அரியலூர்

வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது&...

Quick Share

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 30). இவர், 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற சாந்தா, அந்த சிறுமியை, கீழப்பழூவூரை சேர்ந்த சந்திரா(30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்திரா, அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதற்கு சாந்தா உடந்தையாக இருந்ததும் தெரியவந்து உள்ளது. 
இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தஞ்சை கீழவாசலை சேர்ந்த வினோத் (29), வி.கைகாட்டி சேர்ந்த பிரேம் (29), நாகமங்கலத்தை சேர்ந்த பாலு என்ற பாலச்சந்தர் (27), செந்துறை சேர்ந்த தனவேல் (58). 
மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டதாக கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன்(62), மற்றும் வெற்றிக்கண்ணன்(37), திருமானூரை சேர்ந்த தெய்வீகன்(49) ஆகிய 9 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தீவிரமா தேடி வருகின்றனர். 
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.




You cannot copy content of this Website