்த மூதாட்டி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை, அங்குள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

v

ஆஸ்பத்திரியில் அனுமதி; இந்தநிலையில் வயலுக்குச் சென்ற மூதாட்டி நீண்டநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லையே என்று அவரது பேரன் வயலுக்கு சென்று பார்த்தார். அப்போது அலங்கோலமாக மூதாட்டி கிடந்ததையும், அதன் அருகில் வாலிபர் ஒருவர் நிற்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மூதாட்டியின் பேரன் விரட்டிச்சென்றார். ஆனால் மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மூதாட்டியை மீட்டு பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், தீபிகா நேரில் சென்று விசாரணை நடத்தினர். பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.gr

 

‘தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்த மனைவி’…மயங்கியவுடன் பெட்ரோல் ஊற்றி...

Quick Share

காதல் மனைவியை பாலில் தூக்க மாத்திரை கலந்து மயங்கிய பின்னர் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி -திவ்யா தம்பதி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இத்தம்பதிக்கு வர்ஷினி என்கிற பெண் குழந்தை இருக்கிறது.

கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவனை பிரிந்த திவ்யா தாயார் வீட்டில் சென்று வசித்து வந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் மாமியார் வீட்டிற்கு சென்ற சத்தியமூர்த்தி கோவிலுக்கு போகலாம் என்று மனைவியை அழைத்து இருக்கிறார். கோவிலுக்கு தானே கூப்பிடுகிறார் என்று திவ்யாவும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது திவ்யாவுக்கு பால் வாங்கி கொடுத்திருக்கிறார் . அந்த பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததை அறியாத திவ்யா அதை குடித்து விட்டார்.

பால் குடித்ததும் மயங்கிய திவ்யாவை திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே தூக்கி சென்றிருக்கிறார். அங்கே அவர் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார்.

மயக்கத்தில் இருந்தாலும் பெட்ரோல் ஊற்றி உடல் எரிந்தபோது அலறிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியிருக்கிறார் திவ்யா. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யா அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் .

இதற்கிடையில் மனைவி தீ பற்றி எரிந்ததும் தப்பி ஓடிய சத்தியமூர்த்தி, தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. அதனால் இனி எங்களால் வாழ முடியாது. அதனால் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என்னை தேடாதீர்கள். என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று வாட்ஸ்அப் மூலமாக உறவினர்களுக்கு வீடியோ அனுப்பி விட்டு தலைமறைவாகி விட்டார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தன் காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவனின் இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING ‘கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை’ …தாம்பரத்தில் பரபரப...

Quick Share

தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து படுகொலை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயிலில் சுவேதா என்ற கல்லூரி மாணவியை பட்டப்பகலில் கத்தியால் குத்திவிட்டு இளைஞர் ராமு தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி சுவேதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சுவேதாவை காதலனே கத்தியால் குழுந்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி.! தகாத உறவில் தாய்..”அதிர்ச்சியடைந்த மகன்”..ஓடஓட விரட்டி.. ”...

Quick Share

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மணலூர் அருகே உள்ள லால்புரத்தைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் – சங்கீதா தம்பதி. பாலமுருகன், கவரிங் செயின் செய்யும் தொழில் செய்து வருகிறார். சங்கீதா மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர்களின் 15 வயது மகன், அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கீதா தனது வீட்டில் வேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது

அதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன், தாயிடம் சண்டை போட்டுள்ளார். கோபமடைந்த சங்கீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.தகவல் அறிந்த 15 வயது மகன், தாயை தாக்கியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க சங்கீதா ஓடியுள்ளார்.ஓட ஓட விரட்டிய மகன், கத்தியால் அவரது வயிற்றில் குத்தியதில், குடல் சரிந்து அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். பின்னர் அருகில் உள்ள சிதம்பரம் தாலுகா காவல்நிலையத்திற்கு சென்று தாயைக் கொன்றதாக சிறுவன் சரணடைந்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சங்கீதாவின் சடலத்தை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி.! 10-ம் வகுப்பு மாணவி..”விஷம் குடித்து தற்கொலை”..காதல் மோகம்..!!

Quick Share

இளைஞன் மீதான தனது காதலை நிரூபிக்க விஷம் குடித்த மைனர் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரியா. பத்தாம் வகுப்பு மாணவியான இவர் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.இந்த நிலையில் அந்த இளைஞர் ரியாவிடம், நீ உண்மையிலேயே என்னை காதலிக்கிறாயா? உன்னுடைய உண்மை காதலை நிரூபிக்க விஷம் குடிப்பாயா என கேட்டுள்ளார்.

இதையடுத்து பக்குவம் அடையாத சிறுமியான ரியா காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் விஷம் குடித்திருக்கிறார்.பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




You cannot copy content of this Website